என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 169652
நீங்கள் தேடியது "கோயில்"
சிறுபாக்கம் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X