search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ"

    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தலாம். மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை இன்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
    இஞ்சி- சிறிய துண்டு ஒன்று
    பால் - ஒரு டம்ளர்
    கருப்பட்டி - சிறிய துண்டு
    மிளகு  அரை டீஸ்பூன்
    தண்ணீர்  ஒரு கப்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

    பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம்.

    சூப்பரான ஆவாரம்பூ - கருப்பட்டி டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புதுவை நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகரத்தின் முக்கிய வணிக பகுதியான காந்தி வீதி,நேரு வீதி, மி‌ஷன் வீதி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட டீ,காபி கடைகள் உள்ளன.

    நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டீயின் விலை ரூ. 12-ம் காபியின் விலை ரூ. 20 என உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீ விலை ரூ. 10-க்கும் காபி ரூ. 15-க்கும் விற்கப்பட்டது. தற்பொழுது ரூ 2 உயர்த்தப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாகவே டீ,காபி விலையை 4 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தி இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அன்றாட வாழ்க்கையில் ஏழை, நடுத்தர மக்களின் உற்சாக பானமாக டீ ,காபி உள்ளதால் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை என்று அதனை அருந்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ×