search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த சட்டவிரோதமான காப்பகத்தில் இருந்து 19 குழந்தைகளை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஆண்டனி தாமஸ் சிறுவர்கள் காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, அந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் 21 குழந்தைகள் இருந்துவந்ததாகவும், அதில் 2 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    8 சிறுமிகள் உட்பட 19 பேரை மீட்ட போலீசார், அந்த காப்பகத்தின் உரிமையாளரான ஆண்டனி தாமஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த காப்பகம் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் தாமஸ் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.

    இந்நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஆண்டனி தாமஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #JammuKashmir
    குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார். #Gujarat #CarAccident
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் உறவினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    பாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி-ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் அதில் மூழ்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் பலத்த காயம் அடைந்திருந்தனர்.

    சிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். #Gujarat #CarAccident #tamilnews 
    அறந்தாங்கி அருகே மண்ணில் புதைந்து கிடந்த பெருமாள் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மைவயல் கிராமத்தில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த திடலில் சாகுபடி சமயத்தில், காளிதாஸ் வயல்களுக்கு வேலை பார்க்க வரும் வேலை ஆட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.

    சமீபகாலமாக இயந்திரம் மூலம் சாகுபடி செய்வதால், வேலை ஆள்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் அந்த திடல் பயன்பாடுஇல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காளிதாஸ் ஜேசிபி இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தார்.

    சீரமைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஜேசிபி இயந்திரம் தோண்டி வைத்திருந்த மணல் குவியலில் சுமார் முக்கால் அடி உயரமுள்ள, சங்கு, சக்கரங்களை இருகைகளில் ஏந்தியபடி, பெருமாள் அமர்ந்திருக்கும் உலோகத்திலான சிலை கிடந்தது. சிறுவர்கள் இதுகுறித்து பெரியர்வர்களிடம் தெரிவித்தனர்.

    இதுதொடர்பான இடத்தின் உரிமையாளர் காளிதாஸ், அறந்தாங்கி தாசில் தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாள் சிலையை மீட்டனர். மேலும் சிலை ஐம்பொன் சிலையாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே மண்ணில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் அவர்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். #ThaiCave #FIFA
    சியாங்ராய்:

    தாய்லாந்து குகையில் வெள்ளப்பெருக்குக்கு இடையே சிக்கி உள்ள 12 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்கான பணியில் அந்த நாட்டின் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், போலீசார், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குகையின் வெள்ளத்தை வடியச்செய்வதற்கான பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.



    போங் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிற சிறுவன் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், “என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்திரமாக இருக்கிறேன்” என கூறி உள்ளான்.

    இன்னொரு சிறுவன், “அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் வெளியே வந்த பின்னர் அம்மா, அப்பா எனக்கு சாப்பிட மூகாத்தா விருந்து (திறந்தவெளி விருந்து) வேண்டும்” என்று கேட்டு இருக்கிறான்.



    சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எக்காபொல் சாண்டாவோங், சிறுவர்களை குகைக்கு அழைத்துச்சென்றதற்கு மன்னிப்பு கேட்டு அவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “அன்பான சிறுவர்களின் பெற்றோரே, அவர்கள் எல்லாரும் நலமாக உள்ளனர். நான் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வேன். என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமுடன் கூறி உள்ளார்.

    இதேபோன்று பயிற்சியாளர் எக்காபொலுக்கு சிறுவர்களின் பெற்றோரும் கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், அவர்மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளனர்.

    மாகாண கவர்னர் நாரோங்சாக் கூறும்போது, “சிறுவர்கள் நல்ல பலத்துடன் உள்ளனர். ஆனாலும் நீந்த முடியாது. அவர்களுக்கு முக்குளிப்பு மற்றும் சுவாச பயிற்சிகள் தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.  #ThaiCave #FIFA #Tamilnews 
    சித்தூர் அருகே 12 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சித்தூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.

    டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அவர்கள் கூறியதின் பேரின் மேலும் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×