search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்னாவிஸ்"

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு மும்பையில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
    மும்பை :

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். மும்பையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதில் மாநிலத்தில் உள்ள கோதாவரி, பஞ்சகங்கா மற்றும் சந்திரபாகா உள்ளிட்ட 14 ஆறுகளில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கூறியதாவது:-

    நாட்டை நேசிப்பதற்கான பாதையை வாஜ்பாய் காட்டியுள்ளார். நாம் அவரை தலைவணங்கி அவர் வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும். அவர் தன் சித்தாந்தங்களை வாய்வழியாக மட்டுமே சொல்லவில்லை. அதன்படி வாழ்ந்து காட்டினார்.

    அவர் இந்த நாட்டிற்கு தான் முதலில் முன்னுரிமை அளித்தார். அடுத்ததாக கட்சிக்கு, கடைசியில் தான் அவர் தன்னை பற்றி சிந்தித்தார். வாஜ்பாய் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. ஆனால் மனித வளர்ச்சி தேவையானவற்றை அவர் அறிந்திருந்தார். அவர் சமூக நீதியை வலியுறுத்தினார்.

    அவருக்காக மும்பையில் மராட்டிய அரசு நினைவு சின்னம் அமைக்கும். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #Dhulelynching #suspicionofchildlifters
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு வெளியூரை சேர்ந்த சில புதிய நபர்கள்நேற்று பேருந்தில் வந்திறங்கினர்.

    அவர்களில் ஒருவர், பேருந்து நிறுத்ததில் இருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் புதிய நபர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். #Dhulelynching #suspicionofchildlifters
    பிரதமர் மோடியை கொல்ல சதி நடப்பதாக கூறி பா.ஜ.க. அனுதாபம் தேடுவதாக சரத் பவார் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.

    அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். #ModiAssassinationPlot  #FadnavisCriticisedPawar
    ×