search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டெடுப்பு"

    இலங்கையில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriLanka #HumanSkeletons #Grave
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இந்த போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும் போரின் போது மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இலங்கை அரசு பதில் அளிக்கவேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.



    இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டியபோது பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாவட்டம் முழுவதும் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.

    இந்த பணி நேற்று 79-வது நாளாக நீடித்தது. அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டியபோது அதில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது ஆகும். ஒரே குழியில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SriLanka #HumanSkeletons #Grave 
    திருவண்ணாமலை பொற்குணம் கிராமத்தில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பொற்குணம் கிராமத்தில் கூட்டுறவு கடைக்கு அருகே கல்வெட்டு ஒன்று கிடப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கல்வெட்டு ஆய்வறிஞர் ராஜகோபால் கூறுகையில், இந்த கல்வெட்டு கி.பி. 869 முதல் 901 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25-வது ஆண்டு கல்வெட்டு ஆகும். இது பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 894-ம் ஆண்டாக இருக்கலாம். பல்லவ மன்னன் கம்பபோத்தரைய விக்கிரமன் என்று இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொற்குணம் என்று அழைக்கப்படும் இவ்வூர் பொற்குன்றம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

    இதில் வேணாட்டுக் காந்தளூர் கூற்றத்து புதனாட்பாடியில் ஏரியின் கிழக்கு மதகின் அருகே உள்ள நீரோடும் பாதையில் இருந்த இடத்தை பண்படுத்தி விளை நிலமாக்கி கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. அப்படி திருத்தி விளை நிலமாக்கப்பட்ட நிலத்திற்கு கல்கிலியேரிச் செறு என்று பெயரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொடையான ஏரிபராமரிப்பு நிலத்தை என்றென்றும் பாதுக்காத்து நிலைக்க செய்பவர்களின் கால்களை தன் தலை மீது வைத்துப் போற்றுவதாகவும் அந்த கல்வெட்டில் கங்க மன்னர் பிருதிகங்கரையர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×