search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • புகைப்படம் எடுத்தவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், கோவைக்கு 3-வது போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கெத்தை வழியாக கோவைக்கு சென்று வருகின்றன. கோவையில் இருந்தும் தினசரி 4 தடவைகள் மஞ்சூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார்-சுற்றுலா வாகனங்களும் சென்று வருகிறது.

    மஞ்சூர் போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள கெத்தை, அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு பழ மரங்கள் அதிகம் உண்டு. எனவே இங்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வன விலங்குளை பார்க்க முடியும். அந்த நேரங்களில் சாலையோரமாக திரியும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒருசிலர் வனவிலங்குகளை நேரில் கண்ட பிரமிப்பில், அச்சத்துடன் கூச்சலிடுகின்றனர்.

    இது விலங்குகளுக்கு தொந்தரவு தருகிறது. எனவே முள்ளி வழியாக, சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் காரமடை மேட்டுப்பாளையம், காட்டேரி வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்படுகிறது.

    எனவே குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் தற்போது 6 காட்டு யானைகள் கெத்தை பகுதியில் சாலையோரம் முகாமிட்டு உள்ளன. எனவே அவற்றை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

    எனவே அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் சாலையை கவனமாக பயன்படுத்தி, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை விடுத்து வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
    • தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    ஓங்கோல்:

    ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது.

    பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது.

    அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிறகு அந்த ரெயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    • மதுரையில் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்

    மதுரை

    தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் இறுதி ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதம் விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்றி ருந்தனர்.

    மேலும் பலர் குடும்பத்தினர் சுற்றுலாவும் சென்றனர். இதன் காரணமாக கோடை விடுமுறை விடப்பட்ட நாளில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பள்ளி விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (7-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக வெளியூர்களில் தங்கியிருந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு ஆர்வம் காட்டினர். இதனால் மதுரை ரெயில் நிலையம் மற்றும் மாட்டுத்தாவணி, ஆரப்பா ளையம் பஸ் நிலையங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திரண்டனர்.

    நேற்று ஞாயிற்க்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு போகும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறியதை காண முடிந்தது.

    இன்று காலை மதுரை வழியாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ரெயில் நிலைய பிளாட் பாரங்களில் ெபாதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு வார காலம் இதே நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பல மாவட்டங்களில் நூறு டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருவதால் கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.

    • கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.
    • யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.

    சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை.

    சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இந்த பகுதிக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

    அவர்கள் காட்சி முனை பகுதியில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி, தவளை மலை காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் இதன் அருகே உள்ள யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.

    மரங்களின் நடுவில் ஊடுறுவி வரும் சூரிய கதிர்களின் வெளிச்சத்தில் வானுயரந்து நிற்றும் மரங்களின் பின்னனியில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

    மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் இறங்கினர். அதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
    • சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஒன்று இன்று காலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்பொன்விளைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ், திங்கள்நகர் பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் இறங்கினர். அதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

    பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, திங்கள்நகர்-குளச்சல் ரோட்டில் டெம்போ வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், ெடம்போவும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் முன் பக்க கண்ணாடி உடைந்து விழுந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
    • சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் மேலூரில் நின்று சென்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2-வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் நின்று சென்றது. அதில் இருந்து மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரெயில்களும் மேலூா் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
    • நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

    முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலில் ஆனந்த குளியல் போட்டனர்
    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரி, மே.20-

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்ட னர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியா குமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழு கை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்க ளான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, விவேகா னந்தபுரத்தில் உள்ள ராமா யண தரிசன சித்திர கண் காட்சி கூடம், பாரத மாதா கோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடு முறை நாளான இன்று சுற்றுலா தலங்கள்களை கட்டி உள்ளது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • போலீசார் முன்னிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பயணிகள் புகார் அளித்தனர்.
    • விதிகளை மீறிச்செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

    மதுரை

    மதுரை சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. இருந்த போதிலும் போக்குவரத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. அதன் அருகில் போலீசார் கண்காணிக்கும் இடம் உள்ளது. இந்த நிலையில் சிக்னல் பகுதியில் வரும் பல வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போதும் நிற்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சாலை யை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    ஒரு சில நேரங்களில் மட்டுமே போலீசார் சிக்னல் பகுதியில் நின்று வாகனங்கள் விதிமுறை மீறலை தடுக்கின்றனர். பல நேரம் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

    மேலும் இன்றைய வாகன ஓட்டிகள் பலர் நடந்து செல்பவர்களுக்கு வழி விடும் மனநிலை இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறை மீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸ்சை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸ்சை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×