search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள்"

    • இந்தியாவில 2023-24 நிதியாண்டில் 8 பில்லியன் டாலருக்கு ஐபோன் விற்பனை.
    • சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா 2023-2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 66,858.92 கோடி ரூபாய்) என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 6 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு மடங்கு (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐ-போன் விற்பனையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியுளள்து.

    மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டபுள் டிஜிட் வளர்ச்சி என டிம் குக் தெரிவித்திருந்தார். மேலும் இது எங்களுக்கு மிக மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.

    உலகளவில் ஐ-போன் விற்பனை மூலம் 383 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் என்பது குறைவானதுதான். சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி முக்கியமானது எனக் கருதுகிறது.

    இந்தியாவுக்கு 9.2 மில்லியன் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும்.
    • சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், ஐபோன் 17 சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டன. இது குறித்து வெளியான தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 பிளஸ் மாடலை அறிமுகம் செய்யாது என்று கூறப்படுகிறது.

    புதிய பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் அதில் கேமரா சென்சார்கள் பிக்சல் மாடல்களில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    முன்புறமாக சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. டிசைன் அடிப்படையில் புதிய ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஐபோன் X போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்லிம் மாடலில் 6.55 இன்ச் ஸ்கீரன், 120Hz ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

    • சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
    • ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.

    இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.

    அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
    • ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.

    இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
    • ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

    ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.

    2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

    "ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

    ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.

    ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


    ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார். 

    • கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.
    • ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடு, WWDC நேற்றிரவு நடைபெற்றது. இதை துவக்கி வைத்து உரையாற்றிய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து பேசினார்.

    இத்துடன் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிராண்டிங்கில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், WWDC 2024 நிகழ்வில் ஆப்பிள் அறிவித்த புதிய சேவைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்:

    சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

     


    இத்துடன் மெசேஞ்சஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-இன் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஏ.ஐ. சேவையை சாதனத்தில் உள்ள சிப்செட் சார்ந்து வழங்கும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சார்ந்த சிரி:

    ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், சிரி சேவையில் ஏ.ஐ. வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிரி மொழிகளை முன்பை விட அதிக நேர்த்தியாத புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. கூடுதலாக சிரி சேவையை மற்ற ஆப்பிள் நிறுவன செயலிகளுடன் ஒருங்கிணைக்கவும் முடியும். இதனால் சிரியிடம் ஒரு புகைப்படத்தில் பிரைட்னசை அதிகப்படுத்த வாய்ஸ் கமாண்ட் கொடுத்தாலே போதுமானது.

     


    இன்-ஆப் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள்:

    போட்டோஸ் ஆப்-இன் மெமரிஸ் அம்சம் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏ.ஐ. மூலம் செயலியில் உள்ள சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக தேர்வு செய்யப்படுகிறது. மேலும், புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்குவதற்கு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இதே போன்ற வசதி கூகுள் பிக்சல் மற்றும் கேலக்ஸி ஏ.ஐ. உள்ளிட்டவைகளில் ஏற்கனே கிடைக்கிறது. இதுதவிர மெயில் ஆப், மெசேஜஸ் ஆப் உள்ளிட்டவைகளிலும் ஏ.ஐ. வசதி புகுத்தப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்களில் சாட்ஜிபிடி:

    தனது சாதனங்களில் ஏ.ஐ. வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சாட்ஜிபிடி சேவையை லாகின் செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த வசதி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சேவை ஆப்பிள் சிலிகான், நயூரல் எஞ்சின் உள்ளிட்டவைகளில் இயங்கும். இந்த ஏ.ஐ. அம்சங்கள் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபேட், M1 மற்றும் அதன்பின் வெளியான சிப்செட் கொண்ட மேக் சாதனங்களில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது. 

    • ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும்.
    • ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2025 ஆண்டு முதல் ஐபோன் சீரிசில் "பிளஸ்" மாடலை நிறுத்திவிட்டு, புதிதாக "ஸ்லிம்" மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டு "ஐபோன் 17 ஸ்லிம்" எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் விலை ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    தற்போது வரை ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் ப்ரோ மேக்ஸ் வேரியண்ட் விலை தான் அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 பிளஸ் விலை அதன் பேஸ் வேரியண்ட் ஐபோன் 15 மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை இதைவிட ரூ. 70 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிள் "லெட் லூஸ்" நிகழ்ச்சியில் அந்நிறுவனம் இதுவரை தான், அறிமுகம் செய்ததில் மிக மெல்லிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதே பாணியை ஐபோன் மாடல்களிலும் பின்பற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வெளியிட்டதில் மிகவும் மெல்லிய ஐபோன்களில் ஒன்றாக ஐபோன் 6 மாடல் இருந்தது.

    ஐபோன் 6 மாடல் அளவில் 6.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஆப்பிள் டிசைனிங்கில் ஐபோன் X அளவுக்கு அசாத்திய அப்டேட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் X மாடலில் ஆப்பிள் நிறுவனம் நாட்ச் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து இருந்தது, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இது புதிய டிரெண்ட் ஆகவும் மாறியது.

    இந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் அலுமினியம் சேசிஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த ஐபோனின் டிசைன் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த மாடல் ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஐபோன் பிளஸ் மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாது தான், இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் "ஸ்லிம்" மாடல் பயனர்களுக்கு புதிதான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்றும் இதன் மூலம் பலர் புதிய ஐபோன் ஸ்லிம் மாடலை வாங்க வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் மூலம் புதிய போன் மாடலின் விவரங்கள் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் புகைப்படத்தின் படி, இந்த மாடலில் 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெசல்களை கணிசமான அளவுக்கு குறைக்க ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்ச்சர் (பி.ஆர்.எஸ்.) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    இந்த தொழில்நுட்பம் ஐபோன்களின் பெசல்களை முடிந்தவரை மெல்லியதாக மாற்றும். புதிய பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பெசல்களை குறைக்க உதவும் என்று தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா சென்சார் தற்போதைய ஐபோனில் இருப்பதை விட அளவில் சற்று உயரமாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 1/1.14 இன்ச் அளவு கொண்ட சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1/1.28 இன்ச் சென்சாரை விட பெரியதாக இருக்கும். 

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.


     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.

    ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900

    புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900

    11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900

    13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 

    • புதிய ஐபேட் ப்ரோ மாடல் இருவித அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டு அறிமுகம்.

    முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் மூலம் ஆப்பிள் முதல்முறையாக OLED டிஸ்ப்ளேக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஆகும். இது முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

     


    மென்பொருள் சார்ந்த எடிட்டிங் அம்சங்களை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ப்ரோ, மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கேமரா சென்சார் லேண்ட்ஸ்கேப் பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டு மாடல் புதிய ஐபேட் ப்ரோவுடன் ஒற்றுப்போகும் வகையில் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் - ஆப்பிள் பென்சில் ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட ஐபேட் ப்ரோ 256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மற்றும் 2 டி.பி. என நான்குவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    ×