search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "த்ரிஷா"

    சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #SathurangaVettai2 #ArvindSwami
    நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.



    இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwami

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் விமர்சனம். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
    சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.

    ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார். 



    இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா  திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் - பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

    அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.



    கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.

    இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.



    கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என  கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.



    பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.

    பெருமாள் பிச்சை - ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார். 

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்' டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ விமர்சனம்:

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.

    விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,

    தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். 

    `சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:

    `சதுரங்க வேட்டை-2' படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூ. 1.79 கோடியை பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்து வழக்கு விசாரணையில் மனோபாலாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwamy
    நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை'.

    இதன் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.



    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட ஐகோர்ட்டு வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று தெரிய வரும். #SathurangaVettai2 #ArvindSwamy

    ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மோகினி' படத்தின் விமர்சனம்.
    பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.

    தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும் என்று யோகி பாபு கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர். 



    அங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருக்கம் காதலாகவும் மாறவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது. 

    ஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. 

    கடைசியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார்? எதற்காக கொலைகளை செய்கிறது? அதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. படத்தை தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபு காமெடி அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். 

    லண்டனில் கொலை செய்யப்படும் பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் ஆர்.மாதேஷ். சாதாரணமாக த்ரிஷா அழகு என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார். த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இடமில்லாமல் லண்டன் சென்று பேய் படத்தை எடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஓரளவுக்கு படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 



    அருள்தேவ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. விவேக் - மெர்வினின் பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `மோகினி' அழகான பேய். 

    ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் என்று கூறினார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது,

    நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஹரி சார் படத்தில் நடித்தால் கற்றுக்கொள்ள முடியும். தயாரிப்பாளர் பாராட்டும் இயக்குநர் ஹரி சார் தான். ஹரி சார் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஹரி சார் இருக்கும் போது சாமி ஸ்கொயர் படத்தில் செட்டே பரபரப்பாக இருக்கும். யாருமே சாதாரணமாக இருக்க மாட்டார்கள். மற்ற படங்களில் பணிபுரியும் போது ஒரு சிறிய தூக்கத்தை போடலாமா என்று நினைக்க ஒரு சிறிய இடைவேளையாவது இருக்கும். ஆனால் ஹரி இயக்கும் படத்தில் அதை நினைக்க கூட முடியாது. 



    தொடக்கத்தில் இருந்து சூரி அண்ணாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை எனது சொந்த அண்ணனாகவே பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணா என்று அழைப்பது சூரி அண்ணாவை தான். இந்த படத்தில் எனக்கும், சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உள்ளது. பேசவே பயமாக இருக்கிறது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனது ரசிகையாகி இருக்கிறார். காக்கா முட்டை படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. மிகச்சிறந்த நடிகை. நாங்கள் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். 



    அந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை ரசித்தேன். தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பதில் மகிழ்ச்சி. சாமி முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் இருக்கிறார். ஹரி சார் மாதிரியே துறுதுறுவென்று இருப்பார். இந்த படத்தின் மூலம் என்னை பாடகியாக அறிமுகப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. இவ்வாறு பேசினார். #SaamySquare #Vikram #KeerthySuresh

    செய்தித்தாளை திறந்தாலே குழந்தைகளுக்கான அநீதி பற்றிய செய்திகள் தான் இருக்கிறது என்றும், அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும் என்றும் த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார். #Trisha
    மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் மாதேஷ் பேசியதாவது,

    இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா  நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. 

    இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம் என்றார்.



    த்ரிஷா பேசும்போது,

    நான் இந்த படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான். தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால், அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். 

    மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை லண்டன், பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார்.

    படம் வருகிற ஜுலை 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Mohini #Trisha

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. `அதிரூபனே', `மொளகாப்பொடியே' என துவங்கும் அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நிலையில், படத்தின் முழு இசையும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்திருந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்றை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து `அதிரூபனே' என்று துவங்கும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
    இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தில் த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், மற்றொரு முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

    எனவே இந்த பாகத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்தது படக்குழு. தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் படக்குழுவில் இருந்து த்ரிஷா வெளியேறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து த்ரிஷாவுடன் படக்குழு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. 

    இந்த நிலையில், த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், விரைவில் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



    இந்த படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram #AishwaryaRajesh

    ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளன.

    இந்த டிரைலருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபுறத்தில் நெட்சன்கள் டிரைலரை கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பெரும் எதிபார்ப்புக்கு இடையே வெளியான இந்த டிரைலரை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 



    இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்த்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram

    ரஜினி நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் கதைக்கும், காலா படத்தின் கதைக்கும் கனெக்‌ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
    நேற்று முன் தினம் வெளியான காலா திரைப்படத்தில் ராமருக்கும் ராவணனுக்குமான போர் ஒரு குறியீடாக சேர்க்கப்பட்டிருந்தது. ராமனை ராவணன் வெல்வது போல காட்டப்பட்டது.

    விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி2 படமும் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டுதான் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. முந்தைய பாகத்து ஆறுசாமியின் மகன் ராமசாமியாக விக்ரம் வருகிறார்.

    அவருக்கு எதிரிகளாக முந்தைய பாகத்துக்கு பெருமாள் பிச்சையின் மகன்களான ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை, மகேந்திர பிச்சை ஆகியோர் வருகின்றனர். தனது தந்தை ஆறுசாமியை கொன்ற இந்த மூவரையும் மகன் ராமசாமி பழிவாங்குவதே படத்தின் கதை.



    அம்மா வேடம் என்பதாலும் சில நிமிடங்களே வரும் தோற்றம் என்பதாலும் தான் திரிஷா, சாமி-2 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். திரிஷா கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். எனவே அம்மா வேடத்தில் நடித்தால், தனது மார்க்கெட் இறங்குமே என்று யோசித்திருக்கிறாராம். 

    சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டீசருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram

    ×