search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாடுகள்"

    சபரிமலைக்கு வழிபாடு செய்ய செல்ல விரும்பும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். #SabarimalaVerdict #Sabarimala
    சென்னை:

    சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பெண்களையும், அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை செல்பவர்களும் இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுபற்றி ஆன்மீகவாதிகள் கூறும்போது, கோவிலுக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால் இயற்கையிலேயே பெண்ணாக படைக்கப்பட்டவர்களுக்கும், ஆணாக படைக்கப்பட்டவர்களுக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துதான் ஆலய வழிபாட்டிலும் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்றனர்.

    சபரிமலையானது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அது சங்க காலத்தில் சேரர்களின் வழிபாட்டு தலமாக விளங்கியது.

    சுவாமி அய்யப்பன் சார்ந்த வரலாற்று கதைகளில் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரணமாக சுவாமி அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமும் சொல்லப்படுகிறது.

    கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது வன விலங்குகளால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பூப்படைந்த பெண்கள் இக்கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது.

    10 வயது வரையுள்ள பெண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்வதில்லை.

    சபரிமலை பயணம் மேற்கொள்வதற்கு பக்தர்கள் 41 நாட்கள் கடினமான விரதம் இருக்க வேண்டும். இதற்காக பக்தர்கள் விரதத்தின் தொடக்க நாளன்று உத்திராட்சமோ அல்லது துளசிமணி மாலைகளோ அணிய வேண்டும். 41 நாட்களும் மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, புகைப்பிடித்தல், பெண்கள் தொடர்பு, அநாகரீகமான பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காலணிகள் அணியக்கூடாது.

    மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

    கருப்பு, நீல நிறம் அல்லது குங்குமப்பூ கலரில் பாரம்பரிய துணிகள் மட்டுமே அணிய வேண்டும். தற்போது விரதங்களுக்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் குறைந்து விட்டாலும் பொதுவான விதிமுறைக்கு உட்பட்டு விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

    சில தீவிர பக்தர்கள் வீட்டில் இருந்து வெளியேறி தனி இடத்தில் 41 நாட்கள் கடும் விரதம் கடைபிடிப்பார்கள். முன்பு ‘பெரிய பாதை’ என்ற ஒரு வழி மட்டுமே இருந்தது. அடர்ந்த காட்டின் வழியே செல்ல வேண்டும். இதில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தது. வெள்ளை நிற ஆடைகள் வெகுதூரம் வரை தெரியும் என்பதால் வனவிலங்குகளிடம் இருந்து தப்ப குறைந்த ஒளிசிதறல் கொண்ட கருப்பு, நீலம், சிவப்பு நிற துணிகளை பயன்படுத்தினர்.

    முந்தைய காலத்தில் காட்டு வழியாக நடந்து சென்று பம்பா நதியை அடையவே வெகுநாட்கள் ஆகும். தற்போது பம்பா நதிவரை வாகனங்கள் செல்வதுபோல் முந்தைய காலத்தில் செல்ல வழியில்லை.

    இதனால் முந்தைய காலத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்கள் ஒருபுறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடியை எடுத்துச் சென்றனர்.

    10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது கடினம். எனவேதான் தடை விதித்தனர். ஆனால் இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் சமம் என்ற கோ‌ஷம் ஓங்கி வருகிறது.

    சபரிமலை பயணம் என்பது அடர்ந்த வனப்பகுதி வழியாக 45 கி.மீ. தூரமாக இருந்தது. ஆனால் இப்போது காட்டு வழிப்பாதை மேம்படுத்தப்பட்டு இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சாலையாக மாறி விட்டன.

    சபரிமலை விரதமும், கட்டுப்பாடுகளும் பக்தர்களை சபரிமலை பயணத்துக்கு தங்களை தயார் செய்வதாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் விரத முறைகள் மாறிவிட்டன. கட்டுப்பாடுகளும் தளர்ந்து விட்டன. அவரவர் விருப்பப்படி ஒருநாள் ஒரு வாரம் என விரதம் இருந்து சபரிமலை சென்று திரும்புகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு தற்போது பெண்களை கோவிலுக்கு அனுமதித்தாலும் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது இயலாத ஒன்றாகும். கழுத்தில் மாலையுடன் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்பவர்கள் மட்டுமே 18 படிகள் வழியாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.



    எனவே குறைந்த நாள் விரதம் இருந்தும் பெண்கள் 18 படிகளில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சந்நிதானத்தின் பின்புற வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு 4½ கோடி முதல் 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இதன்மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    அதிக வருவாய் கிடைப்பதால் கேரள அரசாங்கமும் அய்யப்பன் கோவில் நடைமுறைகளில் மாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் வரவேற்கிறது. தற்போது பெண்களும் அனுமதிக்கப்படுவதால் வருவாய் மேலும் இரட்டிப்பாகும் என்பதால் கேரள அரசு வரவேற்கிறது. ஆனால் ஆன்மீகவாதிகளும், தீவிர பக்தர்களும் பெண்கள் அனுமதிப்பதை ஏற்கவில்லை. விரதத்தின் புனிதம் கெட்டுவிடும் என்ற அதிருப்தி நிலவுகிறது. #SabarimalaVerdict #Sabarimala


    விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவுக்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளை காணலாம். #VinayagarChathurthi #GaneshChathurthi
    சென்னை:

    இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சென்னையில் 2 ஆயிரத்து 520 சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த உரிமம் மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தின் சுற்றுப்புறத்தில் இல்லாததையும், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும்.

    பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

    விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலமாக செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



    அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடவியல், கலை படிப்புகளுக்கான ஆர்கிடெக்ட் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்தின் வளாகத்தில், ராக்கிங் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    வளாக பகுதிகளில் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, வகுப்புகளை புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். மாணவ-மாணவிகளிடம் ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    பல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் கருவி அணிந்து வரக்கூடாது, மொபைல் போன் ஹெட்செட்டை கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.

    மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது. வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் அதில் முகத்தை மூடும் கண்ணாடியை திறந்து விட்டிருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாணவியும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், காவலாளிகளும் அடையாள அட்டையை காட்டச் சொன்னால் மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #AnnaUniversity

    தமிழக அரசு விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது தொடர்பாக உருவாக்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. #VinayagarChathurthi
    இந்துக்களின் பண்டிகைகளில் நாடு முழுவதும் மிக விமர்சையாக நடத்தப்படும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திருவிழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அவை வழிபாடு செய்யப்பட்டு பிறகு கடலில் கரைக்கப்படுகிறது.

    மராட்டிய மாநிலம் மும்பையில்தான் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக மிக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கி சுமார் 35 ஆண்டுகள்தான் இருக்கும்.

    தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வழிபாடு செய்யும் வழக்கத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிமுகம் செய்தார். முதலில் சென்னை திருவல்லிக்கேணியில் இந்த விழா தொடங்கப்பட்டது. நாளடைவில் விநாயகர் சிலைகளை நிறுவும் வழக்கம் சென்னையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் இதர நகரங்களுக்கும் விநாயகர் சிலை வழிபாடு பரவியது. தற்போது கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பழக்கம் உருவாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் சிலைகளை நிறுவி வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. பொதுவாக கடந்த ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது முடிவாகி விடும்.

    அதற்கேற்ப விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்து அதற்கென அரங்கம் அமைக்கும் பணிகளை தொடங்கி விடுவார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த ஏற்பாடுகளில் திடீர் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் போக்கு தமிழக காவல் துறையில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடும் ஏற்பாட்டாளர்கள் அந்த சிலைகளை கடற்கரைக்கு எடுத்து சென்று கரைக்கும்போது நடத்தும் ஊர்வலம் போலீசாருக்கு பெரும் சவாலை கொடுக்கிறது.

    விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிக மிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 24 விதமான புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் கடந்த ஆண்டே தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 9-ந்தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்த புதிய விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    24 விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக 7 நிபந்தனைகளை ஏற்கவே இயலாது என்று விநாயகர் சிலைகள் வழிபாட்டு குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த நிபந்தனைகளை விலக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளை தளர்த்தி ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைப்படி விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. இது தொடர்பாக இந்து அமைப்புகள் சில அதிருப்திகளை சுட்டிக்காட்டி உள்ளன.

    இந்து அமைப்புகளுக்கு அதிருப்தி அளித்துள்ள அந்த புதிய விதிமுறைகளில் சில வருமாறு:-

    * விநாயகர் சிலைகளை முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும். ரசாயன கலவைகளை ஒருபோதும் சேர்க்க கூடாது.

    * தண்ணீரில் கரையாத ரசாயன வண்ணங்களை விநாயகர் சிலைகள் மீது பூசக்கூடாது. அவை கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் மிக உயரமான அளவுக்கு இருக்கக்கூடாது. 10 அடிக்கு மேல் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் முறையான கூரைகள் அமைக்கப்பட வேண்டும். அந்த கூரைகள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    * விநாயகர் சிலைகளை ஆன்மிக தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி கூடங்கள் அருகில் அமைக்கக்கூடாது.

    *விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவே அல்லது எந்த மத அமைப்புகளுக்கும் ஆதரவாகவோ போர்டுகள் வைக்கப்படக்கூடாது.

    * விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் செய்த பிறகு 5 நாட்களுக்குள் அவற்றை எடுத்துச் சென்று கடலில் கரைத்து விட வேண்டும்.

    இப்படி 24 புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவை ஏற்புடையவதாக இல்லை என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கூறி வருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    மிக குறுகிய காலத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகள், காவல் நிலையம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து எப்படி தடையில்லா சான்றிதழ்களை பெற முடியும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு நடைமுறையை பின்பற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசின் புதிய விதிமுறைகளில் சில இந்துக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை இதற்காக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    விநாயகர் சிலைகளுக்கு எப்போது பூஜை நடத்த வேண்டும் என்பதை சிலைகளை நிறுவி உள்ளவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்யக்கூடாது என்பது இந்து அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விநாயகர் சிலைகளை ஆண்டுதோறும் நிறுவி வழிபட்டு வரும் பக்தர்களிடம் எழுந்துள்ளது. #VinayagarChathurthi



    ×