search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்தல் நடைமுறையில் உள்ளது.
    • தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ மற்றும் முதலுதவிப் பெட்டி அடங்கிய பாதுகாப்பு உபகரணப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்தல் நடைமுறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ மற்றும் முதலுதவிப் பெட்டி அடங்கிய பாதுகாப்பு உபகரணப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை பாதுகாப்பு பெட்டகம் பெறாத ஆட்டோ ஓட்டுநர்கள் அசல்பதிவு அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் சேலம், ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், பதிவு புதுப்பித்தல் இல்லாத தொழிலாளர்கள் உடனடியாக இணையவழியில் பதிவை புதுப்பித்தல் செய்தபின், பாதுகாப்பு பெட்டகம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்லார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்தவாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி.
    • அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்.

    இலங்கையில் பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை துறந்து மனைவியுடன் தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவர் பின்னர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார்.

    தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்து பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். பாதுகாப்பு கருதி அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அவர் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இதனால் அவர் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது இந்த ஓட்டல் அறையில் முடங்கி இருப்பது ஜெயிலில் இருப்பது போன்று உணர்வை தருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அவர் அடுத்த வாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.

    இதை கேட்டு கோத்தபய ராஜபக்சே மகிழ்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் கோத்தபய ராஜபக்சே சொந்த நாடான இலங்கைக்கு திரும்பவே விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தாய்லாந்தில் சில வாரங்கள் தங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரணில் விக்கிரமசிங்கேவுடன் அவர் போனில் பேசியதாகவும், அப்போது இது பற்றி அவர்கள் விவாதித்தாகவும் தெரிகிறது.

    • 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
    • மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு 2 ஆண்டு களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து இயக்கங்களை சேர்ந்த 5 பேருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி, சூளை கூட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் கிளை தலைவர் ஆர்.டி.பிரபு, பாரத் முன்னணியை சேர்ந்த அகில பாரத இந்து அமைப்பை சேர்ந்த விருகை சிவகுமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முகுந்தன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான பாத்திமா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தனிப்பட்ட பாதுகாப்பு பணியை காவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 89 பேரில் பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலும், அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்வ தற்காக வெளியில் செல்லும் இடங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், இதனால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கி கயிறு தொழில்களை தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24, 25,26-ந் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி நாளை 24-ந்தேதி இரவு பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு திருப்பூர் வருகிறார். அவருக்கு பல்லடம் வடுகபாளையம் அருகே தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் திருப்பூரில் இரவு தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி காலை 10மணிக்கு பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் குறு, சிறு தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கி கயிறு தொழில்களை தொடங்கி வைக்கிறார். விழா நிறைவு பெற்றதும் மதியம் ஈரோட்டில் நடக்கும் விழாவுக்கு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், 2 துணை கமிஷனர்கள், 2 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    திருப்பூா் மாநகருக்கு நாளை மாலை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லடம் சாலை சந்தைப் பேட்டை, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு, அண்ணா பெரியாா் சிலை, புஷ்பா ரவுண்டானா, குமாா் நகா் ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    மேலும் இரண்டாம் நாளான 25-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் திருப்பூர் 60 அடி சாலை, எஸ்ஏபி .திரையரங்கம், பெரியாா் காலனி, அனுப்பா்பாளையம், திருப்பூா் ஒன்றியம் பெருமாநல்லூா் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே வரவேற்பு அளிக்கும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் போலீஸ் உயர்அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.பல்லடத்தில் மாவட்ட எஸ்.பி.சசாங்சாய் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

    • சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் வழுக்கு மரம் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்தனர்.
    • வழுக்கு மரத்தின் மீது ஏறிய இளைஞர் கீழே இறங்கி வந்து அவருக்கே உரித்தான தீபாராதனையை பெற்றுக் கொண்டார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உறியடி உற்சவம் இந்த ஆண்டு 12ம் தேதி தொடங்கியது.

    தினமும் மாலை சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினர்.

    கோகுலா ஷ்டமி தினத்தன்று கிரு ஷ்ணன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று வெண்ணைத்தாழி கோல த்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    இன்று அதிகாலை வரகூர் கடுங்கால் நதிக்கரை அமைந்துள்ள மண்டபத்திலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சகோத ரராய் பெருமாள்வெள்ளி சட்டத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கை அதிர, மத்தாப்பு ஒளி மிளிரகோவிலை நோக்கி புறப்பட்டது.

    நாதஸ்வர இன்னிசை முழங்க அசைந்தாடி வந்த பெருமாளைபின்னே கூப்பிய கைகளுக்குள் தேங்காய் வைத்துக்கொண்டு திரளான பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாக கோவிலை நோக்கி வந்தனர்.

    கோவிலின் முன்புற முள்ள அலங்கார பந்தலில் சுவாமி வைக்கப்பட்டு உறியடி தொடங்கியது.

    அந்தரத்தில் ஊசலாடிய உரியை பிடித்து அதன் உள்ளே இருக்கும்பிரசா ங்களை எடுக்க இளைஞர்கள் பலரும் போட்டி போட்டனர்.

    ஒரு வழியாக ஹரிஷ் குமார் என்ற இளைஞர் உறியைப் பிடித்து அதில் இருந்த பிரசாதங்களை எடுத்து அனைவருக்கும் வழங்கினார்.

    பின்னர் வழக்கு மரம் ஏறுதல் தொடங்கியது.

    வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்றமக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்தனர்.

    வழுக்கு மரத்தின் மேல்வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்துமேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து அங்கிருந்து பக்தர்களுக்கு வழங்கினர்.

    அதனை தொடர்ந்து வழுக்கு மரத்தின் மீது ஏறிய இளைஞர் கீழே இறங்கி வந்து அவருக்கே உரித்தான தீபாராதனையை பெற்றுக் கொண்டார்.

    அதன் பின்னர்சுவாமி கோயிலுக்குள்சென்றது.

    இன்று ருக்மணிகல்யாண உற்சவம் நடைபெறுகிறது.உறியடி விழா ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள்மற்றும் கிராம மக்கள்செய்து இருந்தனர்.

    திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் வசந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,

    ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    • கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
    • தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்கீழ் 13- ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர் . இத்திட்டம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவினை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பிறப்பித்து உள்ளார்.

    • 75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
    • 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 9.05 மணியளவில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    சுதந்திர தினவிழாவையொட்டி சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ரோந்து, வாகன சோதனை, கடைகள், லாட்ஜ்கள், ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை உள்ளிட்டவைகள் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள், அவரது உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன.

    அதேேபால் சுற்றுலா தலங்களான ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வழிபாட்டு தலங்களை போலீசார் 25 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம் மாநகரில் உள்ள விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்டவைகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள முக்கியமான சோதனை சாவடிகளான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்களை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.நெடுஞ்சாலைகளிலும் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதேபோல் இன்று முதல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில்வே நுழைவாயில் பகுதியில் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர். மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    • சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா

    கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணி யாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மற்றும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடை பெற்றது.

    1200 போலீசார்

    சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத் தில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ெரயில்வே தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ெரயில்வே பாலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள். பார்சல் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ெரயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ×