search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், ஆகிய 3 நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும், இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படுகிறது.
    • குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது.

    உடுமலை,

    திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும். பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு இடையே இருந்த மீட்டர்கேஜ் ெரயில் பாதை கடந்த 2009ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ெரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகளால் 5ஆண்டுகளாக உடுமலை வழியாக ெரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. அகல ெரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலை வழியாக இந்த வழித்தடத்தில் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை ரெயில் நிலையத்தில் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகளுக்கு கிடைப்பதில்லை .இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரெயில்நிலைய வளாகத்தின் அலுவலகத்தின் வெளிப் பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ரெயிலில் வரும் பயணிகள் அங்கு சென்று தண்ணீர் குடித்து வர முடியாது .அதனால் ரெயில் நிலைய அலுவலக வெளிப்புறம் உள்ள குடிநீர் குழாயை அலுவலகத்தின் உட்புறம் உள்ள ரெயில்வே வளாகம் வரை குடிநீர் குழாய் அமைத்து நீட்டித்து அங்கு தொட்டி வைத்தால் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

    இந்த ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 2018 -19 ம் நிதியாண்டில் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது.அதில் 4குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் இந்த எந்திரம் பழுதாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இது பராமரிப்பில்லாமல் பயனின்றி காட்சி பொருளாகவே உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன .ஒவ்வொரு பிளாட்பாரத்தில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன .இந்த குடிநீர் குழாய் களுக்கு ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது. இந்த கிணற்றில் உள்ள பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். காலி பாட்டில்களை அந்த கிணற்றில் போட்டு விடுகின்றனர்.இரவு நேரத்தில் குடித்து விட்டு குடிநீர் குழாய்களை பிடித்து அசைக்கின்றனர் .இதில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து உள்ளதால் அவை பயன்படுத்த முடியாதபடி உள்ளது .அதனால் தண்ணீர் வருவதை தவிர்க்க இரண்டு குழாய்களையும் கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளன.இதனால் இரண்டு இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது. அந்த இரண்டு குழாய்களில் தண்ணீர் வருவதில்லைஇதனால் உடுமலை ெரயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது .அதனால் ெரயில் பயணிகள் உடுமலை ெரயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.உடுமலை ரெயில் நிலையத்தில் நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரெயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுது பார்த்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் தினமும் அதிக அளவில் வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் பஸ், வேன், கார், பைக் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கிறார்கள் மற்றும் படகு சவாரி நடைபெறும் இடத்தில் நல்ல கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து முடித்துவிட்டு பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    மாத்தூர் தொட்டில் பாலம் இரு மலைகளுக்கு இடையே விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல காமராஜ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு நடந்து சென்று மலைகளின் அழகை கண்டு களிக்கிறார்கள்.

    அதன் பிறகு கீழ் பகுதிக்கு வந்து ஆனந்த குளியல் போடுகிறார்கள் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறுவர் பூங்காவை சீர மைத்து வைத்து இருக்கி றார்கள். அதில் விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்.

    • கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளான கோதையார், குற்றியார் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பையை வனச்சரக ஆய்வாளர் ராஜன் வழங்கினார்

    • பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வீ.கே.புதூர்:

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இந்த நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் குடம் எடுத்தும், பாதயாத்திரையாக சென்று வழிபடுவார்கள்.

    இந்த நாட்களில் பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 8.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. அதன்பின்னர் பகல் முழுவதும் இந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.

    எனவே இந்த ரெயிலை காலை 9. 15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு 10.35 மணிக்கு சென்றடையும் வகையிலும், மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, நெல்லைக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சிறப்பு ரெயிலால் செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த முருக பக்தர்கள் பயன் அடைவார்கள்.

    துபாயிலிருந்து அமெரிக்கா சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlyEmirates
    நியூயார்க்:

    துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் இன்று நியூயார் ஜே.எப்.கே விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் 521 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் 100-க்கும் அதிகமான பயணிகள் தங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த இந்த விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது 10 பயணிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூற அவர்கள், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். எனினும், எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
    ஜப்பான் புல்லட் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    டோக்கியோ:

    ஜப்பானில் நேற்று இரவு டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    இரவு 10 மணியளவில் (இந்திய நேரப்படி பகல் 1 மணி) ரெயிலில் பயணம் செய்த மர்மநபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரி குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள் ஓடும் ரெயிலில் அங்கும் இங்குமாக ஓடி பதுங்கினர். பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆண் பயணி ஒருவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் காயம் அடைந்த 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அந்த ரெயில் ஒட்டாவா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த போலீசார் ரெயிலில் ஏறி கத்திகுத்து நடத்திய மர்ம நபரை கைது செய்தனர்.

    அவனது பெயர் இச்சிரியோ கொஜிமா (22). அவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
    ×