என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 170380
நீங்கள் தேடியது "காஷ்மீர்"
ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைந்து தகராறு செய்த ராணுவ மேஜர் லீதுல் கோகோய் மீதான குற்றம் ராணுவ கோர்ட்டில் உறுதியாகியுள்ளதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். #MajorGogoi #MajorGogoiGuilty #Army
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் நுழைந்து தகராறு செய்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ராணுவ கோர்ட் தனது விசாரணை அறிக்கையை ராணுவ தலைமையகத்திடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Kashmir #Pulwama
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக புல்வாமாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
குல்காம் பகுதியில் பயிற்சி காவலர் சுட்டுக்கொல்லப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் அருகே இன்று பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kashmir #Batamaloo
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள பாடாமாலோ என்ற பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு ஆபரேஷனை பாதுகாப்பு படையினர் இன்று தொடங்கியுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராமுல்லா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Kulgam
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம், விடுமுறைக்கு தனது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். #Kashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகம்மது சலீமின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சமீபத்தில், இது போல எல்லை பாதுகாப்பு படை வீரர் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீரில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #Kahmir
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார்.
அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பினை முன்னிட்டு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்ரீநகர்-பத்காம் மற்றும் வடகாஷ்மீரின் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படாது. இதேபோன்று தெற்கு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-குவாஜிகண்ட் பகுதியில் இருந்து பனிஹால் செல்லும் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் இந்த ஜூலையில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவது இது 2வது முறை ஆகும். கடந்த காலங்களில் கல் வீச்சுகள் மற்றும் பிற போராட்டங்களால் ரெயில்கள் பலத்த சேதமடைந்தன.
தேச விரோத செயல்களுக்காக துக்தர்-இ-மிலாத் அமைப்பின் தலைவியான ஆசியா அந்த்ரபி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இன்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடருகிறது.
காஷ்மீரில் கலவரத்தை அடக்கும் பணிகளில் ஈடுபட மத்திய துணை ராணுவப்படையில் இருந்து 500 பெண் காவலர்களை நியமிக்க உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர் :
காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களில் அம்மாநில பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் பாதுகாப்புப்படையினர் திணறி வருகின்றனர்.
எனவே, கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த துணை ராணுவப்படையில் கான்ஸ்டபில் அந்தஸ்தில் உள்ள 500 பெண் போலீசாரை பணியில் அமர்த்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இவர்களுக்கு இரவு நேரப் பாதுகாப்பு, கவசமின்றி கலவரங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களில் அம்மாநில பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் பாதுகாப்புப்படையினர் திணறி வருகின்றனர்.
எனவே, கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த துணை ராணுவப்படையில் கான்ஸ்டபில் அந்தஸ்தில் உள்ள 500 பெண் போலீசாரை பணியில் அமர்த்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இவர்களுக்கு இரவு நேரப் பாதுகாப்பு, கவசமின்றி கலவரங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில் மூத்த ராணுவ அதிகாரி மஹாதிக் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குந்த்ரூ ராணுவ தலமையகத்தில் கலோனியலாக இருப்பவர் மஹாதிக். தனது வாகனத்தில் இன்று அவர் செல்லும் போது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் துப்பாக்கி கீழே விழுந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு மஹாதிக்கின் கழுத்தில் பாய்ந்துள்ளது.
இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பத்திரிகையாளர்கள் ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சுஜாத் புகாரியின் (சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்) நிலைதான் உங்களுக்கு என பாஜக தலைவர் லால் சிங் பேசியுள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னர் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக - பிடிபி கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக இந்த சம்பவம் கூறப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங் நேற்று பேசுகையில், “காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள், தாங்கள் கொண்டுள்ள பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கும், செய்திகளை உண்மைத் தன்மையுடன் அளிப்பதற்கும் இடையே ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும்” என மிரட்டல் தொணியில் பேசினார்.
லால் சிங்கின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதற்கு அந்த மாநில பத்திரிகையாளர் சங்கமும், தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி லால் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு, பின்னர் மந்திரி பதவியி இருந்து லால் சிங் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.
இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மிர் உள்ளரங்கு மைதானத்தில் சுமார் 6 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு. அதனால், தவறாக வழிநடத்தப்பட்டு கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.” என கூறினார்.
காஷ்மீர் இளைஞர்கள் எதிர்காலத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். தனது இந்த பயணத்தில் காஷ்மீர் கவர்னர், முதல்வர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோரிடையும் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். வர உள்ள அமர்நாத் புனித யாத்திரைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலை நேரத்தில் உணவு உண்ட பின்னர், அன்றைய நோன்பை தொடங்குவார்கள். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நோன்பு வைப்பவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக குரான் வரிகளை கூறிகொண்டு ஒரு குழு வீதி வீதியாக செல்வார்கள்.
இந்த பாரம்பரிய முறை கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இந்த பாரம்பரிய முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குரான் வரிகளை மைக்கில் கூறிக்கொண்டே குழு ஒன்று வீதி வீதியாக சென்று நோன்பு கடைப்பிடிப்பவர்களை எழுப்பியுள்ளது. ரமலான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவம் தனது வழக்கமான சோதனை மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X