search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ்எல்"

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    சென்னையின் எப்சி தனது 2-வது ஆட்டத்தில் நாளை கோவாவுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னை அணியில் பெர்னாண்டஸ், ஆகஸ்டோ, ஜெஜெ, ஜெர்மன் பிரீத்சிங், நெல்சன், சபியா போன்ற வீரர்கள் உள்ளனர். கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுபாட்டில் பந்து அதிக நேரம் இருந்தது.



    ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நாளைய போட்டி பாதிக்கப்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. கொச்சியில் இன்று இரவு நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரளாவும், கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் தற்போது ஆட்டம் துவங்கி இருக்கும் நிலையில், இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். #ISL2018 #ATKvKBFC
    ×