search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாதி"

    நடிகை சுவாதிக்கும், அவரது காதலரான விமானி விகாசுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று சுவாதி கூறியுள்ளார். #SwathiReddy #SwathiMarriage
    சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமானிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 30-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நேற்று நடந்தது. இதில் சுவாதியுடன் பணிபுரிந்த முக்கிய கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி சுவாதி கூறுகையில் ‘15 நாட்களுக்கு முன்புதான் திருமண அழைப் பிதழ் தர தொடங்கினேன். மீடியாவை அழைத்து பகிரங்கமாக சொல்லலாம் என்று காத்திருந்தேன். ஆனால் அதற்குள் வி‌ஷயம் வெளியில் கசிந்துவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம்’ என்றார். #SwathiReddy #SwathiMarriage

    சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமான பயணியுடன் திருமணம் நடந்து முடிந்தது. #SwathiReddy #SwathiMarriage
    தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.

    தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

    இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. 



    இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த வியாழனன்று ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருக்கிறது.

    விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருக்கிறார். #SwathiReddy #SwathiMarriage

    சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமான பயணியுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. #SwathiMarriage
    தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.

    தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

    இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. 



    இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் வருகிற 30-ந்தேதி ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2-ந் தேதி கொச்சியில் நடத்துகின்றனர். விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது. #SwathiMarriage

    சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 10வது வருடத்தை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் சசிகுமாருக்கு நடிகர் ஜெய் நன்றி சொல்லியிருக்கிறார். #10yearsofsubramaniyapuram
    2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்று 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் ரசிகர்கள் இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகுமார் சுப்ரமணியபுரம் போன்ற படத்தைக் கொடுத்து இன்றுடன் 10 வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போது நீங்கள் நடிகராகி விட்டீர்கள். சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இப்படம் தான் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க தனக்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.



    தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய், ‘சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து அழகர் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய ரசிகர்கள் என்னை நடிகராக நிலைக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை. இயக்குனர் சசிகுமாருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி. எப்பவும் ரசிகர்கள் பாராட்டும் படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ×