என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல்"
- இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த இந்திய மாணவியின் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தாமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் ஹமாஸ் ஆதரவு குற்றச்சாட்டில் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பதர் கான் சூரி அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் பல்கலைக் கழகத்தின் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளிநாட்டு சேவைப் பள்ளியில் உள்ள அல்வலீத் பின் தலால் மையத்தில் முஸ்லிம்-கிறிஸ்தவ புரிதலுக்கான முதுகலை பட்டதாரி ஆவார்.
இதற்கிடையே ஹமாஸ் ஆதரவு பிரசாரத்தை பரப்பியதாக பதர் கான் சூரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து வர்ஜீனியாவில் உள்ள வீட்டில் இருந்த அவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக் லாப்லின் கூறும்போது, பதர் கான் சூரி ஹமாஸ் பிரசாரத்தை சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரப்பி யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்தார் என்றார்.
அமெரிக்க பெண்ணை மணந்துள்ள பதர் கான் சூரி, கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், தனது மனைவியின் பாலஸ்தீன பூர்வீகம் காரணமாக தான் குறி வைக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.
- பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஏமன் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் சைரன்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே பலமுறை வெடி சத்தங்கள் கேட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, இந்த வாரம் ஏமனின் ஹவுதி குழு மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி தாக்குதலின் போது மத்திய இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் காசா பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தாழ்வாதார பகுதி ஒன்றை கைப்பற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ள டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவித்து பிரதேசத்தின் கட்டுப்பாட்டை கைவிடும் வரை தாக்குதல்கள் தீவிரமடையும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிக்கும் நெட்சாரிம் தாழ்வாரத்தின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் சபை காசாவில் தனது ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் கூறியது. தாக்குதலுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம் என தெரிவித்தது.
புதுடெல்லி:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில், காசா மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது.
இந்நிலையில், காசா நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
- 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
"கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. "ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து" இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

மேலும் மற்றோரு அறிக்கையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
- காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
- இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 56,000 பேர் உயிரிழந்த பின் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 உடன் முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்றுய காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹவுதிக்கள் ஏவுகணைகத் தாக்குதல் நடத்தினர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக ஹவிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் காசாவுக்கு ஆதாரவாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் பலமுறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதிக்களை ஒடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவின் கடுமையாக போராடி வருகிறது.
- பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
- ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
- பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

- ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த உடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
- ஆனால், போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் நிறைவு பெறாமல் உள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 25 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அத்துடன் உயிரிழந்த 8 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. இதற்குப் பதிலாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்தது.
ஏழு வார ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், 2-வது கட்ட ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏழு வாரக்கால போர் நிறுத்தம் இந்த மாதம் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் விடுவிக்கப்படுவார். உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முதற்கட்ட போர் நிறத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அமல்படுத்தினால் மட்டுமே பணயக் கைதி விடுவிக்கப்படுவார். 4 பணயக் கைதி உடல்கள் ஒப்படைக்கும் என ஹமாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தைகள் விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.
மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காசா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும். பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர், இது ஹமாஸின் சூழ்ச்சி மற்றும் உளவியல் போர் என குற்றம் சாட்டியிருந்தார்.
நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பதற்கான திட்டத்தை முன்வைப்பதாக அமெரிக்கா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முற்றிலும் நடைமுறைக்கு மாறான கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் முன்வைப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது.
மூத்த ஹமாஸ் தலைவர் கலில்-அல்-ஹய்யா நேற்று எகிப்து நாட்டிற்கு சென்றார். அதன்பின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றன.
முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்ததும், இந்த மாதம் தொடக்கத்தில், நாங்கள் அமெரிக்காவின் புதிய திட்டத்தை ஏற்றுள்ளோம். அது ஹமாஸ் தற்போதுள்ள பணயக் கைதிகளில் பாதிபேரை விடுதலை செய்ய வேண்டும். அதற்குப் பின் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உறுதி அளிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்குகிறது. போர் நிறுத்தத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறது என ஹமாஸ் குற்றம் சாட்டியது.
ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலும் ஹமாஸும் பிப்ரவரி தொடக்கத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இருந்தன. இதில் ஹமாஸ் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஈடாக விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இது நடைபெறாமல் உள்ளது.
- ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
- கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.
பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.

கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.
இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
- காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும்
- சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்
ஹமாஸ் - இஸ்ரேல் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் 56,000 பேர் உயிரிழந்த காசா நகரம் இடிபாடுகளாக காட்சி அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தத்துக்கு பின் தங்கள் இடங்களுக்கு திரும்பியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் 20 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இடிபாடுகளை அகற்றும் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தற்போதைய தேவை. ஆனால் அவை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காசா மக்களை நிரந்தமராக வெளியேற்றி அங்கு ரிசார்ட் சொகுசு நகரத்தை உருவாக்கும் கனவு திட்டத்தை அறிவித்தார். இதனை இஸ்ரேல் தொலைநோக்கு பார்வை என வர்ணித்தது.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காசா மக்களைக் குடியேற்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளன.
இதற்காக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
காசா மக்களை அண்டை நாடான ஜோர்டான் மற்றும் எகிப்தில் குடியேற்றுவது குறித்துப் டிரம்ப் பேசியிருந்தார். காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும் என்ற அவரது திட்டத்தை அரபு நாடுகளும் பாலஸ்தீனியர்களும் முற்றிலுமாக நிராகரித்தனர். இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களை ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அசோசியேட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த இராஜதந்திர முயற்சி ரகசியமாக செய்யப்படுகிறது. சோமாலியா மற்றும் சோமாலிலாந்துடனான தொடர்புகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், பேச்சுவார்த்தை எந்த மட்டத்தில் நடந்தது, அதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. தகவல்களின்படி, சூடான் அமெரிக்க முன்மொழிவை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சோமாலியாவும் சோமாலிலாந்தும் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளன.
- ஏழு வார போர் நிறுத்தத்தின்போது 25 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
- போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பதற்கான முன்னெடுப்பு நடைபெறாமல் உள்ளது.
பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஹமாஸ் வெளியிடவில்லை.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கண்மூடித்தனமாக தாக்குதலால் உலக நாடுகள் பணயக் கைதிகளை விடுவிக்க போர் இடைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது குற்றம் சுமத்திய இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் சுமார் 14 மாதங்களாக நீடித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 25 உயிரோடுள்ள பணயக் கைதிகளையும், 8 உயிரிழந்த பயணக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும், இதற்கு இணையாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடைசி வாரம் வரை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து வந்தது. இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
ஏழு வார ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் எல்லையை மூடியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியற்ற நிலையில் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் தற்போது ஒரு பயணக்கைதி மற்றும் உயிரிழந்த 4 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது.