என் மலர்
நீங்கள் தேடியது "slug 175048"
- ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, சிமெண்ட் இருக்கை, மான், முயல், ஒட்டக்கச்சிவிங்கி போன்ற ஆளுயர சிமெண்ட் சிலைகள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாடக்கூடிய சீசா போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில், ஏராளமானோர் வந்து, பொழுதை குதூகலமாக கழித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதாலும், காவிரில் தற்போது நீர்வரத்து குறைந்து இருப்பதாலும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பூங்கா திறக்கப்பட்டு இருக்கும் என ஆர்வமாக வந்த, சுற்றுலா பயணிகள் பூங்கா திறக்கபடாததால் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.
- வண்டி ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
- பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.
தஞ்சாவூர்:
செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல்லுக்கும் இயங்கி வந்த இரு ரெயில்களை இணைத்து செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலாக, தீபாவளி நாளான நேற்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி தீபாவளி நாளான நேற்று மயிலாடு துறை- செங்கோட்டை ரெயில் சேவை (வண்டி எண் 16847) தொடங்கியது.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடு துறை (வண்டி எண் 16848) ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
இந்த ரெயில் தினமும் மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருச்சி, மதுரை ,விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல் தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு சென்று அடைகிறது.
இந்த நிலையில் தீபாவளி நாளான நேற்று முதல் தொடங்கிய இந்த ரெயில் சேவையானது மயிலாடுதுறையில் புறப்பட்டு மதியம் 12.45 தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது.
அப்போது ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தி ன் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், நிர்வாகிகள் வழக்கறிஞர் உமர் முக்தார், பேராசிரியர்கள் திருமேனி, செல்வ கணேசன், ஹாஜா மொகைதீன் தலைமையில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வண்டி ஓட்டுன ர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.
இது குறித்து சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது,
கோவிட் 19 காலத்திற்கு முன்பு தஞ்சாவூர் தடத்தில் இயங்கிய பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இவற்றை திரும்ப இயக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை பிரிவில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தோம்.
தொடர்ந்து அண்மையில் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பு மயிலாடுதுறை- திண்டுக்கல் தடத்தில் இயக்கிய ரெயில் செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
- கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
- பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.
வீரபாண்டி :
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.
ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவிகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
- கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மணலி, ஆலத்தம்பாடி, பல்லாங்கோயில், கலப்பால், பாமணி, நெடும்பலம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வெளியூருக்கு செல்வ–தற்காக பயணிகள் அதிகளவில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
ஆனால், கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர். மேலும், பஸ்சுக்காக பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, விழா காலங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
- தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.
பாபநாசம்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி செகந்திராபாத்-தஞ்சாவூர் இடையே சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண் 07685 செகந்திராபாத்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15), திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வழியாக மறுநாள் ஞாயிற்று கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7.00 மணிக்கு சென்றடையும்.
மறு மார்கத்தில் வண்டி எண் 07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (7.19 காலை) கும்பகோணம் (7.48 காலை) சென்னை எழும்பூர் (பகல் 2.00 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும். கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது பண்டிகைக்கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லயன் பகுதிக்கு தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.
இத்தகவலினை திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
- பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
- குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடைகின்றனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கல்லணையை சுற்றி பார்க்க தினமும் மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கல்லணை பாலங்கள், குழந்தைகள் பூங்கா, கரிகாலன் பூங்கா,கரிகாலன் மணிமண்டபம் ,ஆகிய இடங்களை பார்வையிட்டு மகிழ்வர்.கல்லணை பாலங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடையும் நிலை உள்ளது.
உடனடியாக கல்லணை பாலங்களில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
- திருவையாறு பகுதி சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக போக்குவரத்து சரிசெய்ய வேண்டியது அவசியம்.
திருவையாறு:
திருவையாறு நகரத்தில் தேசிய- மாநில நெடுஞ்சாலையும் இணைந்து அமைந்துள்ளது.
இதனால், உள் மாவட்டத்திலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும்,
உள் வட்டார மணல் குவாரி மற்றும் செங்கல் காலவாய்களிலிருந்தும் மணல் மற்றும் செங்கல் ஏற்றிய கனரக லாரிகளும் அதிகமாக ஓடிக் கொண்டிரு.கின்றன. அனைத்து வகையான வாகனங்களும் காலையிலிருந்து இரவு வரையில் இடைவெளியில்லாமல் பயணிப்பதால் திருவையாறு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது.
இதனால், பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாயிலிருந்தும் கல்லணை பூம்புகார் மாநில நெடுஞ்சாலையிலிருந்தும் ஒரே நேரத்தில் திருவையாறு நகருக்குள் வாகனங்கள் பயணிக்கும் போது திருவையாறு சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஸ்தம்பிக்கும் நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து வாகனங்களை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்த வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை அனுசரித்தும், ஆம்புலன்சுகள் முதலிய அவசர கால ஊர்திகள் போக்குவரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டும் இச்சாலையருகே அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பாடவகுப்புகளுக்கு இடையூறாக அமையும் வாகன இரைச்சல்களை கட்டுப்படுத்தவும், மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாகவும் போக்குவரத்து சரிசெய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, திருவையாறு நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள சாலையோர தரைக் கடைகளையும் தள்ளுவண்டிக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தவும், நெருக்கடியான கடைத்தெருச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடைசெய்தும் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
- மதுரை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
- பெரும்பாலான ரெயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.
மடத்துக்குளம் :
திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில், மதுரை ெரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அகல ெரயில்பாதை பணிகள் துவங்கும் முன், இந்த நிலையம் முழுமையாக இயங்கி வந்தது.அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று ெரயில் சேவை துவங்கிய பிறகு, இந்த ெரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ெரயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.இதனால் அப்பகுதியை சேர்ந்த பயணிகள் உடுமலை அல்லது பழநிக்குச்சென்று ெரயில் ஏற வேண்டியுள்ளது.
இவ்வாறு பயன்பாடு இல்லாததால், மடத்துக்குளம் ரெயில் நிலையம் தற்போது பரிதாப நிலையில் உள்ளது.டிக்கெட் கவுன்டரை உள்ளடக்கிய கட்டடம் சிதிலமடைந்து மேற்கூரையில் செடிகள் முளைத்து வருகிறது.பயணிகள் காத்திருக்கும் பிளாட்பார்ம் பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு பயணிகள் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.கழிப்பிடமும் நிரந்தரமாக பூட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரெயில் நிலையம் என்பதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு அவ்விடம் படுமோசமான நிலையில் உள்ளது.
மடத்துக்குளம் புதிதாக தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், கோர்ட்டு என தாலுகாவுக்குரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல் அமராவதி பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு விளைகிறது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் நூற்பாலைகள், காகித ஆலைகள், தீவன உற்பத்தி தொழிற்சாலைகள் என 25க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இப்பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, இயற்கை மற்றும் தொழில் வளம் மிக்க பகுதியில், ெரயில் சேவை கிடைக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் இயக்கப்படும் அனைத்து ெரயில்களையும், மடத்துக்குளத்தில் நிறுத்த வேண்டும். மேலும், டிக்கட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன.
- காவலர் பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடுமலை :
உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இந்நிலையில் பழனி ெரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தல் படி காவலர் ரகு உடுமலை ரெயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், மேலும் ரெயிலை விட்டு இறங்கும்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.
சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
- சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
- இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.
தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.
இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.
- கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
- தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோவை
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்றில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காத்திருந்தும் பஸ்கள் வராததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் வைத்தனர்.
பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கோவையில் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.