search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நானி"

    • நடிகர் நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.




    இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஓரி வாரி' பாடலை படக்குழு நேற்று வெளியிட்டிருந்த நிலையில் இதன் தமிழ் பாடலான தீக்காரி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் ரீமேக்கில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிக்க இருக்கிறார். #Vijaysethupathi #Nani
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. தமிழில் நான் ஈ, வெப்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. நானி சமீபத்தில் ஒரு தமிழ் படத்தை பார்த்து அதை தெலுங்கில் டப் செய்து வெளியிட வேண்டாம். தானே ரீமேக் செய்து நடிக்கலாம் என்று ஆர்வம் காட்டி உள்ளார். 

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தை தான் ரீமேக் செய்ய விரும்பி உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் 96 ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்து படித்த ஒரு ஜோடி 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஏற்படும் மாற்றங்களை உணர்வுபூர்வமாக கூறி இருக்கிறது.

    படத்தை பிரேம் குமார் இயக்கி உள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 
    தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர்கள் மீது குற்றம் சாட்டி வரும் ஸ்ரீரெட்டிக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Vishal #SriReddy
    தெலுங்கு திரைப்பட உலகையே பரபரப்பில் வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒவ்வொரு நடிகராக பெயரை குறிப்பிட்டு புகார் கூறி வருகிறார். இந்த வாரம் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நானி.

    தெலுங்கு நடிகரான நானி தமிழில் நான் ஈ, வெப்பம் படங்களில் நடித்தவர். நானி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடு வெற்றி சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலிடம் இதுபற்றி கேட்டனர். 



    அதற்கு விஷால் ‘இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு கூறி இருப்பது மிக கொடூரமானது. இப்போது நானியின் பெயரை கூறுபவர் அடுத்து வேறு ஒரு பெயரை கூறுவார். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
    பாலியல் தொல்லை என்று தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை ஸ்ரீ ரெட்டி, நானி மீது கூறிய குற்றச்சாட்டு கூறிய நிலையில், நடிகர் நானி, ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #SriReddy #Nani
    பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். 

    ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் நானி மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீரெட்டி கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ளவிடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.

    இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி, மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று ஸ்ரீரெட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 



    அதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:-

    “என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.

    ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriReddy #SriLeaks #Nani

    ×