search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பு"

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaturalDisasters
    நியூயார்க்:

    பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி (79.5 பில்லியன் டாலர்) இழப்பு, பிரிட்டோ ரிகோவுக்கு 71.7 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பீடும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி (57.9 பில்லியன் டாலர்), இத்தாலி (56.6 பில்லியன் டாலர்) பிரான்ஸ் (48.3 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #PetrolDieselPriceHike #CentralGovt
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அவற்றை குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    குறிப்பாக பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி எனும் வாட் வரியை மாநில அரசுகளும் கணிசமாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    இதையடுத்து பெட்ரோல்- டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வரிகள் விதிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு மிக குறைந்த விலையில்தான் பெட்ரோல்-டீசலை வினியோகம் செய்கின்றன.

    இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.39.21க்குதான் வழங்குகிறது. ஆனால் அந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலையை 2 மடங்கு அதிகரிக்க செய்து விடுகின்றன.

    மத்திய அரசு விதிக்கும் கலால் வரிப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.19.48 கிடைக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33ஐ மத்திய அரசு வருவாயாக பெறுகிறது. இந்த வரிக்கு பிறகு மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப வாட் வரியை விதிக்கின்றன.

    இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பையில் 33.12 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மிக குறைவாக 26 சதவீதம்தான் விதிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பெட்ரோல்- டீசல் மீது 32.16 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக கணக்கிட்டால் மாநில அரசுகள் சுமார் 30 சதவீதம் வாட் வரியை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கின்றன.

    இதனால்தான் கடந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருந்தது.

    பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் மிக எளிதாக வருவாய் வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றை இழக்க மனமில்லாமல் உள்ளன. மாநில அரசுகளை பொறுத்த வரை ராஜஸ்தான், ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தங்களது வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று வாட் வரியை குறைத்துள்ளன.

    ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை கலால் வரியை குறைக்க இயலாது என்று திட்டவட்டமாக 2 தடவை அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நிதி பற்றாக்குறையை குறைக்கும் இலக்கை நம்மால் எட்ட இயலாது.


    தற்போதைய பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணை உற்பத்தி குறைந்து போனதே முக்கிய காரணமாகும். எண்ணை வளம் மிக்க சில நாடுகள் தங்களது எண்ணை உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. அதன் தாக்கம்தான் தற்போது இந்தியாவில் எதிரொலித்துள்ளது.

    அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்து விட்டது. இந்த பிரச்சனைகள் இன்னும் சில தினங்களில் தானாக சரியாகி விடும்.

    இதற்காக கலால் வரியை குறைத்தால் அது மத்திய அரசின் நிர்வாக பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும்.

    அப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் போனால் அதுவும் மக்களைதான் பாதிக்கும். எனவேதான் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

    பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும். இது வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தபோது இத்தகைய முடிவைதான் அதிகாரிகள் எடுத்தோம். தற்போதும் அதே முடிவை தான் கையாண்டு உள்ளோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். #PetrolDieselPriceHike #CentralGovt
    மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    சென்னை:

    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகத்துக்கு சப்பாத்தி தயாரிக்கும் 9 நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை முழுமையாக செயல்படவில்லை. ஒப்பந்ததாரர் அதை சரி செய்யவில்லை. இதனால் ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


    சென்னை மாதவரத்தில் அனுமதி பெறாத தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி தகர்ப்பு கட்டணம் வசூலிக்கவில்லை. கட்டிடம் இடிக்கப்பட்டன. காலி மனை வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.

    சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    புதிய பஸ்களை தொடங்கி வைக்க ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 4357 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் 2020 புதிய பஸ்கள் குறித்த காலத்துக்குள் இயக்கப்படவில்லை.

    * முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் சுமார் 3 மாதங்கள் அந்த பஸ்கள் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வட்டியாக ரூ.10.29 கோடி வழங்கப்பட்டது.

    * புதிய பஸ்கள் தாமதம் காரணமாக எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பஸ்களை குறித்த காலத்துக்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னையில் உள்ள அரசு நிலங்களில் 23 சதவீத நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 சதவீதம் சென்னை குடிநீர் ஆதாரமாகத் திகழும் நீர்நிலைப் பகுதிகளில் இருக்கின்றன.

    * தமிழ்நாடு முழுவதும் 5.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதில் 65 ஆயிரத்து 411 ஏக்கர் இடங்களில் நிரந்தர குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்ய நடத்தப்படும் குழு கூட்டம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை.

    * சேலம் மாவட்டத்தில் 15.09 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 14.16 சதவீதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12.65 சதவீதம், திண்டுக்கல் மாவட்டத்தில் 11.85 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 11.14 சதவீதம், தர்மபுரி மாவட்டத்தில் 10.06 சதவீதம் அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட 5096 டன் கோதுமை அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது விதியை மீறியதாகும். இதனால் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு கோதுமை வழங்க இயலவில்லை.


    * சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுக்க 15 எந்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 13 எந்திரங்கள் பழுதாகி பயன்படுத்தப்படாமல் உள்ளன. 3 எந்திரங்கள் மூலமாகத்தான் சப்பாத்தி தயாரித்து வழங்கப்படுகிறது.

    * சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் சரியாக இல்லாததே வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

    * அனுமதி இல்லாத கட்டுமானங்கள், தனியார் நிலத்தை பாதுகாத்தது, அடையாறு ஆற்றுக்குள் வரைமுறை இல்லாமல் நீர் விடப்பட்டதும் வெள்ளம் ஏற்பட காரணமாகும். எனவே சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும்.

    * கூவம் ஆற்றை சீரமைக்க 2011-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்புதல் 2014-ல்தான் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை முடிக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டப்பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் 2018-ம் ஆண்டுக்குள் இதை முடிக்க இயலாத நிலை உள்ளது.

    * மின் பகிர்மான கழகம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவைக்கு அதிகமாக மருந்து, மாத்திரைகள் வாங்கப்பட்டதால் பல மருந்துகள் காலாவதியாகி விட்டன. இதனால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மூல உயிரணு ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2.70 கோடி தேவை இல்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான மானியம் ரூ.5.7 கோடி பெறப்படவில்லை.

    * தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் மூலம் 19,021 வாகனங்களில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7906 லாரிகள் போலி பதிவு எண் கொண்டவை என்று தெரிய வந்துள்ளன. 16,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் எடுத்த வகையில் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.10 கோடி கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

    * வெளிநாடுகளில் இருந்து கடந்த 3½ ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.1560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் சதுப்பு நில பாதுகாப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    * மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் நூலக வரியாக 6 சதவீதம் வரி வசூலிக்கிறது. அப்படி வசூலித்த 19 ஆயிரம் கோடி ரூபாய் நூலகத்துறைக்கு வழங்கப்படவில்லை.

    * கம்பம், நாகர்கோவில், வெள்ளக்கோவில் ஆகிய 3 நகராட்சிகளிலும் திட்ட பணிகள் முடிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால் ரூ.37.43 கோடி மானிய உதவித் தொகை பறிபோய் உள்ளது.

    * பதிவுத்துறையில் வழி காட்டி மதிப்பு குளறுபடி காரணமாக அரசுக்கு ரூ.13.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கல்லூரிகளுக்கு தளவாட பொருட்கள் வாங்கியதில் ரூ.14 கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    * சென்னைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 23 கோடி ரூபாயை வீணாக செலவு செய்துள்ளது.

    * தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. செய்த தாமதத்தால் ரூ.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * வணிக வரித்துறைக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * மொத்தத்தில் தமிழக அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa
    ×