search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வாதிகாரி"

    டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியிட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி ஒழுக்கமாக வாழச் சொல்பவரை சர்வாதிகாரி என்பதாக குறிப்பிட்டார். #Modi
    புதுடெல்லி:

    இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தனது முதலாம் ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த வெங்கையா நாயுடு தனது முக்கிய அனுபவங்களை குறிப்பிட்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

    டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த நூலினை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவின் பேச்சாற்றல், முற்போக்கு சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெகுவாக பாராட்டினார்.


    பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர் அனைத்தையும் திறம்பட நிர்வகித்த பாங்கினை புகழ்ந்து பேசிய மோடி, மாணவப் பருவத்தில் 10 ஆண்டுகள் மற்றும் ஆந்திர மாநிலம், தேசிய அரசியலில் 40 ஆண்டுகள் என தொடர்ந்து 50 ஆண்டுகளாக வெங்கையா நாயுடு பொதுவாழ்வில் இருந்து வருகிறார்.

    வாஜ்பாயின் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி பதவியை அவர் விரும்பிப்பெற்று அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருந்ததாக குறிப்பிட்டார்.

    எல்லா நிலையிலும் அவர் ஒழுக்கத்தை பேணி வந்துள்ளார். ஆனால், நாடு தற்போதுள்ள நிலையில் ஒழுக்கம் என்பதை ஜனநாயக விரோதம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு கூறுபவர்களை சர்வாதிகாரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரு புதிய அகராதி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். #disciplineisbrandedautocratic #Modi
    சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள், சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad

    கோவை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.

    மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.

    கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?

    பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.

    இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

    கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?


    பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad 

    ×