search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • பாலக்காடு டவுன்-ஈரோடு ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும்.
    • ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பாலக்காடு டவுன்-ஈரோடு செல்லும் முன்பதிவில்லா ரெயில் (எண்.06818) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் தினமும் பாலக்காடு டவுனில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடையும். கோவைக்கு 4.17 மணிக்கும், வடகோவைக்கு 4.27 மணிக்கும், பீளமேடுக்கு 4.37 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 4.42 மணிக்கும், இருகூருக்கு 4.49 மணிக்கும், சூலூருக்கு 4.57 மணிக்கும், சோமனூருக்கு 5.09 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 5.19 மணிக்கும், திருப்பூருக்கு 5.29 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 5.49 மணிக்கும், ஈரோடுக்கு 7.10 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் ஈரோடு-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா ரெயில் (எண்.06819) வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனை காலை 11.45 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஊத்துக்குளிக்கு காலை 7.59 மணிக்கும், திருப்பூருக்கு 8.13 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.24 மணிக்கும், சோமனூருக்கு 8.34 மணிக்கும், சூலூருக்கு 8.44 மணிக்கும், இருகூருக்கு 8.51 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 8.56 மணிக்கும், பீளமேடுக்கு 9.04 மணிக்கும், வடகோவைக்கு 9.14 மணிக்கும், கோவைக்கு 9.30 மணிக்கும் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் தினமும் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 9.45 மணிக்கு சென்றடைந்தது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 10.15 மணிக்கு சென்றடையும் வகையில் நேர மாற்றம் செய்யப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளிக்கு 8.35 மணிக்கும், திருப்பூருக்கு 8.49 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.59 மணிக்கும், சோமனூருக்கு 9.09 மணிக்கும், சூலூருக்கு 9.19 மணிக்கும், இருகூருக்கு 9.27 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 9.34 மணிக்கும், பீளமேடுக்கு 9.41 மணிக்கும், வடகோவைக்கு 9.49 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்று சேரும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
    • ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சேலம்:

    விருத்தாசலம்-சேலம் இடையே பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ரெயில் பயணிகள், சேவை சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று இனி ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சேலம்-விருத்தாசலம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. ஆத்தூர் ரெயில்நிலையத்துக்கு இந்த ரெயில் இன்று காலை 7.05 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து ரெயிலுக்கு ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது.
    • இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, நாமக்கல், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது. இதனால் கொல்லிமலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.

    இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வனச்சர கர் சுப்பராயன் கூறுகையில், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் 200 அடி உயரத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தடை மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றார்.

    • நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.
    • இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினமும் பல்வேறு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூருக்கும் அரசு பஸ்கள் சென்று வருகிறது.

    திருச்செந்தூர்

    நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ்கள் கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சோனகன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.

    இதில் நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.

    காயல்பட்டினம் வழியாக

    இந்த அரசு பஸ்கள் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக தினமும் காலையில் 9.15, 11.45, மதியம் 1.45, 2.45, 4.15, மாலை 5 மணி மற்றும் இரவு நேரங்களில் இயக்கபட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக காலை 11.45, 1.45, 2.45, 4.15 ஆகிய நேரங்களில் இயங்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    பயணிகள் வேதனை

    இதனால் காலை 9.30 மணி அரசு பஸ்சை விட்டால் மாலை 5 மணிக்குதான் அடுத்த அரசுபஸ் உள்ளது.

    இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சிலர் அவசரம் கருதி நகர பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது.

    இதனால் தங்களுக்கு கூடுதல் பண செலவு மட்டுமின்றி அதிகநேர பயணம் செய்ய வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே முன்புபோல பிற்பகல், மதியம் நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பயணிகளுக்கான தங்கும் கூடம் அமைக்கப்படும் என கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்தார்.
    • பாதுகாப்புக்கு உள்ள தமிழக ரெயில்வே போலீசாருக்கு அறை இல்லை என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    தேசிய ரெயில் பயணிகள் சேவைக் குழு உறுப்பினா்கள் கா்நாடகத்தைச் சோ்ந்த சிவராஜ்காந்த்கே, கேரளத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் பரமக்குடியைச் சோ்ந்த பா.ஜ.க. பிரமுகா் பொன்.பாலகணபதி ஆகியோா் ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு ெசய்தனர்.

    சேவைக்குழுவினரிடம் வா்த்தக சங்கம், அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், சென்னைக்கு ராமேசுவரத்தில் இருந்து பகலில் ரெயில், பயணிகளுக்கு கூடுதல் நடைமேம்பாலம், ரெயில் பெட்டிகள் நிற்குமிடம் அறியும் மின்னணு திரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மனு அளித்தாா்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவா் கதிரவன், கோரிக்கை மனு அளித்தாா். அதில் ராமநாதபுரம் நகருக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். உத்தரகோசமங்கை, ஏா்வாடி, திருப்புல்லாணி, தேவிபட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனா். அவா்கள் தங்குவதற்கான வசதி இல்லை. பாதுகாப்புக்கு உள்ள தமிழக ரெயில்வே போலீசாருக்கு அறை இல்லை என்று தெரிவித்தார்.

    அதற்கு பதில் அளித்த, மதுரை ரெயில்வே கோட்ட மேலாளா் வெங்கட்சுப்பிரமணியன், ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடம் அமைக்கப்படும். மேலும், ரெயில் பெட்டி நிறுத்துமிடம் அறியும் மின்னணு திரை அமைக்க 7 முறையும், சிற்றுண்டி அமைக்க பலமுறையும் ஒப்பந்தம் கோரியும் யாரும் வரவில்லை. கூடுதல் ரெயில்களும், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட ரெயில்களும் இயக்கப்படும். சிறிய ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட ரெயில்கள் நின்று செல்லவும், பயணி களுக்கான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

    சேவை குழு உறுப்பினா் பொன்.பாலகணபதி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெயில் பயணிகளுக்கான வசதிகள் அனைத்து நிலையங்களிலும் நிறைவேற்றி தரப்படும் உள்ளூா் பொருள் விற்ப னைக்கான கருவாடு விற்பனை லெமூரியன் மையம் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பா.ஜ.க. நிர்வாகிகள் தரணி முருகேசன், மணிமாறன், வழக்கறிஞர் கணேஷ், பழனி மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனா்.

    • அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர்.
    • 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது.

    அவினாசி :

    திருப்பூர் பழைய பஸ்டாண்டில் இன்று காலை 9 மணியளவில் அரசு பஸ்சும், தனியாருக்கு சொந்தமான பஸ்சும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவினாசி நோக்கி கிளம்பியுள்ளது.

    அப்போது இரண்டு பஸ்சுகளும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர். இதில் அரசு பஸ்சை தனியார் பஸ் முந்தி செல்ல விடாமல் மோதுவது போல வந்துள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயற்சி செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அரசு பேருந்து டிரைவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி தனியார் பஸ் டிரைவர் மீது புகார் தெரித்தார்.

    இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் தனியார் பஸ் டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பாபநாசம்:

    திருச்சி பிச்சாண்டவர் கோயில் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஜவகர்லால்நேரு. இவரது மனைவி பாக்கிய ராணி (வயது 65). இந்நிலையில் இன்று காலை ஜவஹர்லால் நேரு தனது மனைவி பாக்கியராணி மற்றும் மகன், மருமகள், பேர குழந்தைகளுடன் ஒரு காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு புறப்பட்டார்.‌ காரில் 6 பேர் இருந்தனர்.

    அந்த கார் தஞ்சை அருகே உள்ள நெடார் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக காரும், ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்தப் பயங்கர விபத்தில் கார் ,ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். காரில் இருந்த மற்ற 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேதிதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாக்கியராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்டஇரண்டு பேரையும் மீட்டு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்த மூன்று பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சை -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மதுரையில் பஸ்சுக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
    • தனியார் டவுன் பஸ்களை இயக்க கோரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பிற நகரங்கள் போல் தனியார் டவுன் பஸ்கள் இயக்க மதுரையில் அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் மதுரை சுற்றுவட்டார மக்களும், மதுரை நகர மக்களும், மதுரைக்கு வரும் மக்களும் அரசு டவுன் பஸ்களையே நம்பி உள்ளனர்.

    அரசு டவுன் பஸ்களில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.

    குறிப்பாக பரவை, வாடிப்பட்டி, அண்ணா பஸ் நிலையம், பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

    ஒரே வழித்தடத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் இருக்கைகள் காலியாக அதிக அளவில் தொடந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    எனவே பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மதுரையில் தனியார் டவுன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லை பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் கேரள எல்லைக்கு உட்பட்ட அச்சன்கோவிலில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. அங்கு 4,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

    கும்பாவுருட்டி அருவி

    இங்குள்ளவர்கள் ரப்பர் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அய்யப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இங்கு அமைந்துள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி கொள்ளை கொள்ளும் அழகை கொண்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவிக்கு மேக்கரை சோதனை சாவடி அருகில் அமைந்துள்ள மணலாறு வழியாக செல்ல வேண்டும். செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    1,200 அடி உயரம்

    மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வடபுறத்தில் தரைமட்டத்தில் இருந்து 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி அச்சன்கோவிலிலுக்கு செல்லும் வழியில் 12 கொண்டைஊசி வளைவு கொண்ட குறுகிய மலை வழியாக செல்லும் சாலையில் இந்த அருவி அமைந்துள்ளது.

    இதன் அழகை காணவும், ஆனந்தமாக குளியல் போடவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த அருவியானது முழுமையாக காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அருவிக்கு செல்லும் பாதையின் இருபுறத்திலும் அடர்ந்த மரங்கள் இருக்கும்.

    குளிக்க தடை

    இங்கு வாழும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியானது பல்வேறு மூலிகைகளை சுமந்து வருவதால், மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருந்தும் கடந்த 2018-ம்ஆண்டு அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் கவனக்குறைவால் நிலை தடுமாறி விழுந்ததால் அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.

    மீண்டும் அனுமதி

    இந்நிலையில் தற்போது தடைவிதிக்கப்பட்ட அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக-கேரள எல்லை பகுதி வரையிலான அருவி சாலையானது மிகவும் மோசமாக உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. மேலும் நடுக்காட்டில் அருவி உள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏதேனும் நேரிட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழி இல்லாமல் போய்விடுகிறது.

    கோரிக்கை

    எனவே அருவிக்கு அருகிலேயே முதலுதவி அறைகள் அமைத்து டாக்டர்களை நியமிக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வர அருவி பகுதியில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    தமிழக எல்லையான மேக்கரை வரை தென்காசியில் இருந்து பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு தென்காசியில் இருந்து கும்பாவுருட்டி அருவி வரை போக்குவரத்து வசதி நீடித்தால் சுற்றுலா பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளா நீர்வளத்துறை சார்பில் தற்போது அருவி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் 2 மாநில பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி, ஜூன்.30-

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடங்கவுள்ளது.
    • ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், வனப் பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளை பார்வையிடவும், ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மூங்கில் குடில் விடுதிகள்

    மேலும் அங்கு தங்கி பார்வையிட, சூழல் சுற்றுலா திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட விடுதிகள் உள்ளன. மோட்டார் படகு பழுதானதால் 3 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படகை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் முட்டல் ஏரி அழகை ரசிக்க, ரூ. 7 லட்சம் ரூபாயில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் மேற்கூரை கொண்ட விசைப்படகு, புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இந்த விசைப்படகு ஜுலை மாதத்தில் இயக்கப்பட உள்ளது.

    விசைப்படகில் என்ஜின் பொருத்தப்பட்டு அவை நிறுத்தப்படும் இடங்கள் தயார் செய்த பின் அதனை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முட்டல் ஏரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×