என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 167685
நீங்கள் தேடியது "பான்மசாலா"
குன்னூரில் மிட்டாய் குடோனில் பதுக்கி வைத்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் கைது செய்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பல பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டது. அவ்வப்போது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவைகள் எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்று தெரியாமல் இருந்தது.
இதனையடுத்து குன்னூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்குமார், பாலு, சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையில் குன்னூர் வி.பி. தெருவை சேர்ந்த மொத்த வியாபாரி தியாகராஜன் (வயது 58) என்பவரது குடோனில் இருந்து குட்கா, பான்மசாலா சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
நேற்று போலீசார் அதிரடியாக குடோனில் சோதனை செய்தனர். மிட்டாய், சோப்பு உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொருள்களுக்கு இடையே ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பண்டல் பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து தான் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் தியாகராஜனிடம் குட்கா, பான்மசாலா எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டபோது அவர் பதில் கூறவில்லை.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தியாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எங்கிருந்து குட்கா, பான்மசாலா வாங்கினார் என்பது தெரியவந்தால் கும்பல் சிக்கும் என்று தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பல பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டது. அவ்வப்போது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவைகள் எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்று தெரியாமல் இருந்தது.
இதனையடுத்து குன்னூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்குமார், பாலு, சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையில் குன்னூர் வி.பி. தெருவை சேர்ந்த மொத்த வியாபாரி தியாகராஜன் (வயது 58) என்பவரது குடோனில் இருந்து குட்கா, பான்மசாலா சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
நேற்று போலீசார் அதிரடியாக குடோனில் சோதனை செய்தனர். மிட்டாய், சோப்பு உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொருள்களுக்கு இடையே ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பண்டல் பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து தான் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் தியாகராஜனிடம் குட்கா, பான்மசாலா எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டபோது அவர் பதில் கூறவில்லை.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தியாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எங்கிருந்து குட்கா, பான்மசாலா வாங்கினார் என்பது தெரியவந்தால் கும்பல் சிக்கும் என்று தெரிகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X