search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169591"

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்களை தாக்கி பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம் சந்திரலேகா நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் சரவணன் (வயது22).இவர் ஆரப்பா ளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.600-ஐ வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் 4-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), தத்தனேரி களத்துபொட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போன் பறிப்பு

    அவனியாபுரம் பெரியசாமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (49). இவர் விளக்குத்தூண் பகுதியில் உமறுப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் 17 வயது சிறுவன், காளவாசல் தமிழ் தென்றல் 3-வது தெரு மோகன் மகன் விமல் (19), அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நகை பறிப்பு

    திருமங்கலம் தென்கால் நகரை சேர்ந்த லட்சம் மகன் நிஷாந்தன் (25). இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பரிடம் சிலர் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகைையயும் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் (27), வெங்கடசாமிநாயுடு அக்ரகாரம் சரவணன் மகன் ஆகாஷ் (20), சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் (22), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    • சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.
    • சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (47). இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு இவர் ஓலப்பாளையத்தில் உள்ள கம்பெனியின் கிளை அலுவலகத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் ஈங்கூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் நட்சத்திரா கார்டன் என்ற பகுதியில் வந்தபோது 3 பேர் கும்பல் காரை வழிமறித்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.

    பின்னர் 3 பேர் கும்பல் காருக்குள்ளேயே சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு சத்தியமூர்த்தி கட்டப்பட்டிருந்த கை, கால்களை அவிழ்த்து கொண்டு இந்த சம்பவம் குறித்து கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமூர்த்தி காரில் பணம் கொண்டு வரும் தகவலை தெரிந்த யாரோ ஒருவர்தான் ஆட்களை வைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த அடிப்படையில் கார் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து கார் நிறுத்தப்பட்ட இடம் வரை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறன்றனர்.

    இந்த துணிகர வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மேல பொன்ன கரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) என தெரியவந்தது. இதை யடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்த னர்.

    அண்ணா பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக நின்று கொண்டி ருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 10-வது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 200-ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு நள்ளிரவு வரும் பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    மாட்டுத்தாவணி, பெரி யார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் சமூக விரோதிகள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்ற னர். இதனால் வெளியூர்க ளில் இருந்து நள்ளிரவு ஊர் திரும்புபவர்கள் பீதியுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் முகமது அப்துல்லா (வயது18). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி அருண்பாண்டி, வினோத்குமார், பால சக்தி, தமிழ் இனியன், ராமச்சந்திரன், ஹரிவிக்னேஷ், கார்த்தி என்ற எலி கார்த்தி, சோனைமுத்து, கே.கே. நகர் சித்திரவேல் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

    மதுரை

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சமூக விரோதிகள் வழிப்பறி, நகை பறிப்பு, பணம் பறித்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் தைரியமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பயமின்றி சித்திரை திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.

    இந்தநிலையில் திருவிழா வின்போது வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்கத்தான் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் சின்னான் (வயது53). இவர் சம்பவத் தன்று கள்ளழகரை தரிசிப்பதற்காக வெளியே சென்றார். ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பறித்துச் சென்றது.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது பி.பி.குளம், முல்லை நகர், செல்வம் மகன் சுபாஷ் (வயது 21), ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ராமராஜ் மகன் சுந்தரேஸ் வரன் ( 22), மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெரு, முருகன் மகன் சந்தோஷ் (19) மற்றும் முல்லை நகர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சித்திரை திருவிழாவுக்கு வந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்ததாக சோலையழகு புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர்.

    • கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நூர் முகமது வைத்திருந்த 'செல்போனை கொடு' என்று கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அந்த கும்பல் நூர் முகமது விடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நூர் முகமது கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரது உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட அருள்தாஸ்புரம் தவளை என்ற சரவணன் (22), கரிமேடு யோகானந்த சாமி மடம் தெரு, ஹனிபா மகன் சல்மான் அகமது (19) ஆகியோரை கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர்.

    மதுரை

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் செந்தூர்பாண்டி (வயது23). இவர் மீனாம்பிகை நகரில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செந்தூர்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மீனாம்பிகை நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), மீனாம்பிகை நகர் 9-வது தெரு திருப்பதி (24), முருகபாண்டி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருச்சி வசந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் கே.புதூர் பாரதியார் ரோடு, வண்டி பாதை சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து பணத்தை பறித்து சென்றார். இது தொடர்பாக சுப்பிரமணியன், கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனிடம் பணம் பறித்த கே.புதூர் காந்திபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (31) என்பவரை கைது செய்தனர்.

    • கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19), தத்தனேரி களத்துப்பொட்டல் கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் ஆடு- மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2 ஆடுகள் திருடு போனது. இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மேலூர், பனங்காடி கதிர வன் மகன் காசி விஸ்வநாதன் (23), ஜாபர் மகன் விகாஸ் (21) ஆகிய 2 பேர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு மதுரை டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நர்சரி பள்ளிக்கூடம் அருகே வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெற்றிலை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடம் இருந்து ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்லப் பாண்டி(வயது 60). வெற்றிலை வியாபாரியான இவர் தினமும் நகரி வழியாக சித்தாலங்குடி, குமாரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெற்றி லைகளை ஏற்றிக்கொண்டு செல்லப்பாண்டி வியாபாரத்திற்கு புறப்பட்டார்.

    தோடனேரி விலக்கில் சென்றபோது, 3வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி செல்லப்பாண்டியிடம் இருந்த ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தேனூர் பாலத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் செல்லப்பாண்டியிடம் பணம் மற்றும் செல்போன் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் தோடனேரியை சேர்ந்த ஜெயசூர்யா(வயது24), சமயநல்லூர் அமீர்(18) மற்றும் 16வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்தனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கங்காணி சந்தை சேர்ந்தவர் நாகவேல்மணி (32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைத்தியநாதபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல், நாகவேல்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப்பாளையம் ஜான் மகன் சக்தி கவுதம் (23), வைத்தியநாதபுரம் சுரேஷ் மகன் சஞ்சய் (22), பாரதியார் மெயின் ரோடு செந்தில்குமார் மகன் அஜித் குமார் (24), கங்காணி சந்து கண்ணன் மகன் மாயகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரை எம்.எம்.சி. காலனி, காவிரி நகரை சேர்ந்தவர் யுவராஜா (26). இவர் நேற்று மாலை செம்பூரணி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300-ஐ பறித்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் போஸ் மகன் ராமகிருஷ்ணனை (19) கைது செய்தனர்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    ×