என் மலர்
நீங்கள் தேடியது "அவதூறு பேச்சு"
- பரமக்குடியில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.
பரமக்குடி
மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி நகரத்தலைவர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், நாகேந்திரன், கணபதி கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஜினி காந்த், சிறுபான்மை பிரிவு மாநில செயாலாளர் அஜ்மல்கான், தொழில் பிரிவு மாநில செயலாளர் காளிஸ்வரன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
- தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.
பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது.
அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என மாநகரில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க. பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர சூலூர் போலீஸ் நிலையத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மனுக்கள் கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த அனைத்து புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
- திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் கிடையாது.
சென்னை:
மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன். 84 வயதான இவர் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
அம்பேத்கர்தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதி கிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சியாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க.
அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவர், டைப் அடிச்சவர், டைப்புக்கு புரூப் பார்த்தவர் தான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்.பி.வி.எஸ். மணியனை நேற்று இரவு கைது செய்தனர். இன்று காலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அல்லி ஆர்.பி.வி.எஸ்.மணியனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ஆர்.பி.வி.எஸ். மணியன் தரப்பில் முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலிப்பதாக நீதிபதி அல்லி தெரிவித்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- வழக்கில் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கேட்டு சி.த.செல்லபாண்டியன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட முதலமைச்சர் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கேட்டு சி.த.செல்லபாண்டியன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதலமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, சி.த.செல்லபாண்டியனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
- தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத் தின் பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 294பி, 354-டி, 506(1), 509 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.
தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரில் 294-பி, 5061) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னை யில் மட்டும் அவர் மீது நேற்று இரவு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாநகரில் பணி புரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெண் போலீசார் குறித்து யூ டியூபர் சங்கர் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசா ரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தை யில் பேசுவது, அரசு ஊழி யரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசு வது, துன்புறுத்தல், கண்ணி யத்தை குலைப்பது ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
- கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா?
சென்னை:
சென்னையை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் பற்றியும் அவரது மனைவி ராதிகா பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பாக சரத்குமார், ராதிகாவிடம் பேசியதை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதற்கு ராதிகா எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக சரத்குமார் மற்றும் ராதிகா பற்றி அவதூறு கருத்தை கூறியுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கைது நடவடிக்கை பாய் கிறது. அவர் மீது எந்தெந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது பற்றி சட்ட நிபுணர் களின் கருத்தை போலீசார் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
- எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.
திருச்சி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.
நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்
14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.
நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.
நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.
சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.
பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?
இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.
என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.
மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
- சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பழைய நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரையில் அனைவருமே பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று கருத்து தெரிவித்துள்ள டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் ரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் காந்தராஜ் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. காந்தராஜ் பேசிய வீடியோ பேச்சின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் அவரை கைது செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என்றார்.
மும்பை:
சாவர்க்கர் குறித்தும், இந்துத்துவ கொள்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
அந்த மனுவில், கடந்த 2023-ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி சாவர்க்கர் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது நண்பர்களும் முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் மகிழ்ச்சியாக உணர்ந்தோம் என எழுதியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. சாவர்க்கர் எங்கேயும் அப்படி ஒரு விஷயத்தை எழுதவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி புனே சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
- கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றினர்.
திருப்பதி:
தெலுங்கு திரையுலக நடிகர் பூசாணி கிருஷ்ண முரளி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ண முரளி கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின் போது சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் குறித்து அவதூறாக பேசினார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர்.
திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கிருஷ்ண முரளி மீதான பழைய வழக்குகள் சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டன.
சி.ஐ.டி போலீசார் கிருஷ்ண முரளியை தேடி வந்தனர். அவர் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள ராய் சோட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் ராய்சோட்டி சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றி அன்னமைய்யா மாவட்டம், ஒபுலவாரி பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இன்று காலை ராஜம்பேட்டை கோர்ட்டில் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.