search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி"

    ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் ராஜீவ்காந்தி புகழை மறைக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    அதற்கு அருகாமையில் அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது.

    அங்கே இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை படிப்பை தங்கி படித்து வந்தனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை.

    இளைஞர்களுக்கு பயிற்சி தருகிற தேசிய அமைப்பாக அது செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் பயிலுகிற பல்வேறு மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை கேள்வியுற்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் ரூபி ஆர். மனோகரனை அங்கே அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டேன். அவர் பார்வையிட்டு கொடுத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த வகையில் ராஜீவ் காந்தியின் பெயரையும், புகைப்படத்தையும் மறைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது.

    இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜீவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீப காலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு இன்று காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.


    அதேபோல, கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப்படம் அகற்றப்பட்டிருக்கிறது. வளாகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படம் அகற்றப்பட்டு ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளோ, நினைவுநாளோ மற்றுமுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோ அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் புகழை மறைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நிலவுகிற சீர்கேடுகளை களைவதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    ராஜீவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளை களைகிற வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.#RajivGandhi
    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.

    பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் நல்ல பாடத்தை தருவார்கள். கண்டிப்பாக மாற்றம் வரும்.

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடைப்பெற உள்ளது. இந்த போராட்டம் வெற்றிகரமாக அமையும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    அவரிடம், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேருடைய விடுதலைக்கான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை? ஆனால், அதிக நாட்கள் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால் தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை” என்று கூறினார். #RajivGandhi
    ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேர் மீதான விசாரணையை முடித்து வைக்கக்கோரும் மனுவை செப்டம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #RajivGandhi #Assassination
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

    இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

    அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

    கடந்த ஏப்ரல் 16-ந்தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இவர்கள் 7 பேரும் ஏற்கனவே தமிழக கவர்னருக்கு கருணை மனு ஒன்றை தாக்கல் செய்து இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அங்கு முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்பதால் இங்குள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 7 பேரின் இடைக்கால மனுவை வரும் செப்டம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.  #RajivGandhi #Assassination
    தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    புதுடெல்லி:

    மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களிடமும் அன்பாக பழகியதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேறு கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த உதவிகளை வாஜ்பாய் ஒரு போதும் மறந்தது இல்லை.

    அவரது சுயசரிதை புத்தகமான “த அன்டோடு வாஜ்பாய்” என்ற புத்தகத்தில் அவர் தனக்கு உதவி செய்த மறக்க முடியாத தலைவர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்திக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.

    நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார். ராஜீவ்காந்தியை புகழ்ந்து அந்த புத்தகத்தில் வாஜ்பாய் கூறி இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. என்னை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக பாதிப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

    வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால்தான் அந்த சிறுநீரக பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    ஒருநாள் காலை பிரதமர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ராஜீவ்காந்தி பேசினார். அவர் என்னிடம் இந்தியா சார்பில் நியூயார்க் சென்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். என்னுடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் குழுவும் வர உள்ளது. நான் அந்த குழுவில் உங்களது பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

    நீங்கள் என்னுடன் நியூயார்க் வாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து உங்களது சிறுநீரக பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றார்.


    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழுவில் இடம் பெற்று நானும் சென்றேன். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதும் ராஜீவ்காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

    “நீங்கள் நன்றாக முழுமையாக குணம் அடைந்த பிறகுதான் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும். நல்ல முறையில் சிகிச்சை பெற்று வாருங்கள்” என்றார். அவர் உதவியால் நான் பெற்ற சிகிச்சைதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

    இவ்வாறு வாஜ்பாய் மறக்காமல் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்து எழுதி உள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை முடிவடையாமல் உள்ளது. #RajivGandhi #DeathAnniversary
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். எனினும் இந்த சதியின் பின்னணி குறித்து எந்த தகவலும் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை.

    இதற்கிடையே, ராஜீவ்காந்தி படுகொலையின் சதி குறித்து சி.பி.ஐ. தலைமையில் 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த முகமை அளிக்கும் தகவல்கள் சுப்ரீம் கோர்ட்டிடம் பகிர்ந்தும் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை நீண்டுகொண்டே போவதால் விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விசாரணையின்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்விடம், பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை கூறுகையில், ‘இது தொடர்பாக இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. தற்போது கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிக்சன் என்கிற சுரென் என்பவரிடமும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது’ என்று தெரிவித்தது.

    அதற்கு நீதிபதிகள் அமர்வு வெளிநாட்டவர்களிடம் விசாரணை நடத்த இந்திய தூதரகங்கள் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபற்றி 4 வாரங்களுக்குள் விசாரணையின் தகுதிநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

    ஆனாலும் ராஜீவ்காந்தி படுகொலையின் சதி பின்னணி குறித்த விசாரணை மந்த கதியில்தான் நடந்து வருகிறது. 27 ஆண்டுகளாகியும் இது தொடர்பான விசாரணை முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்வது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    நேற்று ராஜீவ்காந்தியின் 27-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RajivGandhi #DeathAnniversary

    ×