search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி"

    சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். #Vikram #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் தற்போது ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். ஹரி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ‘மூன்றாவது கண்’ என்ற குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று சென்னையில் வெளியிட்டார்.



    இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசும்போது, ‘சிங்கப்பூரைபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்’ என்றார்.
    ×