என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி கொலை"
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாருதியை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. பால் வியாபாரி. இவரது மனைவி கீர்த்தி (வயது 30). தம்பதிக்கு மகேஸ்வரி, காயத்ரி என 2 மகள்களும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மாருதிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் வீட்டிற்கு எந்த செலவும் செய்யாமல் கள்ளக்காதலிக்கு ஆடம்பரமாக செலவு செய்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் கீர்த்திக்கு தெரிய வந்தது.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது. கணவர் கள்ளக்காதலை கைவிடாததால் ஊர் பெரியவர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்தார்.
பஞ்சாயத்தில் மாருதி கள்ளக்காதலை கைவிட்டு தனது குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக் கொள்கிறேன் என உறுதி அளித்தார். இருப்பினும் பஞ்சாயத்தில் வைத்து தன்னை அசிங்கப்படுத்திய மனைவியை கொலை செய்ய வேண்டும் என மனதில் வஞ்சகம் வைத்தார்.
கடந்த வாரம் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றார். மாருதியும் மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்தார். நேற்று மாமனார், மாமியார் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. கீர்த்தி தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
கத்தியுடன் மனைவியை பின் தொடர்ந்து சென்ற மாருதி நடுரோட்டில் அவரை கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்தார். கீர்த்தி வலியால் அலறி துடித்தார். கீர்த்தியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மாருதி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அங்கிருந்தவர்கள் கீர்த்தியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கீர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாருதியை தேடி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சுலேசா கிராமத்தை சேர்ந்தவர் துலாராம் (வயது 38). இவரது மனைவி பசந்திபாய்.
துலாராம் ஏற்கனவே 9 பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் துலாராமின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவர்கள் அனைவரும் துலாராமை பிரிந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் தான் அவர் 10-வதாக பசந்திபாயை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் மனைவி மீது துலாராம் சந்தேகப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னை பிரிந்து சென்று விடுவார் எனவும் துலாராம் கருதியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துலாராம் தனது 10-வது மனைவி பசந்திபாயுடன் ஒரு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண வீட்டில் இருந்து பசந்திபாய் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், புடவைகளையும் திருடியதாக துலாராம் சந்தேகப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துலாராம் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது முகத்தை சிதைத்து அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்றுள்ளார்.
இதற்கிடையே காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் பசந்திபாய் என்பதும், அவரது கணவர் துலாராம் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து துலாராமை போலீசார் கைது செய்தனர்.
- வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
- கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.
கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.
மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.
ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், மதுரவாடா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஞானேஸ்வர். இவரது மனைவி அனுஷா (வயது27). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஞானேஸ்வர் விசாகப்பட்டினத்தில் பாஸ்ட் புட் ஓட்டல் நடத்தி வருகிறார்.
அனுஷாவை திருமணம் செய்து கொண்டதை ஞானேஸ்வர் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் வேலை செய்து வருவதாக தெரிவித்து வந்தார். தற்போது அனுஷா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் உள்ளதால் உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என அனுஷாவிடம் கூறினார்.
அதற்கு அனுஷா நாம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் ஒன்றாக வாழலாம். நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் ஞானேஸ்வர் கத்தியால் குத்தினார். அனுஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர்.
- நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார்.
- அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர் (வயது 55). இவரது மனைவி ரியாஸ் பேகம் (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் திருமணம் செய்து கொண்டு விட்டு பிழைப்புக்காக உடையார்பாளையம் வந்து குடியேறி உள்ளனர்.
ஜாபர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இதற்கிடையே மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான ஜாபர் தனது சம்பள பணத்தை மனைவியிடம் கொடுப்பதில்லை.
அத்துடன் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரியாஸ் பேகம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் உடையார்பாளையத்தில் வசித்து வந்தார். அங்கும் சென்ற ஜாபர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் ஜாபர் திருந்தவில்லை.
இந்தநிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் உடையார்பாளையத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜாபர், அவரை உடனே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினார். அதற்கு ரியாஸ் பேகம் மறுத்து விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மாமியார் மற்றும் பிள்ளைகளை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறும், மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜாபர் கூறியதால் அவர்கள் வெளியில் சென்றுவிட்டனர்.
நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார். வெளியில் நிற்கும் தனது தாய்க்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்ற எண்ணத்தில் கணவரின் தாக்குதலை ரியாஸ் பேகம் பொறுத்துக்கொண்டார்.
ஆனாலும் ஆத்திரம் குறையாத ஜாபர், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆட்டை அறுக்கும் கூர்மையான கத்தியால் மனைவி என்றும் பாராமல் ரியாஸ் பேகத்தின் கழுத்தை கொடூரமாக அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரியாஸ் பேகம் ஒரு சில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஆனால் இந்த விஷயம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் மனைவியிடம் பேசுவது போன்று நாடகமாடியுள்ளார்.
மேலும் இறந்து கிடந்த மனைவியின் அருகிலேயே ஒரு பாயை விரித்து அதில் ஜாபர் படுத்துக்கொண்டார். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் ஜாபர், ரியாஸ் பேகம் இருவரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஜாபரின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரியாஸ் பேகம் பிணமாக கிடந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி அவர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ரியாஸ் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவியை கொலை செய்த ஜாபர் நேராக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடையார்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவியை கொலை செய்து விட்டு கணவர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29).
இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழும்பாததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்பொழுது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்த போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.
தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர்.
அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினாபானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
- சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (வயது60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார்.
மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
- சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப்பட்டியில் வசித்து வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
ராஜசேகர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவித்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி வந்து விட்டார். அங்கு வந்த ராஜசேகர் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜசேகரை அவரது உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர்.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ராஜசேகர் பதுங்கி இருந்தது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரையும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்தனர். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப் பட்டியில் வசித்து வந்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த விபரம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனை வைத்து அவர் தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார்.
இதனை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தினேசுடன் தேவி பேசியது மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்த ஆதாரத்தைக் காட்டி கேட்ட போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
நீ கள்ளத்தொடர்பில் இருக்கும் போது நான் வேறு வாலிபருடன் பேசக்கூடாதா எனக் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு அதிகமானது. எனவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டேன். அப்போது அங்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்ததால் நாங்கள் சண்டை போட்டது வெளியே தெரியவில்லை. அதன் பிறகு எனது நண்பர்கள் சொல்லித்தான் தேவி இறந்த விபரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது 3 குழந்தைகளையும் என் தாயிடம் விட்டு விட்டு சென்று விட்டேன். அதன் பிறகு என் கள்ளக்காதலி சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்து விட்டேன்.
என் கையில் பணம் இல்லாததால் எனது நண்பருக்கு போன் செய்து கூகுல்பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டேன். அவரும் பணம் அனுப்பி விட்டு போலீசார் தேடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.
நான் செல்போனை ஆன் செய்து பேசியதால் போலீசார் எனது இருப்பிடத்தை அறிந்து என்னை பிடித்து விட்டனர். நான் கொலை செய்த குற்ற உணர்ச்சி இருந்ததால் இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்காக பஸ்சில் ஏறி காத்திருந்தபோது போலீசார் என்னையும், சரோஜாதேவியையும் பிடித்து விட்டனர் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகர் மற்றும் சரோஜா தேவியை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
- மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.
தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
- இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
- தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க 2தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ். இவருடைய மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி.
காதல் மனைவி கொலை
இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கதிஜா பிஸ்மி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்றும் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர் கன்னித்தாயை கொன்றது தெரியவந்தது.
இதற்கிடையே தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், முத்தையாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் விசாரணையில் அவர் தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
தக்கலை:
தக்கலை அருகே மேக்கா மண்டபம் மூலச்சல் பன்றி வெட்டான்பாறை விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 54).
இவரது மகள் ஜெய பிரின்ஷா (31). மகன் ஜெயா பிரின்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரின்ஷா அழகிய மண்டபம் தச்சகோடு பகுதியைச் சேர்ந்த எபனேசர் (35), டெம்போ டிரைவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெபசேபன் (14), ஜெபஆகாஷ் (13) என்ற மகன்கள் உள்ளனர்.
ஜெபபிரின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். ஜெப பிரின்சாவிற்கும் எபனேசருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி அணிந்து செல்லும் ஆடை பிடிக்கவில்லை என்று எபனேசர் அடிக்கடி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜெபபிரின்ஷா சகோதரர்ஜெப பிரின்சிற்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக எபனேசருடன் சென்றிருந்தார். இரவு எபனேசரும் ஜெப பிரின்ஷாவும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பரைக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த எபனேசர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி ஜெப பிரின்சாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெபபிரின்சா மயங்கி விழுந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் எபனேசர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெப பிரின்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெபசிங் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எபனேசர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் எபனேசர் அந்த பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.