search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
    • தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.
    • பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.

    உடுமலை :

    பிரதமரின் விவசாய கவுரவ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு செப்டம்பர் 12வது தவணையாக,ரூ.2 ஆயிரம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தக்கடவு கிராமத்தைச்சேர்ந்த 216 விவசாயிகளும், அணிக்கடவு 265, ஆத்துக்கிணத்துப்பட்டி 387, தொட்டம்பட்டி 129, குடிமங்கலம் 230, இலுப்ப நகரம் 165, கொண்டம்பட்டி 238, கொங்கல்நகரம் 227, கொசவம்பாளையம் 99, கோட்டமங்கலம் 294.கும்பம்பாளையம் 77, மூங்கில் தொழுவு 183, முக்கூடுஜல்லிபட்டி 115, பொன்னேரி 192,பெரியபட்டி 167, பண்ணைக்கிணறு 90, பூளவாடி 121, புதுப்பாளையம் 78, புக்குளம் 277, சோமவாரபட்டி 221, வடுகபாளையம் 211, வாகத்தொழுவு 147, வீதம்பட்டி 100, விருகல்பட்டி 125 என, மொத்தம், 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.

    அதே போல் ஏறத்தாழ, 1,300 விவசாயிகள், தங்களது நில ஆவணங்களான, சிட்டா, ஆதார்எண் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை, தங்களது கிராமத்திற்குட்பட்ட, உதவி வேளாண் அலுலர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக வழங்கவில்லை.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:- பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.நில ஆவணங்களின்நகல்களை வேளாண் உதவி அலுவலர்களிடம் கொடுத்து, சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் பதிவேற்றம் செய்யாமல், 4,389 விவசாயிகள் உள்ளனர்.எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணுடன்இணைந்த செல்போன் போன் எண் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை, அருகிலுள்ள, அரசு பொது சேவை மையம், தபால் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று, கண்டிப்பாக பதிவை புதுப்பிக்க வேண்டும்.புதுப்பிக்கவில்லை என்றால், ஊக்கத்தொகை கிடைக்காது. எனவே புதுப்பிக்க தவறிய விவசாயிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.அதே போல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 1,300 விவசாயிகள் நகல்கள் வழங்காமல் உள்ளதால் அப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி உதவி பெற ஆவணங்கள் புதுப்பித்தல் அவசியமாகும். வருமான வரி செலுத்தாத அரசுப்பணியாளர் அல்லாத விவசாய குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பி.எம்., கிஷான் திட்டத்தில் பயன் பெற முடியும்.எனவே, தகுதியான அனைத்து விவசாயிகளும் இ.கே.ஒய்.சி., வழியாக ஆதார்எண்ணுடன் இணைந்த செல்போன் எண்ணை உடனடியாக புதுப்பித்து ஊக்கத்தொகையை தொடர்ந்துபெற்று பயனடையலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உடுமலை மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16ந் தேதி காலை 10 மணி அளவில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட்டாட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயி ஜல்லிக்கட்டு காளை கன்றுக்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு கருப்பன் என்ற பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.
    • இறந்துபோன காளையின் உடலை தனது சொந்த தோட்டத்திலேயே அடக்கம் செய்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சோமசுந்தரம். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு 10 மாதம் ஆன ஜல்லிக்கட்டு காளை கன்றுக்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு கருப்பன் என்ற பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார். 18 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி காளை இறந்தது.

    பின்னர் இறந்துபோன காளையின் உடலை தனது சொந்த தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். பிறகு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10ந்தேதி காளை அடக்கம் செய்த இடத்தில் காளையின், உருவப்படத்தை வைத்து குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறார்.

    மேலும் இறந்துபோன காளை மாட்டுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு நினைவு தினத்திற்குள் கோவில் கட்டுமான பணி கட்டி முடிக்கப்பட்டு விடும் என விவசாயி சோமசுந்தரம் தெரிவித்தார்.

    • கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.
    • ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிடெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகு படிக்காக மேட்டூர்அணை முன் கூட்டியே திறக்கப்பட்டது.

    இதனால்கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இலக்கை தாண்டி சாகுபடிநடந்து ள்ளது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தஞ்சை அருகே ராமநாதபுரம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பல பகுதிகளில் 5 வாரங்கள் கடந்த நாற்றுக்கள் செழுமை யாக வளர்ந்து நிற்கிறது.

    வளர்ந்துள்ள குறுவை பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயி சதீஷ் என்பவர் தனது சாகுபடி வயலில் ஆடுதுறை 36 வகை நெல்லை பயிரிட்டுள்ளார்.

    பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை மேற்கொள்ளும் இவர் ரசாயன உரத்திற்கு பதிலாக ரெட்டிப்பாளையத்தில் ஆட்டு கிடை போட்டுள்ள வர்களிடம் இருந்து ஆட்டுப்புழுக்கை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.

    இதற்காக பேய்வாரி தரைப்பாலத்தில் ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.

    இதுகுறித்து சதீஷ் கூறுகையில், பல ஆண்டு களாக இயற்கை வழி சாகுபடியை செய்து வருகிறேன்.

    ரசாயன உரங்கள் தெளிக்காமல் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்களிடம் மொத்தமாக ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    நாற்று நட்டதில் இருந்து இரண்டாவது முறையாக தற்போது இயற்கை உரம் தெளிக்கிறேன் என்றார். இவரை போல் ஏராளமான விவசாயிகளும் இயற்கை உரங்கள் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    • ராஜபாளையம் அருகே மனைவி கறிச்சோறு சமைத்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர்ராஜபுரம், இந்திராநகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 69) விவசாயி. இவர் நேற்று தனது மனைவியிடம் கறிக்குழம்பு வைத்து சோறு தரும்படி கேட்டுள்ளார்.

    அப்போது வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த அவரது மனைவி ''நீங்களே சமைத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்'' என்று கூறவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாடசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகன் ஜெயபிரகாஷ் என்பவரிடம் ''நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை''. தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து விட்டேன்.

    உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் விஜயபிரகாஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மனைவி கறிச்சோறு செய்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
    • 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில்,பல்லடம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில்100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஊக்கத்தொகை திட்ட கைரேகை பதிவு செய்து புதுப்பித்துக் கொண்டனர். இதில் பா.ஜ.க.,நிர்வாகிகள் நித்யா ஆனந்தகுமார்,லதா, ஆதி கேசவன்,மகேஷ், குப்புராஜ், அய்யப்பன், திரிலோகசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வாகைகுளம், கணக்கன் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42), விவசாயி. இந்த நிலையில் பாலமுருகன் இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவரை ஒரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

    காண்டை ரைஸ் மில் அருகே பாலமுருகன் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பாலமுருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேரும் இரும்பு கம்பியால் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகனை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிந்துபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கி பணம் பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது ஈசல்திட்டு மலைவாழ் கிராமம். ஜல்லிபட்டி ஊராட்சி லிங்கம்மாவூர் சமவெளிப்பகுதியிலிருந்து 1,208 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.2மலைத்தொடர்களின் இடைவெளியில் அமைந்துள்ள இந்த கிராமத்தையொட்டி 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அக்கிராம மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.குறிப்பாக 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கம்பு, ராகி, மொச்சை ஆகிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பிற சாகுபடி மேற்கொள்ளும் போது, சமவெளிப்பகுதிக்கு விளைபொருட்களை கொண்டு வர வழித்தடம் இல்லை. எனவே அப்பகுதியினருக்கு மொச்சை சாகுபடி மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் கடந்த, 2009ல் அப்பகுதியினரின் விவசாய சாகுபடி பணிகளுக்காக அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

    தொடர் கோரிக்கை அடிப்படையில் சமீபத்தில் ஈசல்திட்டு மலைவாழ் கிராமத்துக்கு 2 பவர் டில்லர் எந்திரங்களை அரசு ஒதுக்கீடு செய்தது.அங்குள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் குழு வாயிலாக எந்திரத்தை பயன்படுத்தி சமீபத்திய மழைக்குப்பிறகு, சாகுபடிக்கு விளைநிலத்தை தயார் செய்துள்ளனர். ஆனால் விதைப்புக்கு தேவையான மொச்சை விதை கிடைக்காமல் பணிகள் முடங்கியுள்ளது.

    குறித்த நேரத்தில் விதைப்பு செய்யாவிட்டால், போதிய விளைச்சல் கிடைக்காது என்பதால் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ஈசல் திட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் கூறியதாவது:- பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக, எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளவில்லை. தற்போது பவர் டில்லர் எந்திரம் வழங்கியுள்ளதால் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தினோம். ஆனால் மொச்சை விதை கிடைக்கவில்லை.எனவே வேளாண்துறை வாயிலாக விதை வழங்கினால்,நூற்றுக்கணக்கான ஏக்கரில் இச்சாகுபடி மேற்கொள்ள முடியும். எங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கும்.அதே போல் சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கான ஸ்பிரேயரும் மானியத்தில் வழங்க வேண்டும். இதனால் சாகுபடியில் போதிய விளைச்சல் கிடைக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார். 

    • அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.
    • இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு திரு மணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரகாசுக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப் படுகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அங்கு பிரகாஷ் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த நிலையில் பிரகா சின் மனைவி அந்தியூர் போலீசில் என் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் விசா ரணை நடத்தினர். இதை தொடர்ந்து பிரகாசின் உடலை பிரேத பரி சோதனைக்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது பிரகாசின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது மது போதையில் இறந்தாரா என தெரிய வரும் என கூறினர்.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்கெ்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×