search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • பெருமாள் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • மோசஸ் என்பவர் பெருமாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது70). இவர் சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பெருமாள் தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அவர் தூத்துக்குடி-விளாத்திகுளம் சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். காரில் வந்த விளாத்திகுளம் வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த மோசஸ் (22) என்பவர் உடனடியாக பெருமாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தொழில் முனைவோர் மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழில் முனைவோரை உருவாக்கு வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும்.

    மானியம் கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமாகவும், தீவன உற்பத்தியை பெருக்கவும், சேமிப்பு பிரிவு அமைக்கவும் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவோ அல்லது சுயநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.
    • சிறப்பு பூஜையில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்றது.

    தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இக்விகோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியுமான சக்திவேல், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், ஜோதிசங்கர், கணேசன், மாரிமுத்து, சிவன் கோவில் பிரதோசகமிட்டி நிர்வாகி ஆறுமுகம் உள்பட கோவில் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அமைச்சர் கீதாஜீவன் சென்னை சென்றார். அங்கு அமைச்சர் கீதாஜீவன், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், கட்சி ரீதியான நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    • ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தசரா பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பக்தர்களுக்கு 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி தலைமை தாங்கினார். நிறுவன பொதுமேலாளர்கள் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவர் சுந்தர்ராஜ், உதவி மேலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள் தியாகராஜன், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன், ஜிந்தா, சுடலை, அருண்ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தூர்வாரும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்தி மரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் விவசாய வாய்க்களை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில்,ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் அம்ரிதா கவுரி, மக்கள் தொடர்பு அலுவலர் குணசேகர், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜா, கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதன்மூலம் மழைக்காலத்தில் விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது குறையும், மழைநீர் தேங்கி நிற்பதும் தடுக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் ஸ்பிக் நிறுவனத்திற்கு விவசாயிகள் சங்கத்தினரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழாவுக்கு டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார்.
    • விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சாதனை படைத்த தொழில் அதிபர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

    தபால்தலை வெளியீடு

    விழாவில் ரூபி ஜூபிளி விழா சிறப்பு தபால்தலை மற்றும் தபால் உறையை மதுரை மண்டல தபால்துறை தலைவர் ஜெயசங்கர் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஒரு நிறுவனத்தை 40 ஆண்டுகளாக நடத்துவது சவாலான ஒன்று. பல நிறுவன தலைவர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறீர்கள். தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருகாலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த மாவட்டத்தில், நம் முன்னோர்கள், முன்னோடிகள் மிக தைரியமாக தொழில் முதலீடுகளை செய்து உள்ளனர். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

    விடாமுயற்சி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும், தொழில் முதலீடுகள் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்.

    தொழில் முனைவோர்கள் இந்த பகுதியில் உருவாக வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்து உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், எஸ்.இ.பி.சி. அனல்மின்நிலைய தலைமை அதிகாரி நரேந்திரா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க பொதுச் செயலாளர் சங்கர்மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம்பால் நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு தொடங்கியது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராசராசன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜஸ்டின் ராஜ், நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், முதன்மை கவாத்து போதகர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், முதன்மை சட்ட போதகர் ஜென்ராஸ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர்.
    • ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டு வருவதால் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பள்ளி கட்டிடம்

    இந்நிலையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால் ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர். ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் ரூ.13 லட்சத்து 67 ஆயிரம் பங்களிப்புடன் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் - புது வாழ்வு சங்கம், நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பள்ளி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். ஆதிநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாலை, ஆழ்வார் திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி சேகரகுரு அருமைத் துரை, தலைமையாசிரியை சித்ரா, ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கரும்பன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் வெள்ள பாண்டியன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வார் திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் நகர தலைவர் கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், ஆழ்வை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் உதய் திட்டத்தின் கீழ் மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

    சிப்காட் உபமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை பொறியாளர் செல்வக் குமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர்கள் ரெ மோனா, வெங்கடேஸ்வரன், ராம் குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள 22கிலோ வோல்ட் பண்டாரம்பட்டி மின்னூட்டியில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் சுமார் 23கி.மீ. தூரம் உள்ள உயரழுத்த மின் தொடர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் 22 கிலோவோல்ட் மில்லர்புரம் மின்னூட்டி வழியாக சுமார் 11 கி.மீ. தூரமாக குறைக்கப்படுகிறது.இதன் காரணமாக மின்தடை நேரம் குறைக்கப்படுவதுடன், குறைந்த மின் அழுத்தம் பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.

    இந்த மின்னூட்டி மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், சின்னமணி நகர், ராஜகோபால் நகர், குறிஞ்சி நகர், தேவர் காலனி, சின்னகண்ணுபுரம், பாரதி நகர், மீளவிட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள 12,756 மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா நகர் முகப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார்.

    மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நாராயண ராஜ் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா, சிவலிங்கம், சரவணக்குமார், செயற்குழு உறுப்பினர் பலவேசம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை கோட்ட இந்து முன்னணி பொறுப்பா ளர் ஆறுமுகச்சாமி மற்றும் பலர் பேசினர்.

    • இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன.
    • முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தடகளச் சங்கம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டிகள் 14 வயதுக்குடப்பட்டவர்கள், 16 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள், 20 வயதிற்குட்பட்டவர்கள் என நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    பள்ளி கல்லூரிகளில் பயிலும் சுமார் 1500 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், என பல போட்டிகள் நடத்தப்பட்டன. 2 நாட்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா ஜெனிட்டா வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்க இணைச் செயலாளர் தீரமகாராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அக்டோபர் 2-வது வாரம் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

    • பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது
    • 10 கிளைகளில் கொடியேற்றும்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதீய ஜனதா கட்சி சார்பாக நாளை நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது

    தெற்கு மண்டல் தலைவர் மாதவன் வரவேற்றார், விவசாய அணி மாநில பொறுப்பாளர் தமிழ் செல்வி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம்,அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு செய லாளர் புனிதா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நாளை (17-ந் தேதி )முதல் 10 நாட்கள் சேவை தினமாக கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்து அறிவித்துள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடற்கரை பகுதியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும், 10 கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி, இளைஞர் அணி சார்பாக நடைபெறும் ரத்ததான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொறுப்பாளரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெற்றிவேல், மகளிர் அணி தெற்கு மண்டல் தலைவி புனிதா, ஓ.பி.சி. மண்டல தலைவர் துர்க்கையப்பன், பொது செயலாளர்கள் பிரபு , மகேஷ் ,செயலாளர் பாலகுமார்,அருண்பாபு, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வணிகர் பிரிவு துணைதலைவர் செல்லப்பன், இளைஞர் அணி செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பொதுசெயலாளர் லெட்சுமி மண்டல் துணை தலைவர் பொய்சொல்லான், கிளைதலைவர் முருகேசன், தரவு தளவு பிரிவு தலைவர் ராஜ்குமார், விவசாய அணி மண்டல் தலைவர் செல்வசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×