search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரு"

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவா திரு இயக்கத்தில் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடிக்க இருக்கிறார். #Sivakarthikeyan
    பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

    திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதனை உருவாக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனை இயக்குனர் திரு இயக்குவது போன்ற ஒரு படம் வெளியானது. அது பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் என்று கூறப்பட்டது. தற்போது தான் அது பெண் குழந்தைகளுக்கானது என தெரிய வந்துள்ளது. #Sivakarthikeyan

    திரு இயக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sivakarthikeyan #Thiru
    திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து இயக்குநர் திரு அவரது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

    சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல காரியத்திற்காக இந்தப் பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் இயக்குநர் திரு குறிப்பிட்டுள்ளார். கரும்பலகை, பள்ளி மாணவர்கள் இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்ச்சி ஆவணப்படமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. #Sivakarthikeyan #Thiru

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷாவின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Trisha
    திரிஷா நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இன்னும் ரஜினியுடன் மட்டும்தான் இணைந்து நடிக்கவில்லை.

    எந்த பேட்டி என்றாலும் திரிஷா ஏக்கமாக இதனை குறிப்பிடுவார். அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், திரிஷாவும் காதலியாக நடிக்கிறார். ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது.



    திரிஷா நடிப்பில் கடைசியான வெளியான மோகினி படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், 96, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #Rajinikanth #Trisha

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினிகாந்த், அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார். 

    அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.



    டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டேராடூனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ரஜினிகாந்த் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ரஜினி நடிப்பில் அடுத்ததாக `2.0' வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Simran #NawazuddinSiddiqui

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் துவங்கி இருக்கிறது.

    இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சந்திக்கும் காட்சிகளையும், 2 வாரங்களில் ரஜினி மொத்த சம்பந்தப்பட்ட காட்சிகளையும் முடித்துவிட்டு ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Simran

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10-ந் தேதி சென்னை வந்தடைந்தார். 

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளதுடன், ”படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 



    சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து காசியிலும் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் இந்த படத்தில் ரஜினியின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகத் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.#Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் வேகமாக நடந்து வருகிறது. வரும் 10-ஆம் தேதி தமிழகம் திரும்பும் படக்குழு அடுத்து விரைவில் மீண்டும் டேராடூனுக்கு செல்ல இருக்கிறது.

    படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.



    இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth #KarthikSubbaraj

    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் விமர்சனம். #MrChandramouli #Gauthamkarthik #Karthik
    அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர். 

    ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது. 



    இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார். 

    இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர். 



    அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது. 

    அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார். 



    கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். 

    கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார். 

    இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.



    இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. 

    சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `மிஸ்டர்.சந்திரமௌலி' வலுவில்லை.
     #MrChandramouli #Gauthamkarthik #Karthik

    மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் கார்த்திக் மனம் திறந்து பேசினார். #MrChandramouli #Karthik
    தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...

    நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்திலும் வாழ்ந்து இருக்கிறோம். 8 வயதிலேயே என்னை பிரிந்துவிட்டார். இப்போதுதான் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்கிறோம். கவுதம் நடிப்பதை ரசிக்க தொடங்கி விட்டேன்.

    இல்லை. அதில் அப்பா மகன் உறவே இல்லை. அது முற்றிலும் வித்தியாசமானது.

    மகன் காதல் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பொறாமை இல்லையே?

    இல்லவே இல்லை. நான் நடிக்கும் போது இப்படி எல்லாம் இல்லையே... மகன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். பொறாமை எல்லாம் இல்லை.



    உங்கள் குரலை மிமிக்கிரி பண்ணுபவர்கள் பற்றி?

    நான் நன்றாக தானே பேசுகிறேன். நான் நடிக்கும்போது இப்போது இருப்பது போல டிராக் வைத்து டப்பிங் பேச முடியாது. ஒருமுறை தவறு செய்தால் முழுமையாக பேசவேண்டும். அப்படி டப்பிங் பேசி பேசித் தான் என் குரல் அப்படி ஆனது. சிலர் என் குரலை மிமிக்கிரி செய்யும்போது அப்படியா இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

    இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக இயக்குனர் கூறினாரே?

    நான் 2002 க்கு முன்பு அப்படி இருந்ததில்லை. 2002க்கு பின் சில படங்களில் அப்படி ஆனது. நான் அப்படி இருந்திருந்தால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியுமா? சிலர் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். 32, 34 வயதில் திருமணம் செய்வார் என நினைக்கிறேன். நாளைக்கே ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொள்வதாக கூறினாலும் நான் சம்மதிக்க தயாராக இருக்கிறேன்.

    கவுதம் பற்றி அதிகம் கிசுகிசுக்கள் வரவில்லையே?

    அந்த அளவுக்கு சாமர்த்தியமாக இருக்கிறார் போல. #MrChandramouli #Karthik
    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், படக்குழுவை கலாய்த்து அரங்கத்தை சிரப்பலையால் நனைய வைத்தார். #MrChandramouli #GauthamKarthik
    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

    இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது,

    `திரு பேசும் கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியாலாகவே நடித்திருந்தார். கவுதமுக்கு இது எல்லாம் ஈசி. ஆனால் இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தும், அவர் தான் அழகாக இருப்பார். 



    படப்பிடிப்பில் கார்த்திக் சாரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவரிடம் முத்தம் வாங்க நாங்க தினமும் காத்திருப்போம். டார்லிங் என கூப்பிட்டு அவர் கொடுக்கும் முத்தம் தான் எங்களுக்கு உத்வேகம். இது எங்களுக்கு கிடைத்த பெருமை' என்றார். #MrChandramouli #GauthamKarthik

    ×