என் மலர்
நீங்கள் தேடியது "பிரசாதம்"
- காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 6 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
- 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் சுந்தர வளநாடு வாளமர் கோட்டை மாதவமணி தவத்திரு காத்தையா சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் வாண்டையார் இருப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன் வரவேற்புரை ஆற்றினர்.
மேலும் வாளமர் கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மேடை மட்டும் பந்தல் அலங்காரம் செய்து கொடுத்தார்.
ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் தவமணி அன்னதானம் வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் கலந்து கொண்டனர்.
சித்தர் வழி தோன்றல் மாதவமணி தவத்தில் காத்யதையா சுவாமிகள் என்ற தலைப்பில் கரந்தை தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
முன்னாள் அரசு வழக்கறிஞர் நமச்சிவாயம் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.
இந்த விழா காலை 5 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கி 6 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
மேலும் 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் இந்த விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.
இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.
- சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.
திருவையாறு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.
நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
- விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டன.
பூதலூர்:
பூதலூர் அருகே கோவில்பத்து சிவன் கோவில் தெருவில் உள்ள மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இரண்டு கால யாகசாலை பூஜைகளை திருப்பூர் திருநாமலிங்கேஸ்வர சிவம் தலைமையில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பட்டாச்சாரியார், சந்தோஷ் சிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.
மண்டபார்ச்சனை, வேதிகா சார்ச்சனை, பூர்ணாகுதி, உபசார பூஜைகள், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி, த்ரவ்யாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
பின்னர், கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ஐயப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழா நடந்த சில நொடிகளில் பலத்த மழை பெய்தது பக்தர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
- சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.
- காமன் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 160 ஆண்டுகளுக்கு மேலாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவ பெருமான் தவத்தில் இருந்தார். தேவ லோகத்தில் தலைவனானவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் பலரை நாடினர். சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.
அப்போது மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்துவிடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான்.
தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார். இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதிதேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுத லாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர்மீது எந்த தவறுமில்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று முறையிட்டாள்.
ரதிதேவியின் வேண்டு தலை ஏற்ற சிவபெருமான், ரதிதேவியிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார். இந்த புராண சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் காமன் பண்டிகையையொட்டி காமன் மேடையில் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படிதாரர்களால் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காம தகனம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.
குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தர மூர்த்தி, உறுப்பி னர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராமமூர்த்தி, நாகராஜ், ராஜராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.
பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
- தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- மதுரை வாடிப்பட்டி அருகே துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
- 2-ம் நாள் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் ஆற்றங்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் 23-ந் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவிற்கு முதல் நாள் பாலன் நகர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிவப்பு பச்சை பட்டு உடுத்தி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். 2-ம் நாள் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பூஞ்சோலையை அடைந்தது. மூன்றாம் நாள் பல்லையம் பிறித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி நிர்வாக்குழு நிர்வாகிகள் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.
- வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
- 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்,ஜூன்.29-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
- கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.
தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர்.
- சபரிமலைக்கு மாலை அணிவிந்த பக்தர்களும் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள்.
- சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தரமற்ற பொருட்கள்
இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நாக சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் குற்றாலநாதர் கோவிலில் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வை செய்தனர். அப்போது அங்கு சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது. மேலும் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, 21/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட தரமற்ற பல்வேறு பிரசாதம் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர் .
ஏற்கனவே குற்றாலத்தில் பல ஓட்டல்களில் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தரம் இல்லாத உணவுகளை அழித்த நிலையில் தற்போது குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற உணவுப் பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளளர்.
- நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிபுரம் கிராமத்தில் நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரிபுரம், காலாங்கரைப்பட்டி, வைரவபுரம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரி சையாக நடந்தது. குன்றக் குடி பொன்னம்பல அடி களார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.
விழா குழு பணிகளில் குமாரசாமி, தர்மசீலன், கண்ணன், துர்வாசன், கனகரத்தினம், சண்முகம், உமாபாலன், சடையாண்டி, சாந்ததேவன், செல்வ ராஜ்,யசோதரன், ஜெக நாதன், சிவபெருமாள் மாரி யம்மாள் மற்றும் வளர்பிறை விளையாட்டு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் கண்டவராயன் பட்டி காவல் ஆய்வாளர் அய்ய னார் தலைமையில் காவ லர்கள் ஈடுபட்டனர்.
வேலங்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள், லட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டது. நேற்று கணேஷ், குருசாமி குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரணமு டையார் மகரிஷி கோத்திர பங்காளி வகையறாக்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.