search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதாரம்"

    சிவபெருமான் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கிருஷ்ண பகவான் எடுத்ததைப் போல, சிவபெருமானும் கூட சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உலக உயிர்களைக் காப்பதற்காக, இறைவன் பூமியில் தோன்றுவதே அவதாரம் எனப்படுகிறது. அப்படி சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நந்தி அவதாரம்

    நந்தி என்று அழைக்கப்படும் பெரிய காளை, சிவபெருமானின் ஒரு அவதாரமாகவே சொல்லப்படுகிறது. நந்தி வழிபாடு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் உள்ளது. சிவபெருமானே நந்தியாக உருவெடுத்ததாக சில புராணக் கதைகள் சொல்கின்றன. மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

    ரிஷப அவதாரம்

    பாற்கடல் கடையும் நிகழ்வுக்குப் பிறகு, கீழ்லோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். இதனால் சிவபெருமான் தருமம் என்னும் ரிஷப உருவம் கொண்டு, விஷ்ணு பகவானின் மகன்களை அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

    வீரபத்திர அவதாரம்

    தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் சதி தேவி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. தன் தலையில் இருந்து சிறிய முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதில் இருந்து வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி தோன்றினர். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

    அஸ்வத்தாமன்

    பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட கொடிய விஷத்தை, சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரியத் தொடங்கியது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிவந்தது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்ரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ ஆகும்.

    கீரத் அவதாரம்

    ஒரு முறை அர்ச்சுனன் தவத்தில் இருந்த போது, கீரத் (வேட்டைக்காரன்) உருவம் எடுத்தார் சிவபெருமான். அந்த நேரத்தில் அர்ச்சுனனைக் கொல்ல, ‘மூக்கா’ என்ற அசுரனை அனுப்பி இருந்தான், துரியோதனன். அந்த அசுரன் தன்னை ஒரு காட்டுப் பன்றியாக உருமாற்றிக்கொண்டு அர்ச்சுனனைக் கொல்ல வந்தான்.

    ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனின் கவனம், காட்டுப் பன்றியின் சத்தத்தால் சிதறியது. அர்ச்சுனன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அதன் மீது அம்பு எய்தான். அப்போது மற்றொரு அம்பும் அதன் மீது தைத்தது. அது வேட்டைக்காரன் உருவத்தில் இருந்து சிவபெருமான் எய்த அம்பு ஆகும். யார் முதலில் காட்டுப் பன்றியை வீழ்த்தியது என்ற சர்ச்சை இருவருக்கும் உருவானது. அர்ச்சுனனின் வீரத்தைக் கண்ட சிவபெருமான் அவனுக்கு, பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

    யாதிநாத் அவதாரம்

    ஒரு முறை ஆஹூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் இருந்தான். அவனும் அவனது மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். அந்த தம்பதியை, யாதிநாத் அவதாரம் எடுத்து சந்தித்தார் சிவபெருமான். ஆஹூக் தங்கியிருந்த குடிசை இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறிய அளவிலானது. எனவே கணவனும் மனைவியும் வெளியே படுத்துக் கொண்டு, தன் வீட்டிற்கு விருந்தினராக வந்த யாதிநாத்தை வீட்டிற்குள் தங்க வைத்தனர். அன்று இரவு துரதிர்ஷ்டவசமாக வன விலங்கால், ஆஹூக் கொல்லப்பட்டான். அதனால் அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன் வந்தாள். அப்போது தனது ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன் படி அவர்கள் இருவரும் நளன், தமயந்தியாக பிறந்தனர்.

    பைரவ அவதாரம்

    ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர் அவதாரம்’ ஆகும். பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தார். துண்டித்த பிரம்மனின் தலையை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு பிட்சாடனராக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து சுற்றி திரிய வேண்டிய நிலை அவருக்கு உருவானது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

    பிப்லாட் அவதாரம்

    இந்த அவதார வழிபாடு வடநாட்டில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு பிப்லாட் என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே தாதிச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். சனி திசையின் காரணமாகவே தனது தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை வளரும்போது பிப்லாட் தெரிந்து கொண்டார். இதனால் சனி பகவானை சபித்தார். அந்த சாபத்தால், விண்ணில் இருந்து மண்ணில் விழுந்தார் சனி பகவான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு, சனியின் சாபத்தை போக்கினார் பிப்லாட். எனவே இவரை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 
    வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
    வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.

    மச்சாவதாரம் :

    மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமாக கருதப்படுகிறது, மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அரசுனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் இதுவாகும்.

    கூர்மாவதாரம் :

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. ஒரு கட்டத்தில் மந்தார மலை சரியத் தொடங்கியது. இதனைத் தாங்கி பிடிப்பதற்காக, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்தார்.

    வராக அவதாரம் :

    பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதனால் பூமியின் இயக்கம் நின்று போனது. இதையடுத்து திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து, அசுரனைக் கொன்றதோடு, பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு வந்து அருள் செய்தார்.



    நரசிம்ம அவதாரம் :

    வராக அவதாரத்தின்போது திருமாலால் அழிக்கப்பட்ட இரண்டாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. அவன் நாராயணனை எதிரியாக பாவித்து வந்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ, நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் சிறுபிள்ளை என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தினான் இரண்யகசிபு. பிரகலாதனுக்காக தூணில் இருந்து, சிங்க தலையும், மனித உடலுமாக நரசிம்ம உருவத்தில் திருமால் அவதரித்தார்.

    வாமன அவதாரம் :

    பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. அவனது ஆணவத்தை அடக்குவதற்காக பெருமாள் குள்ளமான உருவம் தாங்கி அவதரித்தார். அதுவே வாமன அவதாரம் ஆகும். மகாபலியிடம் இருந்து மூன்றடி மண் கேட்டார். அவனும் சம்மதிக்கவே, ஒரு அடியில் பூமியையும், மற்றொரு அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்தில் தள்ளினார்.

    பரசுராம அவதாரம் :

    ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். தந்தையின் சொல்லுக்காக தாயின் தலையையே கொய்தவர். இவர் இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    ராமாவதாரம் :

    ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்றதுமாக ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்த அவதாரம் இது.



    பலராம அவதாரம் :

    கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

    கிருஷ்ணாவ தாரம் :

    வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

    கல்கி அவதாரம் :

    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என்று கூறப்படுகிறது.
    ×