search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தோடு"

    சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் சித்ரா(வயது32).

    சித்ராவை சேலம் மாவட்ட, மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.

    சித்ரா அவ்வபோது சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இதே போன்று நேற்றும் சித்ரா சேலத்தில் இருந்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு பஸ்சில் வந்துள்ளார்.

    பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சித்தோடு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் மணக்காடு பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது.

    பஸ்சில் இருந்து இறங்கிய சித்ரா தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது காமராஜர் தெரு அருகே சென்ற போது சித்ரா பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களில் பின்னால் உட்கார்ந்து வந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    சித்ரா திருடன்...திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தாங்கள் வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து சித்ரா சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோட்டார் சைக்கிளில் கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.

    இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சித்தோடு அருகே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியதால் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி லதா. இவரது மகன்கள் ஜெயராஜ்(வயது27). தொழிலாளி. பிரபாகரன்(23). லாரன்சும், லதாவும் இறந்து விட்டனர்.

    ஜெயராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது குடும்பத்தினர் ஜெயராஜிடம் கூறினார்களாம்.

    இதனால் ஜெயராஜ் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தார்.

    சிகிச்சைக்காக ஜெயராஜை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜை கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×