search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு"

    சிறைச்சாலையில் ஏற்படும் முறைகேடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து சீரமைக்க முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழுவை இன்று உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    சிறையில் கைதிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், சிறையில் கைதிகளின் அதிக எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டுவர சிறைத்துறை சீரமைப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் உருவாக்க முடிவு செய்திருந்தது.

    இதற்கான உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூவர் குழுவானது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும் எனவும், சிறைச்சாலைகளை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt
    மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    லக்னோ:

    சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக ஆதரவு திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு எம்.பி.யான அன்சுயல் வர்மா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

    கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998 முதல் 2015-ம் ஆண்டு வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சமாளிக்க பெண் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். #JammuKashmir #LadyCommandos
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெறும்போது, பாதுகாப்பு படையினரால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதனால், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தடியடி போன்ற வழிமுறைகள் மூலம் மக்கள் போராட்டத்தை கலைக்கின்றனர்.



    ஆண் பாதுகாப்பு படை வீரர்களே பெரும்பாலும் இருப்பதால் அவர்கள் மீது கல்லெறிந்து பெண்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு படை வீரர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு, இருளில் செயல்படுவது முதல், துப்பாக்கி சுடுவது வரை அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு படையினர் மீது கல் எறியும் பெண்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. #JammuKashmir #LadyCommandos
    ×