search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாடு"

    மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. #NGT #WesternGhats
    புதுடெல்லி:

    மேற்கு தொடர்ச்சி மலையில், குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான வரைவு அறிவிக்கையை மேற்கண்ட 6 மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, வரைவு அறிவிக்கை காலாவதி ஆனதால், மீண்டும் வெளியிட அனுமதி கேட்டு, பசுமை தீர்ப்பாயத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணுகியது. அதை விசாரித்த நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, ‘மாநிலங்களின் தாமதம், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவாது’ என்று கண்டனம் தெரிவித்தது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என்று தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. #NGT #WesternGhats
    பாகிஸ்தான் நாட்டில் அதிபர், பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பய்ணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. #PakistanCabinet #Bansfirstclassairtravel
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். #PakistanCabinet #Bansfirstclassairtravel
    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    ×