search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க"

    • அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.

    அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது
    • தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த வீடியோவில், எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கமல் கூறியுள்ளார்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அண்ணா சிலைக்கு தி.மு.க- அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயலாளர் பால் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலா ளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன், முரளி வினோத், ராஜசேகர், அரவிந்த் முருகன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

    அழகர்கோவில் கோட்டைவாசல் முன்புள்ள அண்ணா சிலைக்கு பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன்.

    மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் துணைச் செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, அ.வலையபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, அய்யாபட்டி நயினான், சென்னகரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட வக்கில்கள் பிரிவு தலைவர் முனிராஜ், நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, அவை தலைவர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து. நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், ராமகிருஷ்ணன், மாரியப்பன், கண்ணன், மதன் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்

     கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சில்லாரஅள்ளி மற்றும் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்குமேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்

    இந்த நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி சித்தார்த்தன், பேரூராட்சி தலைவர் மணி, வக்கீல் முனிராஜ் , நகர செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஜலபதி, பச்சியப்பன், அன்பரசு, மலர்க்கொடி மாரிமுத்து, தங்கராஜ், ஆதாம், சுகுணா ஆறுமுகம்,கார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் நகர தி.மு.க சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வி.பி. தெரு கலைஞர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் நகர கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்தரின், செல்வம், காளிதாஸ் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா, குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், சாந்தா, முருகேஷ், ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிசாமி, மணிகண்டன், சார்லி, காட்டேரி செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், கலீம், முரசொலி வெங்கடேஷ், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜெகநாதன், கோபி, ராபர்ட், குமரேசன், நாகராஜ், சுசீலா, வசந்தி, பாக்யவதி, சித்ரா, செல்வி, காவேரி, செல்வி, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், குன்னூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன், உளிக்கள் பேரூராட்சி தலைவர் ராதா, கிளை செயலாளர்கள் ரஹீம் சண்முகம், ஜாகீர், சிக்கந்தர், சண்முகம், தொரை, சுந்தர், மூர்த்தி, கர்ணன், அப்துல் காதர் மற்றும் கழக நிர்வாகிகள் பிருந்தா, லியாகத் அலி, கோபு, அபி, ரவி, மூர்த்தி, வினோத், கிப்சன், ரிஸ்வான், உட்பட கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர துணைச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் அடித்துச் சேதப்படுத்தி உள்ளனர்.
    • திமுக அமைச்சரை குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் இன்று அடித்துச் சேதப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில், திமுக அமைச்சரை குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும்போது, அமைச்சர் கீதா ஜீவன், தனது தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது என்று எச்சரிக்கை விடுத்து பேசியதால் திமுக-வினர் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    திருத்துறைப்பூண்டி:

    சொத்து வரி, மின்கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட துணை செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

    வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் , தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, நகர செயலாளர் சண்முகசுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுரேந்தர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி முன்னாள்செயலாளர்அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய அவைத்தலைவர் பாலதண்டாயுதம், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • மங்கலம் தி.மு.க.வினருக்கு திராவிட மாடல் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மங்கலம் கிளை இளைஞர்அணி அமைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    மங்கலம் :

    மங்கலத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி சார்பில் தி.மு.க. கட்சியின் முன்னாள் மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம் தலைமையில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர்அணி திலக்செல்வராஜ் , தி.மு.க. மூத்த நிர்வாகி தம்பணன், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர்பேட்டை சலீம்,மங்கலம் ரபிதீன், முன்னிலையில் மங்கலம் தி.மு.க.வினருக்கு திராவிட மாடல் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர்கள் சிராஜ்தீன்,ஜீனைத், மங்கலம் கிளை இளைஞர்அணி அமைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    ஒன்றிய நிர்வாகிகள் அப்துல்பாரி, சர்புதீன், சிவசாமி, சுல்தான்பேட்டை கோபால்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாதுரை , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தாஹாநசிர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளான ஹக்கீம்,பாருக், மற்றும் மங்கலம் தி.மு.க.வை சேர்ந்த ஷேக்முஜிபுர்ரகுமான், ஆர்பி.நகர்.முகமுதுசாலி ,நூர்முகமது,முகமுதுஜக்கிரியா,முபாரக்ராஜா,முருகசாமி,பழக்கடைசலீம்,இந்தியன்நகர் சலீம்,தண்டபாணி,மணிகண்டன்,சுல்தான்பேட்டை கிட்டான்,பாசித்,அஸ்கர்,உம்மத்,பழக்கடை சுல்தான் ,நீலி செல்வம்மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மங்கலம் தி.மு.க.வினருக்கு தீபாவளி பரிசும் வழங்கப்பட்டது.

    • பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    ஊட்டி

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைக்கிணங்க, ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, செல்வராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், எல்.பி.எப் ஜெயராமன், மார்கெட் ரவி, ராமன், தியாகு, ஜெகதீஷ், மத்தீன், குண்டன், குரூஸ், மாதன், சங்கர், இலியாஸ், பொன்சிசெல்வம், ராஜம்மா, ராஜ்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், இந்த விழாவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்பது குறித்தும் ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளரும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், பேரூர் சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் மலர்மன்னன், குமார், ஜெயந்தி, காந்தி, திருக்குமரன், ஜெயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • 15-வது பொது தேர்தல் விழுப்புரத்தில் விருப்ப மனுக்களை தி.மு.க.வினர் வழங்கினர்.
    • ஒன்றியங்களில் போட்டியிடும் விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    தி.மு.க. 15-வது பொதுத்தேர்தல் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு இன்று கலைஞர் அறிவாலயத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை பெறப்படும் என விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில்முன்னாள் மதுரை மேயரும், தலைமைகழக பிரதிநிதி தேர்தல் ஆணையாளர் குழந்தைவேல் கலந்துகொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட த்தில் உள்ள வானூர் கிழக்கு ,வானூர் மேற்கு, கிளியனூர் கண்டமங்கலம் கிழக்கு, கண்டமங்கலம் மத்திய, கண்டமங்கலம் மேற்கு, விக்கிரவாண்டி கிழக்கு, விக்கிரவாண்டி மத்திய , விக்கிரவாண்டி மேற்கு, காணை வடக்கு, காணை மத்திய, காணை தெற்கு, கோலியனுர் கிழக்கு, கோலியனூர் மேற்கு, கோலியனூர் தெற்கு, முகையூர் வடக்கு, முகையூர் தெற்கு, மணம்பூண்டி, திருக்கோவிலூர் கிழக்கு, திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஆகிய ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ஒன்றியங்களில் போட்டியிடும் விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

    இதில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து மீண்டும் மனுக்களை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ெஜயசந்திரன், மாவட்ட பொருளாளர்ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன், மாநில விவசாய அணி அன்னியூர் சிவா ,ஒன்றிய செயலாளர்கள்கல்பட்டு ராஜா, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி,தங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×