search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலைக்கழகம்"

    பிரிட்டன் நாட்டில் உள்ள பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகம் மாற்றுப் பாலினத்தவர்களின் கழிப்பறை வசதிக்காக சுமார் 30 கோடி ரூபாயை செலவிட முன்வந்துள்ளது. #BristolUniversity #neutralunitoilets
    லண்டன்:

    உலகின் பல நாடுகளில் ஆண்-பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமைகள் தேவை என உரிமைக்குரல் ஒலித்து வருகிறது. இந்த கோரிக்கையை சில நாடுகள் உடனடியாக செவிமடுத்து, செயலில் இறங்குகின்றன. பல நாடுகளில் செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த குரல் தேய்ந்து மறைந்து விடுகிறது.

    இந்நிலையில், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்  பிரிட்டன் நாட்டின் பிரிஸ்ட்டல் நகரில் இயங்கிவரும் பிரிஸ்ட்டல் பல்கலைக்கழக நிர்வாகம் மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகளை கட்டுவதற்காக 34 லட்சம் பவுண்டுகளை செலவிட முன்வந்துள்ளது.

    இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 30 கட்டிடங்களில் தற்போது இருபாலருக்கு உள்ள கழிப்பறைகளைபோல் இன்னும் நான்காண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் கழிப்பறைகளை அமைத்து தர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தின் சம உரிமை, சுதந்திரம், அணுகுமுறை சார்ந்த விவகாரங்களுக்கான அதிகாரி ஸல்லி பேட்டர்சன் தெரிவித்துள்ளார். #BristolUniversity #neutralunitoilets
    பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது. #MahatmaGandhi #ChairDespite
    புதுடெல்லி:

    நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பல்கலைக்கழகங்கள் இருக்கை அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இருக்கிறது. ஆனாலும் இதுவரை எந்த பல்கலைக்கழகத்திலும் மகாத்மா காந்தி பெயரால் இருக்கை அமைக்கப்படவில்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமைதி, அகிம்சை, சுதந்திரப் போராட்ட இயக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகிய பொருள்களில் மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு இருக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி தந்து உள்ளது. இருப்பினும் மகாத்மா காந்தி இருக்கை எந்த பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திடம் இருந்தும் திட்ட முன்வடிவும் பெறப்படவில்லை” என்று கூறினார்.

    அதே நேரத்தில், காந்திய கொள்கை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் விருப்பம் கொண்டு இருக்கின்றனர். காந்திய கொள்கை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில் ஆய்வு, பி.எச்.டி. ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

    இதற்கு 2017-18 கல்வி ஆண்டில் காந்திய கொள்கை தொடர்பாக 78 பேர் பி.எச்.டி. ஆய்வுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பதே சான்றாக அமைந்து உள்ளது. #MahatmaGandhi #ChairDespite  #Tamilnews

    நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது. #HRDMinistry #University
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.

    ஆனால் ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேர பற்றாக்குறையை காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை தவிர்த்துவிடுவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.

    இது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்டமளிப்பு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். இது பட்டதாரி மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கு பெருமை சேர்க்கக்கூடிய தருணமும் கூட” என்றார்.  #HRDMinistry #University 
    உலகின் 200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன. #University #IndianColleges
    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.

    அவை மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.

    மும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிடித்த இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

    உலகின் 1000 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 பல்கலைக்கழகங்கள் அதிகம் ஆகும்.

    சென்னை ஐ.ஐ.டி., தர வரிசையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.  #University #IndianColleges  #Tamilnews 
    அமெரிக்காவில் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது.#LarryNassar #MichiganStateUniversity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.

    இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

    பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஜேட் கபூயா, அய்ல்ஸ்டீபன்ஸ், காலசிஸ்மூரே

    அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.

    இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity
    ×