search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164242"

    • அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரான்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி இயங்கி வருகிறது.

    இங்கு வரும் லாரிகள் மூலம் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவு மண் ஏற்றி செல்ல படுவதாகவும், கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாகவும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை யில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதானகூட்டம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தூரில் நேற்று நடைபெற விருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் செந்தில் முன்னிலையில் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த உதவி செய்யுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #IndPakTalks #US
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்ற இந்தியா, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச ஒத்துக்கொண்டது.

    ஆனால், அதற்கு அடுத்த நாளே காஷ்மீரில் மூன்று போலீசார் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டனர். இதனால், பாகிஸ்தான் உடன் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

    இதனால், பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இதனால், பாகிஸ்தான் சற்றே அதிர்ச்சியடைந்தது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

    பேச்சுவார்த்தையின் போது, இந்தியா உடன் சமரசம் செய்து வைத்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க உதவ வேண்டும் என குரேஷி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குரேஷியின் இந்த கோரிக்கையை அமெரிக்கா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாம் நாடுகள் தலையீடு தேவையில்லை என இந்தியா பல முறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதை விமர்சித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்” என பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். #IndPakTalks #PMModi #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    மேற்கண்ட இரு சம்பவத்தை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், “இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்” என ட்வீட் செய்துள்ளார்.



    இதில், “பெரிய அலுவலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சிறிய மனிதர்கள்” என்ற வார்த்தை பதம் மோடியை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது. 
    பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி வாழ்த்து கடிதத்தில் கூறியிருந்ததாக பேசிய பாகிஸ்தான் மந்திரி தெரிவித்த நிலையில், தற்போது மோடி அப்படி கூறவில்லை என மறுத்துள்ளது. #Pakistan #PMModi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

    பாகிஸ்தான் அரசை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி பேச்சுக்கு அழைத்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முன்னர் கூறியிருந்தார். 

    ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது பாகிஸ்தான். தங்கள் அமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லை என்று, ஊடகங்களில் பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

    பிரதமர் மோடி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் “ இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு முறை நீடிக்க வேண்டும்” என எழுதி இருந்ததாக தகவல்கள் கூறின.

    இந்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதமும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று இந்திய அரசு தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி “ அமைதி மற்றும் வளத்தை பெருக்குவதன் மூலம், தீவரவாதத்தை கட்டுப்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

    பிரதமர் மோடி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த கடிதம் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி “வெளியுறவு செயலாளர், இந்திய பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இன்று பாகிஸ்தான் இதற்கு விளக்கம் அளித்துள்ளது அதில் “ எங்கள் வெளியுறவு அமைச்சர், இந்திய பிரதமர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாக கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஊடகங்களால் தேவை இல்லாமல் கிளப்பி விடப்பட்ட வதந்தி என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மோடி, இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், “இரு நாடுகளின் பங்களிப்பு தான், முன்னோக்கி செல்ல வாய்ப்பு” என்ற தொணியில் எழுதியிருந்ததாக, குரேஷி முன்னதாக விளக்கியதாகவும், பாகிஸ்தான் கூறி மறுத்துள்ளது.

    முன்னதாக இந்தியாவுடன் நட்புறவில் ஈடுபட தயாராக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியா எங்களுடன் பேச ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்றும் இம்ரான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

    பிரமாதமான வளங்களை கொண்ட வடகொரியா பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பில் ஒருநாள் உயர்ந்த நாளாக உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    லிபியாவை போல வடகொரியாவின் முடிவு இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை முட்டாள் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. #USNorthKoreaTalks #TrumpKimSubmit
    பியான்ங்யங்:

    இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா - அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்க நிபந்தனை விதித்தது.

    இதனை அடுத்து, நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடப்பது உறுதியான ஒன்றாக இல்லை. இது தொடர்பாக அடுத்தவாரம் முடிவெடுக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சை ஒய்வதற்குளாக லிபியாவை போல வடகொரியா முடிவை தேடிக்கொள்ளும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார். 


    மைக் பென்ஸ் 

    இதற்கு வடகொரியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒன்றும் கெஞ்சவில்லை. லிபியாவையும் வடகொரியாவையும் ஒப்பிடுவதன் மூலம் அவர் முட்டாள்தனமான டம்மி அரசியல்வாதி என்பதை காட்டுகிறார். லிபியாவில் எந்த அணு ஆயுதங்களும் இல்லை. ஆனால், வடகொரியா அப்படி இல்லை. நாங்கள் அணு ஆயுதம் வைத்துள்ள நாடு’ என வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
    ×