search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.

    கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே பூம்புகார் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
    • குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.

    அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.

    இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

    இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    • தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது.
    • மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்டு ள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலை விலும் காரை க்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இதன் காரணமாக நாகப்பட்டினம், காரை க்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடல் சீற்றமாக காணப்படு வதால் மீன்வளத் துறையில் எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    • காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
    • மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்து வாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எத்திரம் பொருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரி கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொ ழுது மீன்பிடிப்பு மற் றும் மீன்விற்பனை தொடர் பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூல மாக அறிவிப்பு வழங்கப்பட் டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை.

    எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங் களில் இருந்தும் பாது காப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற் கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகு களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அறிவிக் கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    • ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியா வது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரையிலும் 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே மீன்பிடித்துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கும் முன்பு பலி எண்ணிக்கை அதிகரித்ததால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி களிடம் மீன்பிடி த்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதற்கிடையில் வெளியூரில் மீன்பிடிக்க சென்ற விசைப்ப டகுகள் மீன்களை இறக்க முடியாமல் துறைமுக முகத்து வாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

    குறிப் பாக 9 விசை படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த விசைப்படகுளில் இருந்த மீன்கள் துறைமுகத்தில் இறக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறை முகம் மூடுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது.

    ஆனாலும் சிறு வள்ளங்களில் மீன் பிடிக்க அப்பகுதி மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கிடை யில் நேற்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 40 -க்கும் அதிகமான படகுகள் தேங்காப்பட்டணம் துறை முகம் வந்தன. அதில் சில படகுகள் நேற்று அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து உள்ளே மீன் இறக்கி விற்பனை செய்துள்ளனர்.

    இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மீன் இறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தொடர் போரா ட்டத்தின் விளைவாகத்தான் மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடை யில் கேரளா வுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இறக்கியுள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

    அதே நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காத நிலை உள்ளது.

    குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் சென்ற போது மீன் விற்க விடாமல் விரட்டியுள்ளனர். இது தொடர்பாக மீன்வள த்துறை நடவடிக்கை எடுக்குமா?துறைமுகம் முகத்துவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பே ற்பார்களா?

    குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மீன் விற்க அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் .

    கடலூர்:

    தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரததில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

    • 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
    • தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.

    இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.

    அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.

    தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.

    ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

    காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி, தமிழக அரசு ரூ.43 கோடி ஒதுக்கீடு

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் துறைமுக மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆலோசனை மேற் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட் டணம் துறைமுகம் மேம் பாட்டு பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதி கள் உள்ளிட்டோர்களுட னான கலந்தாய்வுக்கூட் டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தொழில்நுட்ப காரணங்க ளால், முகத்துவாரப் பகு திகளில் பல உயிரிழப்பு கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தேங்காப்பட்ட ணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசித்துவரும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மாவட்ட நிர்வா கத்திற்கு உயிரிழப்பு கள் ஏற்படுவதை தடுப்பதற் கான மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மீன்பி டித்துறைமுக முகத்துவா ரத்தை ராட்சத இயந்திரம் கொண்டு ஆழப்படுத்துவற் கான நடவடிக்கை விரை வில்மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    துணை இயக்குநர் (மீன்வளத்துறை) காசி விஸ்வநாத பாண்டியன், கலெக்டரின் நேர்முக உத வியாளர் (பொது) வீரா சாமி, ஊசூர் மேலாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள் ஜார்ஜ் ராபின்சன், ஜோர்தான், பினுலால்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகதிட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி. தமி ழக அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்து ஒரு வாரத் தில் இதற்காக அரசாணை வெளியிட உள்ளது.

    துறைமுக முகதுவா ரத்தில் மணல் அள்ளும் பணிக்கு புனேயில் இருந்து இயந்திரம் ரூ.31.18 கோடியில் வர உள்ளது. செப்டம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மண் அள் ளும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் கள். அவ்வாறு தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மீன்துறை இயக்குநர் பழனிசாமி, ராஜேஷ்குமார் எம். எல்.ஏ உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறு கையில், 'மீனவர்களுக்கு பாதுகாப்பான வகையில் துறைமுகத்தை மறுசீர மைப்பு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில், நியாட், சிடபிள் யூபி ஆர்.எஸ்., ஐஐடி மற் றும் மீன்வளத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர் களை வரவழைத்து பல கட்ட ஆய்வுகளை மேற் கொண்டு, உள்ளூர் மீன வர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.

    அதன்பின்னர் தமிழக அரசு திட்டத்திற்கான கருத்துரு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந் தது. இது குறித்து கடந்த 21.04.2022 அன்று நடை பெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 12-வது கூட்டத் தில், துறைமுக உட்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் பிரதான அலைதடுப்பு நீட்டிப்பு சுவர் ஆகிய இரண்டு பணிகளையும் ஒரே கருத்துருவாக்க கேட் டுக்கொண்டதற்கிணங்க, தமிழக அரசு மீண்டும், இரு பணிகளையும் ஒரே கருத் துருவாக்கி ரூ.253 கோடிக் கான திட்டத்தை அனுப்பி வைத்தது. அதனை கடந்த 29.07.2022 அன்று நடை பெற்றகூட்டத்தில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்கா ணிப்பு குழு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதலுக் காக பரிந்துரை செய்தது.

    துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த தற்போது பணியில் இருக்கும் இயந்திரங்களை விட கனரக ட்ரெட்ஜிங் இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. துறைமுக பணிக்கான மத்திய அரசின் ஒப்புதல் ஓரிருநாட்களில் கிடைத்த தும், உடனடியாக டெண் டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற் கான பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செயல்ப டுத்தி வருகிறது.

    எனவே, மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து பணிகள் தொடங்கும் வரை அமைதி காக்க வேண்டும். லைப் ஜாக்கெட் அணிந்து படகில் பயணிப்பது, இயற்கை  சீற்றநேரங்களிலும், ஆபத்தான பகுதிகளி லும் உயிர் காக்க உதவும். துறைமுக பணிக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், லைப் ஜாக் கெட் அணிவது குறித்தும் தவறான கருத்துக்களை யாரும் அரசியல் லாபத்திற்காக பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×