search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ருதி"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய தந்தை கமல்ஹாசன் வழியை பின் பற்ற இருக்கிறார். #ShrutiHaasan #Kamal
    சினிமாவில் பிசியாக இருப்பவர்கள் எல்லாம் டிவி பக்கம் வரும் காலம் இது. பிக்பாஸ் மூலம் டிவிக்கு வந்தார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 வது சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து விஷால் தனியார் டிவி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்க இருக்கிறார்.

    இவர்கள் வரிசையில் ஸ்ருதிஹாசனும் விரைவில் ஒரு டிவியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.



    சமீபத்தில் லண்டனில் தனது முதல் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியிருக்கும் ஸ்ருதி அதே உற்சாகத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டார்.
    தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் ஸ்ருதிஹாசன், ரக்‌ஷ பந்தனுக்கு தன்னுடைய அம்மாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடி இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதிஹாசன் எதையும் வித்தியாசமாக செய்பவர். நேற்று நாடு முழுவதும் ரக்‌‌ஷ பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

    அப்படிக் கொண்டாடிய சிலர் தங்களது சமூக வலைதளங்களில் அதுகுறித்து பதிவிட்டனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார். பொதுவாக ரக்‌ஷா பந்தன் சகோதர சகோதரிகளுக்குள்தான் பெரும்பாலும் பரிமாறிக் கொள்ளப்படும்.



    ஆனால் ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கூறிய அவர் “இது எனது அம்மா. நாங்கள் இருவரும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன். சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்பு குறைந்திருப்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். #ShrutiHaasan
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:-

    “ஏதோ படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல் தேவை இல்லை. நல்ல கதை, திருப்தியான கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிப்பேன். அதற்காகத்தான் படங்களை குறைத்துள்ளேன். பெயர் சொல்வது மாதிரி படத்தில் முழு சக்தியையும் காட்டி நடிக்க வேண்டும். வந்தோம் போனோம் என்றெல்லாம் இருக்க கூடாது என்பதில் தெளிவாகி விட்டேன்.



    எனது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எளிதில் திருப்தி அடைய மாட்டேன். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வருவது வரை திரும்ப திரும்ப நடிப்பேன். இப்போது நல்ல கதைகள் அமையாததால் நடிக்கவில்லை. இனிமேல் பாடகியாக வளர முயற்சி செய்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது முடிவு. தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை.”

    இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
    ×