என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 177044"
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
மாவு தயாரிக்க:
மைதா - 2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஸ்டஃப் செய்ய:
டார்க் சாக்லேட் - 1 கப்
உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம் - 1/2 கப்
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
டார்க் சாக்லேட்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.
சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும். அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.
- கேரளாவில் மிகவும் பிரபலம் சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி.
- கேரளாவில் அனைத்து பண்டிகை, திருமணங்களுக்கும் இது அவசியம்.
தேவையான பொருட்கள் :
பெரிய வாழைக்காய் - 4
வெல்லம் / வெல்லத்தூள் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சீரகம் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயைத் தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலர விடவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.
பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்க வைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும் .
பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும்.
ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரைத் தூவலாம்.
இப்போது சர்க்கரை வரட்டி ரெடி.
- தேங்காய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது.
- தேங்காய்ப்பாலில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
தேங்காய் - 1 பெரியது
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
முந்தரி பருப்பு - 10 கிராம்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 கப்
செய்முறை :
பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும்.
ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து ஊற்ற வேண்டும்.
தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிளற வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய வேண்டும் தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நல்ல கிளறி விடவும்.
கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும்.
கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும்.
இப்போது சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா ரெடி!
- குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று பிஸ்தா பர்ஃபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/2 டம்ளர்
நெய் - 1/4 டம்ளர்
நீர் - 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.
- சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று தினை அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தினை - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்
தண்ணீர் - 4 1/2 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர் (பொடித்தது)
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்
முந்திரி பருப்பு - 6-8
செய்முறை
தினை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கவும்.
பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், தினை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம்.
முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
தினை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும்.
தேவைப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
இப்போது சூப்பரான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.
- வாழைப்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று வாழைப்பழத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 8
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 5
முந்திரி - 5
சோள மாவு - 5 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்..
வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும்.
இடை இடையே நெய் சேர்க்கவும்.
அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்து பாதாம், முந்திரியை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!.
- இந்த ரெசிபி 10 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்,
தண்ணீர்- ¼ கப்,
ஏலம், சுக்குப் பொடி தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தான் சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.
- இது வட இந்தியாவில் அதிகமாக சுவைக்கப்படும் இனிப்பு ஆகும்.
- இதில் வைட்டமின் ஈ, புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 கிராம்
காய்ச்சிய பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 6 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.
பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.
பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
இப்போது பாதாம் ஷிரோ தயார்.
அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூத் தூவி பரிமாறவும்.
- பாயாசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன.
- இன்று நட்ஸ் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 20 கிராம்
திராட்சை மற்றும் பேரீச்சை - 20 கிராம்
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/4 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை :
பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக விட வேண்டும்.
சேமியாக வெந்ததும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதில் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.
- இதை தயாரிப்பதும் மிகவும் எளிது.
- இதை செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றிதான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம். இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த 'ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
1. ஸ்ட்ராபெர்ரி
2. பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
3. பிரெஷ் கிரீம்
செய்முறை :
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். 'ஜாம்' மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான 'டாஸ்க்' என்பதை மறந்துவிடாதீர்கள்.
- சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி மாவு - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,
சுக்குத்தூள் - 2 சிட்டிகை,
முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,
நெய் - 100 கிராம்.
செய்முறை
தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.
சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.
கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.
இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.
- கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
கேரட் - 3
பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
பால் - அரை கப்
பாதாம் பருப்பு - 8
சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
* கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.
* பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
* வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
* இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.
* தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.
* சுவையான கேரட் கீர் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்