என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வாதிகாரி"
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தனது முதலாம் ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த வெங்கையா நாயுடு தனது முக்கிய அனுபவங்களை குறிப்பிட்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
வாஜ்பாயின் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி பதவியை அவர் விரும்பிப்பெற்று அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருந்ததாக குறிப்பிட்டார்.
எல்லா நிலையிலும் அவர் ஒழுக்கத்தை பேணி வந்துள்ளார். ஆனால், நாடு தற்போதுள்ள நிலையில் ஒழுக்கம் என்பதை ஜனநாயக விரோதம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு கூறுபவர்களை சர்வாதிகாரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரு புதிய அகராதி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். #disciplineisbrandedautocratic #Modi
கோவை:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.
மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.
கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?
பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.
இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.
கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?
பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்