search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீழ்ச்சி"

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெள்ளைப்பூண்டின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநில விவசாய விலை பொருள்களில் முக்கிய வியாபார கேந்திரமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்4 க்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு கமி‌ஷன் மண்டிகள் உள்ளன. வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நேற்று நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து சுமார் 15 ஆயிரம் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

    கடந்த வாரம் வெள்ளைப் பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.90 வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த வாரம் வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. கமி‌ஷன் மண்டிகளில் சுறுசுறுப்பாக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினார்கள். ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.70 வரை விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.20 வரை குறைந்து விற்பனை ஆனது. பூண்டு விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வெள்ளைப்பூண்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வட மாநில வியாபாரிகள் யாரும் வராததால் இந்த விலை வீழ்ச்சி காணப்பட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வாரவாரம் வெள்ளைப்பூண்டு கொண்டு வருகிறோம். ஆனால் இந்த வாரம் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதே நிலை நீடித்தால் வெள்ளைப்பூண்டு விவசாயம் கேள்விக் குறியாகி விடும். எனவே வெள்ளைப் பூண்டு விவசாயத்தைப் பாதுகாக்க வெள்ளைப்பூண்டுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாங்கள் விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கோத்தகிரியில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமி‌ஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.
    ×