என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள்"
- பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்
- பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஸ்காட் சர்வதேச பள்ளி 10.08.2012 ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார். இப்பள்ளியில் தொடக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுடன் இயங்கி வந்தது. அதன் பின்னர் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது அதனால் இன்று முதல் பள்ளி செயல்படாது என்று நேற்று மாலை பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மணிமுத்து உள்ளிட்ட போலீசார் பெற்றோர் - பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட் பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர்வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு நல்ல பள்ளியில் உடனே சேர்க்க இயலாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள்ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடினால் நாங்கள் வேறு நல்ல பள்ளியை தேர்வு செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்களது குழந்தைகளை சேர்க்க இயலும்.
பள்ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடுவது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம் என்றனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாகவும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்திடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர் .இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
- புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர்.
- அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் அதே வேளையில், புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் பலர் தொழில் நகரமான திருப்பூரை நோக்கி படையெடுப்பு, வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்து பள்ளிகளில் சேர்வது என அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி பணம் கேட்பதாகவும், சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்காமல் திருப்பி அனுப்புவதகாவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுயதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 35-வது வார்டு விஜயாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்புக்கு மகனை சேர்க்க சென்றோம். அப்போது, மாணவர் சேர்க்கைக்கு உங்களால் முடிந்த தொகை என்று ஆரம்பித்து, ரூ. 1000-ம் வரை கேட்டார்கள். எதற்கு, அரசுப் பள்ளியில் பணம் கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினோம். வகுப்புகளை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என அங்கிருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பெற்றோர் பலரும், எதிர்ப்பு தெரிவிக்க பணம் வாங்கவில்லை என்றனர்.
இடுவம்பாளையம் அரசுப் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியில் சேர வரும் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் வடிவேல் கூறும்போது, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்காததால், பலரும் கல்வி பெறுவது தடைபடுகிறது. காரணத்தை ஆசிரியர்கள் சொல்ல மறுப்பதால், பெற்றோர்கள் பலரும் செய்வதறியாது எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. அலுவலகங்களுக்கு பரிந்துரை கடிதம் பெறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி என்பது கட்டாயம். ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பல்வேறு காரணங்களை சொல்லி புறக்கணிப்பதால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. சில அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள், தமிழ்வழிக்கு மாறுவதென்றாலும் அவை உடனடியாக கிடைப்பதில்லை.
குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அலைபேசிக்கு ஓடிபி எண் வரும். அதன் பின்னர் தான் வகுப்பில் சேர்க்க முடியும் என்கின்றனர். சுமார் 3 மாதங்கள் ஆகிறது என்றால், அந்த மாணவர் தமிழ்வழியில் படிப்பதா? அல்லது ஆங்கில வழியில் படிப்பதா? என்ற குழப்பம் மேலோங்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியை இல்லையெனக் கூறி, எல்.கே.ஜி வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதில்லை என்றார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறும்போது, அரசுப் பள்ளிகளில் பணம் பெறக்கூடாது. சில பள்ளிகள் மீது புகார்கள் வந்தன. அவற்றை எச்சரித்துள்ளோம். அதேபோல் மாணவர் சேர்க்கை புறக்கணிப்பு தொடர்பாக, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வரும் நிலையில், அங்கு 47 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் எல்.கே.ஜி உட்பட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர்கள் தயங்கலாம். இருக்கும் ஆசிரியர்களை வைத்து தான், வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆங்கிலவழியில் இருந்து தமிழ்வழியில் படிக்க நினைப்பவர்களை எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.
டெல்லியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தனது 74 வயது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அவரது மகன், மருமகள் இருவரும் பெற்றொரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன் மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மகன் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களை அமைதியாக வாழ விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்