search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிண்டால்"

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #Wheat #MSP #Cabinet
    புதுடெல்லி:

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மேலும் பல தானியங்களின் ஆதார விலை உயர்த்தப்பட்டதால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில், ‘ரபி’ பருவ கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியதாவது:-

    கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.1,840 ஆக உயரும். இது, 6 சதவீத விலை உயர்வு ஆகும்.

    பார்லிக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்படுகிறது. அதன் விலை ரூ.1,440 ஆக உயரும். மூக்கடலைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 620 ஆனது.

    மசூர் பருப்பின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்படுகிறது. கடுகுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்படுகிறது. குங்குமப்பூவுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.845 அதிகரிக்கப்படுகிறது.

    ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    வேளாண் ஆலோசனை குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அனைத்து ‘ரபி’ பருவ தானியங்களுக்கும் அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் முதல் 112 சதவீதம்வரை ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக விலை கிடைக்கச் செய்வோம் என்று பா.ஜனதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ராதா மோகன்சிங் கூறினார்.
    2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. #Sugarcane #ModiCabinet
    புதுடெல்லி:

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.

    சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.  #Sugarcane #ModiCabinet #tamilnews

    ×