search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177592"

    • மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றிவிட்டு, புதிய உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை உழவர் சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை கண்டித்து பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் பரவியது.

    இதையொட்டி அங்கு முன் எச்சரிக்கையாக ஊட்டி துணை சூப்பிரண்டுகள் செந்தில் குமார், யசோதா ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் உள்பட 50 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் தலைவர், செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, வியாபாரிகள் பாதிக்காத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் மன்ற கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் முடியும் வரை அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினர்கள் கூறும்போது, உழவர் சந்தைக்கு இடம் வழங்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இதை ஏற்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர் போராட்டம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புதிய உழவர் சந்தை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தாலுகா சங்கம், மாவட்ட, மாநில சங்கங்களின் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    இந்த பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதியில் உள்ள தங்களது பூர்வீக கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதால், அதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே கோத்தர் இன மக்களும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    குமாரபாளையம்:

    ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு வீட்டில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான சிலைகள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பெரிய சிலைகள் வாங்கி வைத்தும் விற்பனை செய்ய முடியாமல் சிலை வியாபாரிகள் தவித்தனர்.

    இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒரு மாதம் முன்பே சிலை வியாபாரம் தொடங்க வேண்டிய நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் விழாவிற்கு தடை விதித்து விட்டால் எப்படி சிலைகள் விற்பனை செய்வது? மற்றும் எந்த நம்பிக்கையில் சிலைகளை வாங்கி வைக்க முடியும்? என்று புரியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிலை வியாபாரிகள் கூறியதாவது:-

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்களில் பெரிய அளவிலான சிலைகள் செய்து விற்பதும் வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்தால் என்ன செய்வது என்பதால் பெரிய அளவிலான சிலைகள் செய்வதா? வேண்டாமா? என விடை தெரியாமல் உள்ளோம்.

    விநாயகர் சிலைகளை வாங்கி விற்கும் எங்களைப்போன்ற வியாபாரிகள் விநாயகர் ஊர்வல விழாவிற்கு தடை விதித்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அரசு சரியான முடிவினை சொன்னால் சிலை உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.
    • பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர்சந்தையும் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை தென்னம்பாளையம் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.இந்தநிலையில் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே திருப்பூர் பல்லடம் சாலையில் பழ வியாபாரிகள் சிலர் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி வரை சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என தென்னம்பாளையம் மார்க்கெட் -உழவர்சந்தை வியாபாரிகள், விவசாயிகள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.

    இந்தநிலையில் கடைகளை அகற்றியதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், தென்னம்பாளையம் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென சாலையோர பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    மேலும் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் பழங்களை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு வியாபாரிகள் மறியலை கைவிட்டனர். 

    • ஆண்டு விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.மெஞ்ஞானபுரம் வியா பாரிகள் சங்கசெயலாளர் செல்வின் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மேலாளர் குட்வின்ராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் காசிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது எனவும், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு செல்வார்கள்.அவ்வாறின்றி கடைகளை மாநகராட்சி அகற்றினால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    பொருளாளர் பெரிய சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • காந்தி தினசரி மார்க்கெட் கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும் என்று வைகுண்டராஜன் கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த இடத்தில் அரசு அலுவலகங்கள் அமைய உள்ளது.

    மார்க்கெட் இடமாற்றம்

    எனவே அங்குள்ள கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    தகனமேடை உள்ளதால் அந்த இடத்தில் வியாபாரம் செய்வதற்கு இடையூறாக இருக்கும். போதுமான அளவுக்கு வியாபாரம் நடைபெறாது என கூறி அந்த இடத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

    மேலும் அதற்கு பதிலாக தகுந்த உரிய இடம் தேர்வு செய்து புதிய இடம் கட்டி தரும் வரை பழைய இடத்திலிருந்து வியாபாரம் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.

    தகுந்த இடம்

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் வைகுண்டராஜன் திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் வியாபாரம் செய்வற்கு இடையூறாக இருக்கும்.சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும்.

    தற்போது மார்க்கெட்டில் 216 கடைகளுக்கு ரசீது போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சார்பில் 140 கடைகள் மட்டும் கட்டுவதாக தெரிகிறது.

    எனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பான இடத்தில் கடைகள் கட்டி தந்தால் மட்டுமே இங்கு இருக்கும் வியாபாரிகள் அந்த இடத்திற்கு செல்வார்கள்.அதுவரை இதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் திருப்பதி, தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார், நிர்வாகி சோடா ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது.
    • கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் விற்பனைக்குழு, விளம்பரம் மற்றும் பிரசாரம் கண்காணிப்பாளர் சித்தார்த்தன் தலைமையிலும், தஞ்சாவூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி, மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது. கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.3 கோடி ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.9,719/- குறைந்தபட்ச விலை ரூ.8,149/- சராசரி மதிப்பு ரூ.9,000/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீசார்கள் செய்திருந்தனர்.

    • மக்கும் குப்பையான மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், கரும்புச்சக்கைகளால் தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • வியாபாரிகள் மக்குகின்ற குப்பைகளை பயன்படுத்தினால் மட்டும்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள கோட்ட உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், திருவெறும்பூர் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த உதவி ஆணையர்கள் தலைமையில் காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட், சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

    மேலும் மக்காத குப்பையான பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு வழங்காதீர்கள் என்று அறிவுரை வழங்கியதோடு, மக்கும் குப்பையான மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், கரும்புச்சக்கைகளால் தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து இதுபோல விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். வியாபாரிகள் மக்குகின்ற குப்பைகளை பயன்படுத்தினால் மட்டும்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அதனால்தான் இத்தகைய பைகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறோம்.

    மக்காச்சோளம் மற்றும் கரும்பு சக்கைகளால் தயாரிக்கப்படும் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினால் அது மக்கும் குப்பைகளாக மாறிவிடும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. மேலும் சுகாதாரமான வாழ்க்கையை நாம் வாழலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் திரண்டனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் வியா–ழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களி–லிருந்தும், மாடுகள் அதிக–ளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் தமிழகம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். மேலும், இதில், இன்று நடை–பெற்ற சந்தை நாளின்போது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக வழக்கத்தை–விட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது. வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், மாடுகளை வாங்க வியா–பாரிகள் அதிகம் வந்தி–ருந்தனர். மேலும், தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு முன்புள்ள உப்பு குளம் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்ராமையன் உள்ளிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தீsன்தயாள் அந்தியோதயா போஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார முகமை நகர்ப்புற திட்ட த்தில் 31 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள், 14 பூ விற்பனை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு எதிரே அமைந்துள்ள உப்பு குளம் நீர்நிலை மேம்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    பின்பு நகரமன்ற தலைவர் புகழேந்தி ்நகராட்சிக்கு முன்பு உள்ள உப்பு குளம் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணியில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும், சாலையோர வியாபாரிகள் 31 பேருக்கு விரைவில் வண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.
    • பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும்.

    ஊட்டி:

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர்(பொறுப்பு) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், மார்க்கெட் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை புதிய உழவர் சந்தை அமைப்பதற்காக வேளாண் வணிக துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மன்ற உறுப்பினர்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.

    மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இருந்து பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    பின்னர் 15-வது வார்டு உறுப்பினர் கணபதி பேசும்போது, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு கருவூலம் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சியின் முறையான அனுமதியை பெறாமல் பொது நடைபாதைக்கு நடுவே தனியார் மூலம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றார்.

    இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நுழைவு வாயிலை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவு, செலவு கணக்கு மேலும் கோத்தகிரி நகருக்கு குடிநீரை வினியோகம் செய்யும் ஈளாடா தடுப்பணையில் இருந்து கோத்தகிரி சக்தி மலைப்பகுதிக்கு குடிநீர் குழாய்கள் அமைப்பது, அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் மின்மோட்டார்கள் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதாவதை தடுக்கும் வகையில் புதிய மின் மாற்றி அமைப்பது, கோத்தகிரி கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையை ரூ.1 கோடி செலவில் புதுப்பிப்பது, பொதுப்பணித்துறையால் அரசு குடியிருப்பு கட்ட சக்திமலையில் 16 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த மாத வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யபட்டது. முடிவில் பேரூராட்சி அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் துவங்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சங்கம் சார்பில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள சங்க வளாகத்தில் விவசாய குழுக்கள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு சந்தை என்ற பெயரில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் செயல்படுகின்றன.அதன் பின்னர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை சங்க பிரதிநிதிகள் காலை 9 மணி வரை விற்பனை செய்வர். அதன் தொகை, உற்பத்தியாளர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இதில் காய்கறி வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கூட்டுறவு சந்தை முறையை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    ×