search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கம்"

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார். #ManikaBatra #Olympic
    புதுடெல்லி:

    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.



    டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.

    அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.  #ManikaBatra #Olympic 
    கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் விசா. ம.குணசேகரன் தலைமை தாங்கினார். 

    முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் விசா. ம.சண்முகம், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் அமலி டெய்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபால், முத்துச்சாமி, ஜெயச்சந்திரன், மகாமணி, சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018

    சென்னை:

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, சுனாய்னா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பி உள்ளார். #AsianGames2018

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.

    ‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.

    8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.

    மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.

    வில்வித்தை பந்தயத்தில் காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.



    இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.

    பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.

    ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள விளையாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். #AsianGames
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் 570 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 விளையாட்டில் கலந்து கொள்கிறது.

    கபடி, தடகளம், குத்துச்சண்டை, பேட்மின்டன், துப்பாக் சுடுதல், ஆக்கி, மல்யுத்தம், டென்னிஸ், வில்வித்தை மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்மின்டனில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. தடகளத்தில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா முத்திரை பதிக்கலாம். அவர் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.



    துப்பாக்கிசுடும் போட்டியில் மனுபாக்கா, அனிஷ் பன்வாலா, இளவேனில் ஆகியோரும், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சுஷில்குமார், வினிஷ்போகத், சாக்ஷி மாலிக் ஆகியோரும் பதக்கங்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைக்கும். டென்னிசில் ராம்குமார் ராமநாதன் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வாய்ப்பு இருக்கிறது. #AsianGames
    ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள்.



    அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
    ×