search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான்"

    சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.#Iran #Israel
    ஜெருசலேம்:

    அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலயத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக என சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி யிஸ்ரயேல் காட்ஸ் இன்று அந்நாட்டு வானொலி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

    ஈரானியர்கள் இப்போது சரணடையாமல் கண்காணிப்பு இல்லாத வகையில் மீண்டும் யூரேனியம் செறிவூட்ட முற்பட்டால் இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் மற்றும் மேற்கத்திய நாடுகள் கூட்டமைப்பு சார்பில் தெளிவாக விளக்க அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அவர்களுடன் இதர அரபு நாடுகளும் இஸ்ரேலும் நிச்சயமாக உடனிருக்கும்.

    ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் பழையப் பாதைக்கு திரும்பினால், அந்நாட்டுக்கு எதிராக ஒரு ராணுவ கூட்டணி உருவாக்கப்படும் என்பது அந்த அறிக்கை கூறும் செய்தியாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி வெளியிட்டுள்ள இந்த கருத்து, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.
    டெஹ்ரான்:

    எண்ணை வளம்மிக்க நாடான ஈரானுக்கும் அமெரிக்கா. பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் என்னும் மஞ்சள் நிற தாதுவை செறிவூட்டும் விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டது.

    இதில் யூரேனியம் செறிவூட்டலை 20 சதவீத அளவுக்கு கீழ் மட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் 5 சதவீத அளவோ அல்லது 20 வீத அளவோ யூரேனியத்தை செறிவூட்டுவது ஈரானிய மக்களுடைய உரிமை என்று ஈரானுக்கான அணு செயற்பாடு தொடர்பான பேச்சாளர் சயீட் ஜலீல் வலியுறுத்தி இருந்தார். அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யூரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகிய பின்னர், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா பரிந்துரைத்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியபோதும், தொடர்ந்து இதில் நீடிப்பதாக பிறநாடுகள் அறிவித்துள்ளன.


    இந்நிலையில், அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.

    இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள நட்டான்ஸ் பகுதியில் உள்ள அணு உலையில் யூரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்குவதாக சர்வதேச அணு சக்தி முகமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஈரான் அணு சக்தி முகமையின் தலைவர் அலி அக்பர் சாலே இன்று தெரிவித்துள்ளார்.

    சந்தர்ப்பம் சாதகமாக அமைந்தால் நாளை இரவில் இருந்து இந்த அணு உலை செயல்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ஈரானுடன் 2015-ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிய அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. #IranNuclearDeal #US
    வாஷிங்டன்:

    2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். “எங்களது தீவிரம் குறித்து ஈரான் தலைவர்களுக்கு சந்தேகமே வரக்கூடாது” என அவர் உறுதிபட கூறினார்.

    ஈரான் மீதான புதிய அமெரிக்க கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 12 கடுமையான நிபந்தனைகளுடன் ஈரான் உடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவது போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
    ×