என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மநபர்"
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பிரமு (வயது 45). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு காற்றிற்காக வீட்டின் முன் அறையில் வெளிகதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அங்கு வந்த மர்மநபர் தூங்கி கொண்டிருந்த பிரமுவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை அறுத்து கொண்டு செல்ல முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பிரமு சத்தம் போடுவதற்குள் மர்மநபர் செயினுடன் தப்பி ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மர்மநபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி பஜனை மடத்து தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 43). இவர், வீடு கட்டுமானத்துக்கு தேவையான ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு கவுரிசங்கர் தனக்கு சொந்தமான காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். இன்று காலை பார்த்த போது, காரை காணாமல் கவுரிசங்கர் திடுக்கிட்டார். காரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. காரின் மதிப்பு ரூ. 4 லட்சமாகும்.
இதுகுறித்து கவுரிசங்கர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து காரை திருடி சென்ற மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்