search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166412"

    அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற டிரப்பின் அறிவிப்புக்கு ரஷியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. #SpaceForce #Trump #Russia
    மாஸ்கோ:

    பூமியை போலவே விண்வெளியிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முழுமூச்சாக முயன்று வருகிறது. ஆனாலும், பூமியை போலவே விண்வெளியிலும் ரஷியா அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான போட்டியாளராக இருந்து வருகிறது. 

    விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினாலும், தனிப்பட்ட ஆதிக்கத்தை அங்கு செலுத்த இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன.

    சமீபத்தில், அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதற்கான, பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விண்வெளியில் ரஷியா, சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



    இந்நிலையில், டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்புக்கு ரஷியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஷஹரோவா, “டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்பை கேட்டுக்கொண்டோம். விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் நோக்கம். ஆனால், இது ஆபத்தான ஒன்று.” என கூறினார்.

    மேலும், “விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வளர்ப்பது சரியானதாக இருக்காது. அமைதியின் நோக்கத்தை சிதைப்பதாக இது அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏவுகணை மிரட்டல்கள் இனி இருக்காது. நிம்மதியாக தூங்குங்கள் என கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கு பின்னர் நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்டியுள்ளார். #SingaporeSummit #Trump
    வாஷிங்டன்:

    எலியும் பூணையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா நேற்றைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என  டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று டிரம்பை சந்தித்து பேசினார்.

    இரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

    வரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.



    இன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

    ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    நான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. #G7 #G7Summit
    முனீச்:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. 

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்க, கடுப்பான டிரம்ப் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ், “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ஒற்றை ட்வீட் மூலம் குறுகிய நேரத்தில் நீங்கள் உடைத்து விட்டீர்கள். அமெரிக்காவே முதன்மை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பதிலாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

    சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரள்கின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. 

    சந்திப்பு நடைபெறும் பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    வெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் இருந்து இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்துள்ளார்.

    சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் அன்-ஐ அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    இதேபோல், கனடா நாட்டின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இன்னும், சில மணி நேரத்தில் அவர் இங்கு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, கிம் ஜாங் அன்-னுடனான சந்திப்பை ஒருவேளைக்கான மருந்து என்று குறிப்பிட்ட டிரம்ப், ‘முதல் பேச்சிலேயே அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். பின்னர், இதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன். சமரசம் ஏற்படும் சூழல் உருவானால் கிம் ஜாங் அன்-னை பிறகு வாஷிங்டனுக்கு அழைத்துப் பேசவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.  #Singaporesummit #KimJongUn #DonaldTrump #TrumpKimSummit
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.



    இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இல் உடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது.

    என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக இது தொடர்பாக பேசிய டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடியிருந்தார். சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து வடகொரியாவை மடை மாற்றியிருக்கலாம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு அடுத்த மாதம் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென இதில் இருந்து வடகொரியா பின் வாங்க முயன்று வருகிறது. #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    கிம் ஜாங் அன்

    இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக டிரம்ப் தெரிவிக்கையில், “பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அது நடக்கலாம். நடக்காமல் போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்” என தெரிவித்தார்.

    மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த பிறகே கிம் இப்படி மாறியுள்ளதாக கூறிய டிரம்ப், சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து மடைமாற்றியிருக்கலாம் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அணு ஆயுதங்களை கைவிட்டால் வடகொரியாவை தொடர்ந்து கிம் ஆள டிரம்ப் ஒத்துழைப்பார் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி லிபியாவில் கடாபிக்கு நேர்ந்ததை போல தனக்கும் நேர்ந்து விடுமோ என நினைத்த கிம் அமெரிக்கா உடன் ஒத்துழைக்காமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்கா வருபவர்கள் மனிதர்கள் இல்லை விலங்குகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்” என கூறினார்.

    மேலும், “ பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம், மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள்தனமான சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிவர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump
    எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

    கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    டிரம்ப் - கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    ×