search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஆர்சிடிசி"

    நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ரெயில்வே பயணிகளுக்கு சிறப்பு உணவை அறிமுகம் செய்துள்ளது. #IRCTC #Navaratri
    மும்பை:

    இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு உணவுகளை வழங்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் சிறப்பு உணவை, விராட் கா கானா என்ற பெயரில் ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களிலும் இந்த சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த சிறப்பு உணவு நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஆகிய ரெயில் நிலையங்களில் கிடைக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IRCTC #Navaratri
    ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. #IRCTC #Insurance
    புதுடெல்லி:

    டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைப்போல ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.



    இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

    இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

    முன்னதாக டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.  #IRCTC #Insurance 
    ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது. #IRCTC
    சென்னை:

    ரெயில் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் ரெயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு பஸ் பயணத்தை நாட வேண்டியதிருக்கிறது.

    தற்போது ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது.

    காத்திருப்போர் பட்டிய லில் உள்ள ரெயில் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? அல்லது ஆர்.ஏ.சி. நிலை வருமா? அல்லது டிக்கெட் கிடைக்காதா? என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லும் வசதி இந்த இணைய தளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதே போல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் புறப்படும் ரெயிலில் பயணம் செய்ய உறுதி செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் 24 மணி நேரத்திற்குள் விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்ய விருப்பமா? என்ற கேள்வி இணையதளத்தில் கேட்கப்படும். அதற்கு பதில் கொடுப்பதை பொறுத்து விசே‌ஷ ரெயில் இயக்கப்பட்டால் அதில் டிக்கெட் உறுதியாகிறது.



    டெல்லி-சென்னை இடையே 3-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இருந்தால் ஒரு ரெயிலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் இன்னொரு ரெயிலில் அதை உறுதி செய்து கொடுத்து விடுகிறார்கள்.

    அல்லது 3 ரெயில்களிலுமே காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்தால் ஒரு விசே‌ஷ ரெயிலை விட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அந்த பயணிகளை அந்த விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்யும் முறையை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் ரெயில் பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    பயணிகளின் எண்ணிக்கையை கணித்து ரெயில்வேயின் வணிக பிரிவு புதிய ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார். #IRCTC
    ×