search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டிறைச்சி"

    மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
    விஜய்புரா:

    கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
    சர்ச்சை கருத்துக்களால் தன்னை பிரபல படுத்த முயலும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா, தற்போது மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் உண்ட நேரு பண்டிதரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். #GyanDevAhuja #BJP
    ஜெய்ப்பூர்:

    சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.

    முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP
    மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #cowslaughter
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் அஞ்சர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். மற்றொருவர் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    இது குறித்து சட்னா மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஷ் ஹெங்கெர்கர் கூறியதாவது, அஞ்சர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருவர் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதாக வெள்ளி அன்று அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. அதைதொடர்ந்து, 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு விரைந்து அங்கு இறைச்சிக்காக மாட்டை வெட்டிய  இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதில், சிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷகில் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த மாட்டின் இறைச்சியை போலீசார் கைப்பற்றி இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பவன் சிங், விஜர் சிங், போல் சிங் மற்றும் நாரயண் சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க 400 போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cowslaughter
    ×