என் மலர்
நீங்கள் தேடியது "slug 180944"
- வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
- நமது சமுதாயத்தை சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முக்குலத்து சமுதாய இளைஞர்களே நம் முன்னோர்களின் விழாக்களான தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை, ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு வரும் இளைஞர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாடையும் பின்பற்ற வேண்டும்.
வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவது, பிற சமுதாய மக்களை பற்றி கோஷங்கள் எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
இது நம்மையும், நமது சமுதாயத்தையும் சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும். மாலை அணிந்து விரதம் இருந்து வணங்குங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
- பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
நாகர்கோவில்:
தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்து உற்சா கமாக கொண்டாடி வரு கிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செம்மாங் குடி ரோட்டில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்.
செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அதிகமாக காணப் பட்டதையடுத்து அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந் தது. போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீனாட்சிபுரம் வேப்பமூடு மணிமேடை கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடைவீதிகளில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. பட்டாசு கடைகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வாங்க குவிந்திருந்தனர்.பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளி பண்டிகை யொட்டி வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் குமரி மாவட்டத் திற்கு பஸ்களில் வந்தனர்.இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில்களிலும் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்கினார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முக்கிய சந்திப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வெறிநாய் பொதுமக்களை துரத்தி சென்று கடித்தது.
- இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.
தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி தொகுதிகளில் தெருநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, மாப்பிள்ளை சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய் ஒன்று துரத்திச்சென்று கடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
- நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் கஞ்சா ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
அப்போது காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கூறியதாவது:- தமிழக அரசு கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குட்கா புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கஞ்சா புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் கஞ்சா, புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வதில்லை. ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில் தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஆந்திராவில் மலைப்பகுதியில் இதை பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவிலில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனியாக ஒரு காவலர் நியமிக்கப்படும். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றச்சம்பவங்கள் பற்றி தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமின்றி வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம். வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலேயே வைத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால் நாங்கள் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.
நகர் மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் தங்களது வார்டுகளில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்தாலோ யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம். வீடு மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
- வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அமைந்துள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கா.வீ. பழனிச்சாமி தலைமை வகித்து இலவசமாக சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..மகிழ் வனம் செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாரப்பன், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், தனியார் நிறுவன தலைவர் செல்வராஜ், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, தாவரவியல் நிபுணர் மாணிக்கம், பூங்கா பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் மருத்துவர் கிரிஷ் அசோகன் தனது பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மகிழ் வனம் பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்தார்.
- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.
16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு பஸ் நிறுத்த பகுதியில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் குலோத்துங்கன், பொன்.ராஜேந்திரன், கார் சேரி கணேசன், வாசு, இளைஞரணி மாநில துணை செயலாளர் பாரி, ஒன்றிய குழு உறுப்பினர் மாயி,பகுதி செயலாளர் செந்தில், சரவணன்,முருகேசன், துணைச் செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நாகரத்தினம், பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலா, வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவனியாபுரம்
அ.தி.மு.க.51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் ஜி.ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
இதில் ஸ்ரீராம் ரங்கராஜ், ராஜாமணி, ரவி, காளிதாஸ், மார்க்கெட் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மாரியப்பன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, அருண்குமார், முனிபாலன், தனபாண்டி, ஜெயபாண்டி, சுந்தர், குமார், குபேந்திரன், முத்தையா, பிரபு, கண்ணன், அருண்பாண்டி, சாத்தன உடையார், பத்ரி முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார் அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வ ரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கன அடி வரை திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப் பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 x 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362 264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.
- புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்
- தீபாவளியையொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.
தீபாவளி பண்டி கைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிக மாக காணப்பட்டது.நாகர்கோவில், செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
குடும்பத்தோடு ஏராள மானோர் புத்தாடை எடுக்க வந்திருந்தனர்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபாவளியை யொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு கடைகளிலும் பட்டாசு வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மார்த்தாண்டம், இரணியல், குளச்சல், அஞ்சு கிராமம், தக்கலை உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கடைவீதிகள் களை கட்டி இருந்தன.
கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி னார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடைவீதிகளில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
- தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
- இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு இந்த குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார விளைவுகளை ஏற்படுத்தி வந்ததால் அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்பாய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த நிலையில் நீதிமன்றம் குப்பை கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பின் படி கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் கிடங்கு அமைப்பது என்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதையரிந்த 10,20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் ஒப்பந்ததாரர் அருள்லட்சுமி நிறுவனத்தினர் பணியை தொடக்க பூமி பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நகராட்சிக்கு உட்பட்ட 10,20-வது வார்டு கிழக்குப்பாவடி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறோம்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப துணை சுகாதார மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதனை ஒட்டி விவசாய மற்றும் வேளாண் தோட்டக்கலை அலுவலகமும், தனியார் ஜவுளி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தும் வருகின்றனர்.
இதற்கும் மேலாக இந்த குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஒட்டி எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய குறுக்குபட்டி ஏரி அமைந்துள்ளது.இந்த இடத்தில் கிடங்கு அமைவதால் ஏரி நீர்நிலை, கிணற்று நீர், ஆழ்துளை நீர் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்ய வேண்டும் இல்லை யேல் அடுத்தகட்ட போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதனை தொடந்து அனைத்து பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் சென்று தங்களது கோரிக் கையை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை :
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.
இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சூரங்குடி பகுதி யில் சம்பகுளம் உள் ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை யிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.
இக்குளத்திலிருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீரானது சம்பகுளம் சானல் வழியாக சுற்று வட்டாரப் பகுதிகளான ஈத்தாமொழி, புதூர், மேல கிருஷ்ணன் புதூர், நைனாபுதூர், புத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன டைந்து வருகின்றன. மேலும் இச்சானலின் மூலம் வருகின்ற தண்ணீரினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் அனந்த னார் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டி ருக்கின்ற நிலை யில் சம்பகுளம் முழு கொள்ளவை எட்டிய நிலை யிலும், கடந்த 1 மாத கால மாக சம்பகுளம் சானலில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இச்சானலின் வருகின்ற தண்ணீர் மூலம் பயனடைந்து வந்த நெற் பயிர் மற்றும் தென்னை விவசாயம் செய்த விவசாயி கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி யுள்ளனர். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மையும் அதிக ரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே விவசாயிகளின் நலன் கருதியும் பொது மக்களின் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கும் விதத்தி லும் முழு கொள்ளளவை எட்டியுள்ள சம்ப குளத்திலிருந்து, சம்பகுளம் சானல் வழியாக உடனே தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.
- வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது கொளத்துப்பாளையம். இந்த பேரூராட்சிக்கு உட்பட்டது ஆலம்பாளையம், சாவடித்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் சாவடித் தோட்டத்தில் சென்னாக்கல் வலசை சேர்ந்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக உள்ள குடோன்களை வாடகைக்கு் எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று மக்காச்சோள வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.
ஆனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள மக்கா ச்சோளத்தை எந்தவித பராமரிப்பு இன்றியும் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இருப்பு வைக்கப்படும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து அல்லது பூச்சிகளை ஒழிக்கும் மாத்திரைகளை வைத்து தார்பாய் போட்டு மூடி வைப்பது வழக்கம். ஆனால் இந்த கிடங்கில் அதுபோன்று எதுவும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்காச்சோள மூட்டைகளில் இருந்து உருவான கோடிக்கணக்காக வண்டுகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கின்றன. வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இந்த பகுதி கிராம மக்களை தூங்கவிடாமல் கடித்து துன்புறுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கு கை கால் அலர்ஜி ஏற்படுவது உடன் மாதவிடாய் பிரச்சனை, வயிற்று கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும். அதேபோன்று ஆண்களை இந்த பூச்சி வண்டு கடித்ததனால் நாக்கில் வறட்டு தன்மை ஏற்படுவது உடன் கை கால்கள் சிவந்து தோள்கள் மந்தமாகி அரிப்பு தன்மை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திடிரென்று வண்டுகள் பதுங்கியிருக்கும் குடோனை 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்காச்சோளம் மூட்டைகளும் வேறு இடத்திற்கு மாற்று இடத்துக்கு எடுத்து செல்வதாகவும் இதுபோன்று பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் மக்காசோள விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.